Followers

Sunday 29 August 2021

தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

 


தலிபான்களின் ஆதரவில் அல் கெய்தா மீண்டும் தலையெடுக்குமா?

ஆப்கானிஸ்த்தானில் பல் வேறு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பத்தாயிரம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் ஹக்கானி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆறாயிரமும் ஐ.எஸ்-கே அமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரமும் அல் கெய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருநூறும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலிபான் அமைப்பினர் அல் கெய்தாவுடன் நல்லுறவை வைத்திருக்கின்றனர். ஹக்கானி அமைப்பினர் தலிபான்களுடனும் ஐ.எஸ் கே அமைப்பினருடனும் நல்லுறவை வைத்திருக்கின்றனர். தலிபான்கள்லும் பார்க்க ஹக்கானை அமைப்பினர் காபூல் நகரை கையாள்வதில் வல்லவர்கள். இதனால் தலிபான்கள் தமது நட்பு அமைப்பான ஹக்கானி அமைப்பினரிடம் காபூல் நகரப் பாதுகாப்பை ஒப்படைத்திருந்தனர். இதனால்தான் ஹக்கானி அமைப்புடன் நட்புடைய ஐ.எஸ்-கே அமைப்பினரால் காபூல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் செய்து 16 அமெரிக்கர்கள் உட்பட பலரைக் கொல்ல முடிந்தது.

அமெரிக்காவின் தெரிவிக்கப்படும் அச்சம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மக்கோல் “நாம் 9/11இற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றோம் – ஆப்கானிஸ்த்தான் மீண்டும் பயங்கரவாத உற்பத்தி நிலம்” என்றார். அமெரிக்கப் படைத்தளபதி அல் கெய்தாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் வலையமைப்புக்களை ஆப்கானிஸ்த்தானில் துரிதமாக மீளக் கட்டியெழுப்பலாம் என எச்சரித்துள்ளார். அமெரிக்காவும் தலிபான்களும் கட்டார் தலைநகர் டோஹாவில் நடத்திய பேச்சு வார்த்தையில் அல் கெய்தா போன்ற அமெரிக்கா விரும்பாத திவிரவாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கோ அல்லது செயற்பாட்டிற்கோ தலிபான்கள் ஆப்கானிஸ்த்தானில் இடம் கொடுக்க மாட்டார்கள் என்ற உறுதி மொழி வழங்கியிருந்தனர்.

பஞ்சீர் தலையிடி

காபூலில் இருந்து வட கிழக்காக 150கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மரகத கல் நிறைய உள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில் வட கூட்டமைப்பு என்னும் போராளி அமைப்பு திரண்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் துணை அதிபர் அமருல்லா சாலெ  கூட அங்கு போயிருக்கின்றார். தலிபான் தாக்குதலின் போது தப்பி ஓடிய ஆயிரக் கணக்கன அரச படையினரும் அங்கு தப்பி ஓடியுள்ளனர். இவர்களின் பெரும்பாலானவர்கள் தஜிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தஜிக்கிஸ்த்தான் நாடு ஆதரவு வழங்கலாம். தலிபான்களால் கொல்லப்பட்ட முன்னாள் வட கூட்டமைப்பின் தளபதியின் மகனான அஹமது மசூத்தும் பஞ்சீர் பள்ளத்தாக்கில் இருக்கின்றார். இவர்களுக்கு வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தலிபான்களை எதிர்க்கும் குழுக்களுக்கு படைக்கலன்களை அனுப்பவில்லை என்கிறது தஜிக்ஸ்தான் நாடு. அது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கின்றது.

தலிபான்களைப் பாராட்டிய அல் கெய்தா ஆதரவு ஊடகம்

தலிபான்களின் வெற்றி உலகெங்கும் உள்ள பல இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. இந்தியா வைத்திருக்கும் கஷ்மீர் பிரதேசத்தில் உள்ள திவிரவாத அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்த்தானில் நடந்தது உங்களுக்கும் நடக்கும் என இந்தியாவைப் பார்த்து சொல்கின்றன. இந்தியா வசம் இருக்கும் கஷ்மீர் பிரதேசதைப் பிரித்து பாக்கிஸ்த்தானுடன் இணைக்க வேண்டும் என்ற கொள்கையுடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பு தமக்கு தலிபான்கள் உதவி வழங்க வேண்டும் என பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது.  தலிபானின் வெற்றிக்கு அல் கெய்தா தனது ஊடகத்தில் பாராட்டு தெரிவித்தது. “ஆப்கான் வெற்றி கொள்ளப்பட்டுவிட்டது, இது இஸ்லாமின் வெற்றி” என்றது அல் கெய்தா.

