Followers

Wednesday 20 December 2023

அமெரிக்கப் பொறியில் இந்தியா அகப்பட்டதா?

 

 















2024 ஜனவரி 26-ம் திகதி நடக்கவுள்ள இந்தியக் குடியரசு நாள் விழாவில் ஜோ பைடன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. அத்துடன் மறுநாள் 27-ம் திகதி இந்தியாவில் நடக்கவுள்ள கோட் (QUAD) என்னும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளைக் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடும் இந்தியாவில் நடக்கவிருந்தது. ஜோ பைடன் ஜனவரி 2024இல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள மாட்டார் என இப்போது எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியக் குடியரசு நாள் விழாவிற்கான புதிய முதன்மை விருந்தினரை சில வாரங்களுக்குள் தேடிப் பிடிக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு உள்ளது. இந்தியத் தலைமை அமைச்சர் மோடி குடியரசு நாள் விழாவில் தன்னை ஓர் உலகம் மதிக்கும் உன்னதமானவராக காட்ட முடியாமல் போய்விடுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான அமெரிக்க உறவில் பிணக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. 

அமெரிக்க நீதித்துறையின் குற்றப்பத்திரிகையில் இந்தியா!

சீக்கிய விடுதலைச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான குர்பத்வந்த் சிங் பன்னுன் என்னும் அமெரிக்க குடிமகளை கொல்வதற்கு அமெரிக்காவில் செய்த முயற்ச்சியானது கனடா, வான்கூவரில் ஹர்திப் சிங் நிஜாரைக் கொன்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதி ஆகும் என அமெரிக்க நீதித்துறையின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் குற்றப் பத்திரிகையில் நிக்கில் குப்தா என்னும் இந்தியக் குடிமகனும் பெயர் குறிப்பிடாத ஓர் இந்திய அரச ஊழியரும் குர்பத்வந்த் சிங் பன்னுன்னைக் கொல்வதற்கு ஓர் அடியாளை அமர்த்தினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒளிக்க இடமில்லாமல் தலையாரி வீட்டில் ஒளித்த கதை

பாவம் குப்தா! பன்னுன்னைக் கொல்வதற்கு அவருக்கு ஓர் அடியாள் தேவைப்பட்டது. அந்த அடியாளைத் தேடிப்பிடிக்க ஒரு தரகரும் தேவைப்பட்டது. அவருக்கு அகப்பட்டது தரகர் அல்ல தரகர் போல் நடித்த அமெரிக்க உளவாளி. அந்தத் தரகர் ஏற்பாடு செய்த அடியாளும் அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்தவர். அதனால் நிக்கில் குப்தா மாட்டிக் கொண்டார். கொலைக்கான கூலி ஒரு இலட்சம் டொலர், முற்பணம் பத்தாயிரம் டொலர். 2024 ஜூன் 9-ம் திகதி வழங்கப்பட்டது. ஆனால் குப்தா எப்படியோ செக் குடியரசுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அதனால் அவரை நாடுகடத்தும் வேண்டுகோள் செக் குடியரசுக்கு விடுக்கப்பட்டதால் அவர் செக் குடியரசில் Prague விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது (ஜூன் 30-ம் திகதி) கைது செய்யப்பட்டார். அவரை ஒரு SUV வண்டியில் வைத்து மூன்று மணித்தியாலங்கள் விசாரணை செய்தனர். அவர் மீதான ஆட் கொணர்வு மனுவை அவரது குடும்பத்தினர் இந்திய நீதி மன்றத்தில் கொடுத்தனர். அது தங்களது நியாய ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது என்ற இந்திய நீதிமன்றம் மனுவை ஜனவர் 4-ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனது. நிக்கில் குப்தா இதை எழுதும் போது செக் குடியரசுச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

கனாடாவில் கொலை மற்றும் அமெரிக்காவில் கொலை முயற்ச்சி ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் தனது தொடர்பை இந்தியா மறுத்துள்ளதுடன் அவை தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பதாகச் சொல்கின்றது. இந்தியாவிற்கு தொடர்பில்லை என்று விட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே? இந்தியா தான் செய்யாத செயலுக்கு ஏன் விசாரணைக்கு ஒத்துக் கொள்கின்றது? அதற்கான விடை ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் தெரியும்.

அரசுறவு கொலை முயற்ச்சியை மறைக்குமா?

