Followers

Thursday 4 January 2024

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் மறைமுகப்போர்?

ஈரான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக நிகராளிப் போர் (Proxy war - அதாவது மூன்றாம் தரப்பினர் மூலமாகச் செய்யும் தாக்க்குதல்) செய்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பு, யேமனில் செயற்படும் அன்சர் அல்லா அமிப்பு உட்பட பல இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு பணம், பயிற்ச்சி படைக்கலன் போன்றவற்றை ஈரான் வழங்குகின்றது எனவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டுகின்றன. இந்த அமைப்புக்களின் உருவாக்கத்தில் இருந்து வளர்ச்சி வரை கடுமையாக உழைத்தவர் ஈரானின் முன்னாள் தளபதி காசிம் சுலைமான்.

சுலைமானி நினைவுநாளில் படுகொலை

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிரான இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களை ஈரானியப் படைத்தளபதி காசிம் சுலைமானி நெறிப்படுத்துகின்றார் என்பதால் ஈராக்கிற்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்த வேளை அங்கு வைத்து அமெரிக்க ஆளிலி விமானம் மூலமாக குண்டுகளை விச்சி அவர் 2020 ஜனவரியில் கொல்லப்பட்டார். 2024 ஜனவரி மூன்றாம் திகதி அவரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருக்கும் வேளையில் இரண்டு குண்டுகள் வெடித்து நூற்றிற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பல நூறு மக்கள் காயப்பட்டனர்.

ஹிஸ்புல்லா தளபதி படுகொலை

2023-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக காசா நிலப்பரப்பில் குண்டுகளை வீசுவதை நிறுத்திவிட்டு தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீது துல்லியத் தாக்குதல்களைச் செய்யும்படி அறிவுறுத்தியிருந்தது. அதன் பின்னர் பெருமளவு இஸ்ரேலியப் படையினர் காசா நிலப்பரப்பில் இருந்து வெளியேறினர். அத்துடன் லெபனானில் இருந்து செயற்படும் ஈரானியா ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் பலஸ்த்தீன மேற்குக் கரைக்குப் பொறுப்பான தளபதியும் ஹிஸ்புல்லாவிற்கும் ஈரானுக்குமான தொடர்பாளராக கடமையாற்றுபவருமான சலே அல் அரூரி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேலிய ஆளிலி மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.

ஈரானிற்கு எதிராக பலுச் இனமக்களா?

2023 டிசம்பர் 17-ம் திகதி ஈரானின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ராஸ்க் நகரத்தின் காவல் துறையின் தலமையகம் மீது பலூச் இன போராளிகள் தாக்குதல் நடத்தினர். பலுச் இன மக்கள் பாக்கிஸ்த்தான், ஆப்கானிஸ்த்தான், ஈரான் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு அந்த மூன்று நாடுகளிலும் இருக்கின்றது. பலுச் மக்கள் வாழும் பாக்கிஸ்த்தானிய நிலப்பரப்பில் சீனா-பாக்கிஸ்த்தான் பொருளாதாரப் பதையின் முக்கிய பகுதி அமைந்துள்ளது. சீனாவின் முத்துமாலைத் திட்ட துறைமுகமான குவாடர் பலுச் மக்கள் வாழும் பலுஸ்சிஸ்த்தான் மாகணத்தில் உள்ளது. உலக அரசியல் போட்டியில் பலுச் மக்கள் வாழும் பகுதி முக்கியமானதாகும்.

2023 ஒக்டோபர் 7-ம் திகதி ஈரானிய ஆதரவு பெற்ற கமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபின்னர் பலுச் விடுதலைப் போராளிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு எதிராக பலுச் போராளிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தோ அல்லது இணைந்தோ பாவிக்கத் தொடங்கிவிட்டார்களா என்ற ஐயம் எழுந்துள்ளது.  ஏற்கனவே இஸ்ரேல் ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொல்லுதல் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகளில் தாக்குதல் செய்தல், இணையவெளித்தாக்குதல் எனப் பல பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்துள்ளது. அது ஈரானுக்கு எதிராகச் செய்யும் முதலாவது நிகராளிப் போர் இதுவா?


சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்கள் பற்றி அறிய கீழே சொடுக்கவும்:


No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...