அல் கெய்தா – தலிபான் வேறுபாடு

அல் கெய்தா அமைப்பு அமெரிக்காவை அழித்த பின்னர்தான் ஓர் இஸ்லாமிய அரசை அமைக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசை அமைத்த பின்னர் அமெரிக்காவை அழிக்கலாம் எனக் கருதியது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்த்தானில் இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டும் என்ற கருத்துடையது. அது வெளிநாடுகளில் தாக்குதல் செய்வதில்லை. தலிபான் அமைப்பு பஸ்ருன் இனத்துக்கு உரியது என்ற கருத்து நிலவுகின்றது. அல் கெய்தா இனங்களுக்கு அப்பாற்பட்ட கொள்கையுடையது. அல் கெய்தா சியா மற்றும் சுனி என்ற பிளவையே விரும்புவதில்லை. ஆப்கானிஸ்த்தானில் 14 ஏற்றுக் கொள்ளப்பட்ட இனக்குழுமங்கள் உள்ளன. ஆப்கானிஸ்த்தானில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு பஸ்ருன் இனத்தவர் வாழ்கின்றனர் என மதிப்பிடப்படுள்ளது. ஆப்கானிஸ்த்தானின் வட பகுதியிலும் தென் மேற்குப் பகுதியிலும் பஸ்ருன் இனக்குழுமத்தினர் இல்லை எனச் சொல்லுமளவிற்கு குறைந்த அளவில் வாழ்கின்றனர். தஜிக் இனக்குழும மக்கள் 25விழுக்காட்டினர் உள்ளனர். உஸ்பெக் இனக்குழுமத்தினர் 9 விழுக்காட்டினர் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்த்தான் நிலப்பரப்பின் நூறு விழுக்காடும் தலிபான்கள் தற்போது தலிபானக்ளின் கட்டுப்பாட்டில் இல்லை. பல நிலப்பரப்புக்கள் உள்ளூர் போர்ப்பிரப்புக்கள் கட்டுப்பாடிலும் பல நிலப்பரப்புக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் உள்ளன. 2001-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்பு இருந்ததிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பு ஆப்கானிஸ்த்தானில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத நிலையில் இருக்கின்றது. அல் கெய்த தேவை ஏற்படும் போதெல்லாம் புதிய பெயரில் புதிய அமைப்புக்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில் ஆப்கானிஸ்த்தானில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில் அல் கெய்தா வேறு புதிய பெயரில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். அது அமெரிக்காவிற்கு டோஹா நகரில் தலிபான்கள் வழங்கிய உறுதி மொழிக்கு முரணானதல்ல என தலிபான்கள் வாதிடலாம்.

தலிபான்களின் வலி தனி வலி

தலிபான் தனது பொருளாதாரத்திலும் உலக நாடுகள் தம் அரசை அங்கீகரிப்பதிலும் உடனடிக் கவனம் செலுத்தும். இவற்றை நிறைவேற்றுவது தலிபானகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். அல் கெய்தாவிற்கு ஆதரவு வழங்குவது இந்த இரண்டு முயற்ச்சிகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பஸ்ருன் அல்லாத இனக் குழுமங்களின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலையிலும் தலிபான் இருக்கின்றது. பிரித்தானியா ஆப்கானிஸ்த்தானிற்கு 1919இல் சுதந்திரம் வழங்கிய போது பஸ்ருன் இன மக்கள் பெரும்பான்மையினராக வாழும் நிலப்பரப்பை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை ஆப்கானிஸ்த்தானுடன் இணைத்தது. மற்றப் பகுதியை அப்போது தான் ஆண்டு கொண்டிருந்த தற்போது பாக்கிஸ்த்தானாக இருக்கும் நிலப்பரப்புடன் சேர்த்து வைத்தது. இதே வகையில் தான் குர்திஷ் மக்கள் வாழும் பிரதேசத்தையும் துருக்கி, சிரியா, ஈராக் போன்ற நாடுகளுடன் இணைத்தது. எதிர் காலத்தில் பல்வேறு இனக்குழுமங்கள் தமக்குள் மோதிக் கொள்ளக் கூடிய வகையில் தனது குடியேற்ற ஆட்சிப் பிரதேசங்களை பிரித்தானியா நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டது. தலிபான் போராளிகளில் பலர் பாக்கிஸ்த்தானில் பஸ்ருன் இன மக்கள் வாழும் பிரதேசம் ஆப்கானிஸ்த்தானுடன் இணைக்கப்படவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். தலிபான் தலைமைக்கு இப்போது பாக்கிஸ்த்தானின் உறவு அவசியம் என்ற நிலையில் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்த்தான் எல்லையை மாற்றியமைக்க விரும்பும் தலிபான்களை சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருக்கும். அந்த நிலையில் இன்னொரு தீவிரவாத அமைப்பை மீள்கட்டி எழுப்புவதில் தலிபான் தலைமை கவனம் செலுத்த முடியாது. அவை மட்டுமல்ல தொழில்நெறிஞர்கள் (Professionals) பலர் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனால் தமது அரசை முகாமை செய்வதில் தலிபான்கள் நெருக்கடியை எதிர் நோக்கலாம்.