சீனாவிற்கு எதிரான கூட்டணி அமைப்பதில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் இருப்பதால் அமெரிக்கா தம்மை மதித்து நடக்க வேண்டும் என இந்திய ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள். அதனால் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைக்க மாட்டாது என இந்தியா நினைத்திருந்தது போலிருக்கின்றது. அமெரிக்கா தனது நீதித் துறை தனது கடமையைச் சரியாகச் செய்யும் என விட்டுவிட்டது. அமெரிக்காவில் சீக்கிய விடுதலைச் செயற்பாட்டாளர் குர்பத்வந்த் சிங் பன்னுமை கொல்ல நடந்த முயற்ச்சி தொடர்பாக இந்தியா விசாரிப்பதாகச் சொன்னது காலத்தை இழுத்தடித்து அதைப் புதைக்கவா என அமெரிக்க மனித உரிமைச் செயற்ப்பாட்டாளர்கள் ஐயப்படுகின்றனர்.

கனடாமீது சீறிய ஜெய்ஷங்கர் அமெரிக்காவிற்கு அடக்கம்

கனடா ஹர்திப் சிங் நிஜார் கொலை தொடர்பான குற்றச் சாட்டை முன்வைத்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரின் பதில் கடுமையானதாக இருந்தது. அக்குற்றச் சாட்டு அபத்தமானது உள்நோக்கம் கொண்டது என்றார் ஜெய்ஷங்கர். கனடா தீவிரவாதிகளின் புகலிடம் என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் குற்றச் சாட்டில் அவர் கடுமையான பதில் கொடுக்கவில்லை. கனடாவிற்கு எதிரான ஜெய்ஷங்கரின் கருத்து அமெரிக்காவை விசனமடைய வைத்திருக்கலாம்.

கனடாவோ அமெரிக்காவோ யோக்கியமான நாடுகளல்ல

1985இல் ரொறென்ரோவில் இருந்து இந்தியா சென்ற Air India விமானம் அயர்லாந்துக் கரையில் குண்டு வெடிப்பில் சிதறி அதில் பயணித்த 329 பேரும் கொல்லப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பாக கனடா நடந்து கொண்ட விதம் ஐயத்திற்கு இடமானது. அமெரிக்கா நீதிக்குப் புறம்பான வகையில் தான் பயங்கரவாதிகள் எனக் கருதும் பல்லாயிரக் கணக்கானவர்களை ஆளில்லா விமானங்களில் இருந்து குண்டுகளை வீசிக் கொன்றுள்ளது.

சதிக்கோட்பாடு

உக்ரேன் போரின் பின்னர் அமெரிக்கா இரசியாமீது விடுத்த பொருளாதாரக் கட்டுப்பாடுகளை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. சினாவிற்கு எதிரான கூட்டணியில் இணைய இந்தியா அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பின்னணியில் அமெரிக்கா வெளிநாடுகளில் வாழும் சீக்கிய விடுதலைப் போராளிகள் பற்றிய இந்திய உளவுத்துறையின் நகர்வுகணை வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றதா? அதில் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் நோக்கில் நிக்கில் குப்தா எடுத்த முயற்ச்சிகளில் தனது உளவுத்துறையை புகுத்தி அவர்களையே அடியாளாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

பன்னுன் என்னும் பயங்கரவாதி



இந்தியா மீது பொருளாதாரத் தடை வருமா?

ஆ ஊ என்றால் பொருளாதாரத் தடைகளை மற்ற நாடுகளில் விதிக்கும் அமெரிக்கா தன்னாட்டில் வைத்து தனது குடிமகனை அந்நிய நாடு ஒன்று கொல்ல எடுத்த முயற்ச்சிக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகின்றது? அமெரிக்கா உலகில் தனது ஆதிக்கத்தை பேணுவதற்கு “மனித உரிமை மீறல்”, “பன்னாட்டு நியம மீறல்” ஆகியவற்றை படைக்கலன்களாகப் பயன்படுத்துகின்றது.



Thursday 14 December 2023

உலக அரசியலில் அயோக்கித்தனத்தைப் புகுத்திய கிஸ்ஸிங்கர்

 


உயர்ந்த கல்விமானாக இருந்து வெற்றீகரமான அரசுறவியலாளராக (இராசதந்திரியாக) மாறிய ஹென்றி கிஸ்ஸிங்கர் உலக அரசியலில் அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய நியதியாக்கியவர். 2023 நவம்பர் 29-ம் திகதி அவர் காலமானார். அவர் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க உலக அரங்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்ட மக்களாட்சியின் விழுமியங்களை காலின் கீழ்ப்போட்டு மிதிக்கத் தயங்காதவர். இவரின் உலக அரசியல் சிந்தனையின் வழிவந்தவர்களால் தான் தமிழ் ஈழத்தில் மூன்று இலட்சம் உயிர்களைப் பலியெடுக்கப்பட்டன. இவருக்குப் பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையிலும் வெளியுறவுத்துறையிலும் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் அவரது மாணக்கர்கள், அவருக்கு கீழ் பணிபுரிந்தவரகள், அல்லது அந்த இருதரப்பினரின் வழிவந்தவர்கள் ஆகும்.