குறைந்த அளவிலான அல் கெய்தா

அல் கெய்தாவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் இருபது ஆண்டு கால நெருங்கிய உறவு உண்டு. அல் கெய்தா அமைப்பினர் தலிபான் அமைப்புக்குள் ஊடுருவியும் உள்ளனர் என நம்பப்படுகின்றது. அமெரிக்க உளவுத் துறையும் வெளியுறவுத் துறையும் “ஆப்பாக்” கொள்கை என ஒன்றை வகுத்திருந்தன. அது ஆப்கானிஸ்த்தானையும் பாக்கிஸ்த்தானையும் ஒரு பிரதேசமாகக் கருதி வகுக்கப்பட்டவை. தலிபானின் வெற்றி மற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கு தூண்டுதலாக அமையும். அல் கெய்தாவின் தலைவர்கள் பலர் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தா போராளிகள் இருநூறு பேர் இருக்கலாம என மதிப்பிடப்பட்டுள்ளது. அல் கெய்தாவிற்கு என்று ஓர் உலகளாவிய தலைவர் என்று சொல்லும்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நாடுகளுக்கு என்றே தலைவர்கள் இருக்கின்றார்கள். ஐ எஸ் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு அல் கெய்தாவின் எதிரியாகவே செயற்படுகின்றது. ஆபிரிக்காவின் சஹாராவடி நிலப்பரப்பில் செயற்படும் பொக்கோ ஹரம், அல் ஷஹாப் போன்ற அமைப்புக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அல் கெய்தாவின் கிளை அமைப்பான அரபுக் குடாநாட்டிற்கான அல் கெய்தா யேமனில் முடங்கிப் போயுள்ளது. மேற்கு நாடுகளினதும் இஸ்ரேலினதும் உளவுத் துறையினர் அல் கெய்தாவை தொடர்ந்து கண்காணிதுக் கொண்டிருக்கும் நிலையில் அக் கெய்தாவால் தலையெடுக்க முடியாது.

Thursday 26 August 2021

ஆப்கானிஸ்த்தானுக்கு மாற்றாக திருகோணமலையா?

 



அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் வைத்திருந்த “படைத்தளத்திற்கு” மாற்றீடாக இலங்கை திருகோணமலயில் இடம் தேடுகின்றது என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா தனது கேந்திரோபாய நோக்கங்களுக்காகவும் தனது உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் உலகெங்கும் படைத்தளங்களை தனது நட்பு நாடுகளிலும் தனது ஆதிக்கத்தில் உள்ள நாடுகளிலும் வைத்திருக்கின்றது. அதே காரணங்களுக்காக உலகில் பல போர் முனைகளையும் தொடர்ச்சியாக திறந்து கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் இருபது ஆண்டுகள் நிலை கொண்டமைக்கு காரணம்:

1. அங்குள்ள தனக்கு ஆபத்தான தீவிரவாத அமைப்புக்களை ஒழிப்பது

2. அங்கு தனது படையினருக்கு ஒரு போர்ப்பயிற்ச்சிக் களத்தை உருவாக்குவது.

3. அங்குள்ள கனிம வளங்களைச் சுரண்டுவது

ஆக ஆப்கானிஸ்த்தான் அமெரிக்காவிற்கு ஒரு போர்க்களமாகவும் போர்ப்பயிற்ச்சிக் களமாகவும் பொருளாதார நலன்களுக்காகவும் பாவிக்கப் பட்டது. இருபது ஆண்டுகளில் சுழற்ச்சி முறையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கப் படையினருக்கு நேரடிப் போர்ப்பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மிக கடினமான பூகோள அமைப்பைக் கொண்ட நிலப்பரப்பில் பயிற்ச்சி பெற்றுள்ளனர் அமெரிக்கப் படையினர்.

ஆப்கானிஸ்த்தான் பேரரசுகளின் புதைகுழி என ஒரு புறம் அழைக்கப்பட்டாலும் மறுபுறம் அது வளங்களின் தொட்டில் எனவும் அழைக்கப்படுகின்றது. ஒன்று முதல் மூன்றுவரையிலான ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்கள் அங்கு உள்ளன. ஒரு புறம் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கப் படைகள் போர் புரிந்து கொண்டிருக்க மறுபுறம் அமெரிக்க நிறுவனங்கள் அங்குள்ள கனிம வளங்களை வரியின்றி தடையின்றி அகழ்ந்து எடுத்துக் கொண்டன.

ஒரு நாடு இன்னொரு நாட்டில் படைத்தளம் அமைத்து ஒரு எதிரி நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முயலும் போது படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள நாட்டில் படைத்தளம் அமைக்கும் நாட்டிற்கு கடும் எதிர்ப்பு இருக்கக் கூடாது. அமெரிக்கா பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் அமைத்தது போல் ஆப்கானிஸ்த்தானில் அமைக்க முடியாது. அமைக்கவும் கூடாது.

இலங்கை திருகோணமலையில் பல ஏக்கர் நிலம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதை சிங்களத்து அரிச்சந்திரன் கெஹலிய ரம்புக்வெல மறுத்தும் உள்ளார். இலங்கையில் 1980களில் அமெரிக்காவிற்கு திருக்கோணமலையில் ஒரு எரிபொருள் மீள் நிரப்பு நிலையமும் சிலாபத்தில் நீர்மூழ்கிகளுக்கான அதிதாழ் அலைவரிசை (Ultra-Low wave) தொடர்பாடல் நிலையமும் தேவைப்பட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி அத்தேவையை இல்லாமற் செய்துள்ளது. அமெரிக்கா நீண்ட காலம் கடலில் பயணிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் கடற்கலன்களை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

1990களில் தொடர்ச்சியாக கடலில் பயணிக்கும் தம் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலையம் இலங்கியின் கிழக்கு கரையோரத்தில் தேவைப்பட்டது.

தற்போது அமெரிக்காவின் விமானம் தாங்கிகளையும் அதன் பரிவாரக் கப்பல்களையும் பாதுகாக்க அதிக அளவு ஆளில்லா விமாங்கள் தேவைப்படுகின்றன. விமானம் தாங்கி கப்பல்களில் மட்டுப்படுத்தப்பட்ட இடம் உள்ள படியால் அவை பயணிக்கும் கடற்பரப்பில் உள்ள நாடுகளில் அமெரிக்கா புதிதாக உலகெங்கும் பல ஆளில்லா போர்விமானத்தளங்களை பெற முயல்கின்றது. தற்போது அமெரிக்கா இலங்கையில் தனக்கு என ஒரு நிலப்பரப்பு வேண்டும் என்ற நிலையில் இருப்பது அதற்காக மட்டுமே. அதன் ஓர் அம்சமாக அமெரிக்கா திருக்கோணமலையில் கண் வைத்திருக்கலாம்.

திருக்கோணமலை ஆப்கானிஸ்த்தானிற்கான மாற்றீடு அல்ல.

Sunday 22 August 2021

சீனாவின் எண்மிய (டிஜிட்டல்) முன்னோக்கிப் பாய்ச்சல்

 


1994இல் மைக்குறோசொஃப்ற்றின் பில் கேட்ஸ் வங்கித்தொழில் அவசியம் ஆனால் வங்கிகள் அவசியமில்லை என்றார். இப்போது வங்கிகளுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணவைப்பீடு, பணம் மீளப்பெறல், பங்குகள் வாங்குதல் போன்ற பல நடவடிக்கைகளை கைப்பேசிகளில் உள்ள செயலிகள் மூலம் செய்ய முடியும். செயலிகள் மூலம் வங்கிகளில் எந்த நேரமும் வாடிக்கயாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பொருளாதார வளர்ச்சி, படைத்துறை வளர்ச்சி, போன்றவற்றிற்கு கணித் தொழில்நுட்பத்தின் பல்வேறுவகைகளிலும் முன்னேற வேண்டும் என்பதைச் சீனா உணர்ந்துள்ளது. சீனாவின் இணையவெளிப் பொருளாதாரம் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 4.4 விழுக்காடாகும். இது அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளினதிலும் பார்க்க அதிகமானதாகும். இந்தத் துறையை மேம்படுத்துவதன் மூலம் சீனா கைத்தொழில் உற்பத்தி துறையில் குன்றும் வளர்ச்சியை ஈடு செய்யலாம்.