ஜேன்மனியில் பிறந்த யூதர்

1923-ம் ஆண்டு ஜேர்மனியின் ஃபேர்த் நகரில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூத குடும்பத்தில் பிறந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் அங்கு நிலவிய அடக்குமுறைக்குத் தப்பி அமெரிக்கா நியூயோர்க் நகரில் குடியேறி அங்கு முன்னணிப் பல்கலைக்கழகத்த்தில் கற்றுத்தேர்ந்து அமெரிக்கப்படையில் இணைந்து மொழிபெயர்ப்பாளராகவும் உளவாளியாகவும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போரின் போது செயற்பட்டார். 1947இல் மீளவும் அமெரிக்கா சென்று மேற்படிப்பை மேற்கொண்டு ஹாவார்ட் பலகலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுத்துறையில் 1957இல் இருந்து பேராசிரியராகவும் பணியாற்றினார். அமெரிக்கர்கள் ஒழுக்கவாதத்தை ஒதுக்கிவிட்டு நடைமுறைக்கு ஏற்ப செயலாற்ற வேண்டும் என்பது அவரது போதனை. அவரது கொடூரமான கொள்கைகளை வெறுத்த பல மாணவர்கள் அவரை விட்டு வெளியேறினர்.

அரசியல் உரையாற்றுவதற்கும் நூல்கள் எழுதுவதற்கும் கட்டணமாகப் பெரும் தொகை பெறுபவர் கிஸ்ஸிங்கர் அவரது ஒரு நூலுக்கான் முற்பணமாக ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர் கிஸ்ஸிங்கள் ஜோன் எஃப் கென்னடியின் ஆட்சிக்கு பகுதி நேர ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் ரிச்சர்ட் நிக்ஸனின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மாற்றியவர்

1901 முதல் 1905 வரை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்கா ஒரு நல்ல அயல்நாடாக இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர். அவருக்குப் பின்னர் 1914 முதல் 1921 வரை அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த வூட்ரு வில்சன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை உயர்குறிக்கோள், அறம், ஆகியவற்றின் அடிப்படையில் மக்களாட்சியை பரப்பும் வகையில் வரையறை செய்யப்பட வேண்டும் என்றார். இந்த கொள்கைகளை மாற்றி அயோக்கியத்தனமான வெளியுறவுக் கொள்கைகளை யதார்த்தவாதம் என்னும் பெயரில் முன்னெடுத்தவர் ஹென்றி கிஸ்ஸிங்கர். அவரது கொள்கை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பலநாடுகளில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அவை மாறுவதறகன அறிகுறிகள் ஏதும் இல்லை.

கறுப்பின மக்களை வெறுத்த கிஸ்ஸிங்கர்

கிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலராகப் பணியாற்றிய போது நைஜீரியாவிற்கான அமெரிக்க தூதுவராகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆபிரிக்க அலுவர்களுக்கான துணைச் செயலராகவும் இருந்த Donald Easum கிஸ்ஸிங்கர் ஆபிரிக்க நாடுகளின் தூதுவர்களையும் பிரதிநிதிகளையும் மதிப்பதில்லை என்றும் ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றும் எழுதியுள்ளார். தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பின மக்களின் ஆட்சி அமைவதை கிஸ்ஸிங்கர் விரும்பவில்லை. அதற்காக பல சதி நடவடிக்கைகள் செய்தார்.

வியட்நாம் இனக்கொலை சிலி ஆட்சி மாற்றம்

கண்மூடித்தனமான Carpet Bombingஐ வியட்னாமில் மேலும் தீவிரப்படுத்தும் படி ரிச்சர்ட் நிக்சனுக்கு ஒரு புறம் ஆலோசனை வழங்கிவிட்டு மறுபுறம் அமைதிப்புறா போல் தோற்றத்தை மாற்றி வியட்னாமியர்களுடம் பேச்சு வார்த்தை நடத்தி பல அமெரிக்க உயிரழப்புக்களைக் கொடுத்த வியட்னாம் போரை நிறுத்தினார். கம்போடியா தரைமட்டமாகியதற்கும் கிஸ்ஸிங்கரே காரணமாகும். சிலியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகவுடமைவாதி சல்வடோர் அலெண்டேயை ஆட்சியில் இருந்து அகற்றியவர். ஹென்றி கிஸ்ஸிங்கர். பொதுவுடமைவாதம், சமூகவுடமைவாதம் போன்றவற்றைப் பின்பற்றுபவர்கள் எந்த ஒரு நாட்டிலும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அமெரிக்காவின் கொள்கையை கொடூரமான முறையில் முன்னெடுத்தவர் கிஸ்ஸிங்கர்.

வங்க இனக்கொலை

பங்களாதேசத்தில் இனக்கொலை செய்த பாக்கிஸ்த்தான் சர்வாதிகாரி ஏ. எம் யஹியா கானின் ஆட்சிக்கு எல்லாவகையிலும் உதவியர் ஹென்றி கிஸ்ஸிங்கர். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாடு என்பதற்காக பாக்கிஸ்த்தானிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் கிஸ்சிங்கர். இந்திரா காந்தியை பெட்டை நாய் எனவும் இந்தியர்களை வேசிமகன்கள் எனவும் அழைத்தார் என்ற குற்றச்சாட்டு கிஸ்ஸிங்கர் மீது முன்வைக்கப்படுகின்றது.  பாக்கிஸ்த்தானில் ஆட்சியில் இருந்த மற்றும் இருக்கின்ற அயோக்கியர்களுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுக்கின்ற நாடாக இன்றும் இருப்பது அவரது சிந்தனைப் பள்ளியின் அடையாளமே. பாக்கிஸ்த்தானில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் 2023 ஓகஸ்ட்டில் சிறையிலடைக்கப்பட்டார்.

குர்திஷ் மக்களைக் கால்வாரியவர்

1970களில் ஈராக்கிய ஆட்சியாளர் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் தன் உறவை வளர்த்ததுடன் அங்கிருந்து பெருமளவு படைக்கலன்களையும் வாங்கினார். இதனால் சினமடைந்த கிஸ்ஸிங்கர் ஈராக்கில் வாழும் குர்திஷ் மக்களை சதாமிற்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டினார். ஆனால் 1979இல் ஈரானில் மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு மதவாதிள் ஆட்சியைக் கைப்பற்றிய போது ஈரானுக்கு எதிராக ஈரக்கின் சதாம் ஹுசேய்னை கிஸ்ஸிங்கர் தூண்டினார். அதற்காம சதாமின் வேண்டுகோளிற்கு இணங்க குர்திஷ் மக்களுக்கு உதவி செய்வதை அமெரிக்கா நிறுத்தியது. குர்திஷ் மக்களை கைவிடுவது சரியான செயல் அல்ல என கிஸ்ஸிங்கரின் உதவியாளர் சொன்னபோது அவரது பதில் நான் நடத்துவது மறைமுக அரசுறவியல் கிருத்துவ பரப்புரையகமல்ல (underground diplomacy not missionary) என்றார் கிஸ்ஸிங்கர். பின்னர் குர்திஷ் மக்கள் தடைசெய்யப்பட்ட படைகலன்களால் கொடூரமாக அழிக்கப்பட்டனர்.

கிஸ்ஸிங்கர் சூ என் லாய் சந்திப்பும் நோபல் பரிசும்

1971-ம் ஆண்டு கிஸ்ஸிங்கர் சீனத் தலைமை அமைச்சர் சூ என் லாயை தான் இரகசியமாகச் சந்தித்ததாக அறிவித்த போது அவரது பெயர் உலகப் புகழ் பெற்றது. அப்போது சோவியத் ஒன்றியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து கொண்டிருந்தது. சீனாமீது ஓர் அணுக்குண்டுப் போரைத் தொடுக்க சோவியத் ஒன்றியம் தயாராக வருகின்றது என்ற செய்தியை அடிப்படையாக வைத்து சீனா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் உறவை வளர்க்க முன்வந்தது. அமெரிக்காவுடன் கடும் போட்டியில் இருந்த சீனாவையும் சோவியத் ஒன்றையத்தையும் பிரித்து வைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை கிஸ்ஸிங்கர் பயன்படுத்தி அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை ஒன்று பாதுகாக்க ஷாங்காய் உரையாடல் என்னும் பெயரில் ஒப்புக்கொண்டன. 1972இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அல் ஜசீரா இணையத்தளத்தில் நோபல் பரிசு பெற்ற ஒரு போர்க்குற்றவாளி கிஸ்ஸிங்கர் என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை ஹின்றி கிஸ்ஸிங்கர் இறப்புச் செய்தி வெளிவந்தவுடன் பதியப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றையும் அவரது சிந்தனைப் பள்ளி மேற்குலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் அறியாதவர்களே ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் பரிகார நீதி பெற்றுத்தரும் என நம்புகின்றனர். 

ஹென்றி கிஸ்ஸிங்கர் பற்றிய முந்தையய கட்டுரையைக் காண இந்த இணைப்பைச் சொடுக்கவும்:

ஹென்றி கிஸ்ஸிங்கர்-100வது வயதைக் காணும் போர்க்குற்றவாளி

வல்லரசு நாடுகளின் ஆறாம் தலைமுறைப் போர்விமான உற்பத்தி பற்றி கிழ் உள்ள இணைப்பில் காணலாம். 

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...