கைப்பேசிச்செயலித் துறையில் முன்னோக்கிப் பாய்ந்த சீனா

மீகச்செயலி(SUPER APP) என்பது பல செயலிகள் செய்யக்கூடியவற்றைச் செய்யக் கூடிய ஒரே செயலி ஆகும். மீகச்செயலிகளை உருவாக்கி பயன்பாட்டில் விடுவதில் சீனா உலகில் முன்னணியில் இருக்கின்றது. சீனாவின் வீச்சற் (WeChat) என்னும் செயலிக்குச் சொந்தக்காரர்கள் முதலில் மீகச்செயலியை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து அலிப்பே என்னும் செயலி மூலம் பணக்கொடுப்பனவு செய்யும் நிறுவனம் வெற்றீகரமாக மீகச்செயலியை உருவாக்கிப் பயன்படுத்தியது. சீனாவைத் தொடர்ந்து பல ஆசிய நாடுகள் மீகச்செயலிகளை உருவாக்கியுள்ளன. மேற்கு நாட்டின் ஊபர் என்னும் வாடகைப் போக்கு வரத்து நிறுவனத்தின் செயலியிலும் பார்க்க மிகச் சிறந்த மீகச்செயலியை ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்படுவதால் மிகச்செயலிகள் ஊபர் நிறுவனத்தின் வர்த்தகத்தைத் தோல்வியடைய வைத்தன.

நிதித் தொழில்நுட்பத்தில் முன்னோக்கிப்பாய முயலும் சீனா

நிதிச்சேவைகள் (Financial Services) என்பது நிதித்துறையில் செயற்படும் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், பங்குச் சந்தை, வீடு விற்பனை முகவரகங்கள் போன்றவை வழங்கும் சேவைகளாகும். நிதிச் சேவைகள் துறைக்கு தேவையான மென்பொருள்களையும் வன்பொருள்களையும் வழங்குவது நிதித்தொழில்நுட்பம் (FinTech) என அழைக்கப்படுகின்றது. இத்துறையில் ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, சிங்கப்பூர், லித்துவேனியா, சுவிற்ச்சலாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஒஸ்ரேலியா, கனடா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் முதற்தரப் பத்து நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் சீனா அப்பட்டியலில் 21-ம் இடத்தில் இருக்கின்றது. 21-ம் இடத்தில் இருந்தாலும் சீனா கடந்த சில ஆண்டுகளாக நிதித்தொழில்நுட்பத் துறையில் முன்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. சீனப் பொருளாதாரத்தில் செய்யப்படும் கொடுப்பனவுகளில் 66விழுக்காடு கைப்பேசிச் செயலிகளூடாகச் செய்யப்படுகின்றன. சீனாவின் 1408மில்லியன் மக்களில் 780மில்லியன் மக்கள் கைப்பேசிச் செயலிகளூடாக தமது கொடுப்பனவுகளைச் செய்கின்றனர். சீனாவில் கைப்பேசிச் செயலிகளூடாகச் செய்யப்படும் கொடுப்பனவுகலின் பெறுமதி 52 ரில்லியன் டொலர்களாக இருக்கையில் அமெரிக்காவில் அது 98 மில்லியன்கள் மட்டுமே.

அகன்ற அலைவரிசையில் அதிகம் பாய்ந்த சீனா

தற்போது பல நாடுகளிலும் பாவிக்கப்படும் அகன்ற அலைவரிசையின் 4ஜீ (நான்காம் தலைமுறை) எனப்படுவது Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள் மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்ல தானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும் 5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப் பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றும். போக்குவரத்து, தொழிற்றுறை உற்பத்தி, வர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும் துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும். உதாரணத்திற்கு ஆளே இல்லாத கடையில் ஒருவர் போய் தனக்குத் தேவையான பொருட்களை எடுத்து வீடு வரலாம். அதற்குரிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அந்தக் கடைக்கு உரியவர் எடுத்துக் கொள்வார். உங்கள் முகத்தை வைத்தும் நீங்கள் வாங்கும் பொருளில் உள்ள இலத்திரனியல் குறியீடுகளை வைத்தும் இவை செய்யப்படும். 5ஜீ தொழில்நுட்பத்தில் முன்னோடியாகச் செயற்படும் நாடு உலகப் பொருளாதாரத்தில் முன்னோடியாகச் செயற்படும் என நம்பப்படுகின்றது. 5ஜீ தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹூவாவே நிறுவனம் உலகின் முன்னோடியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் அது தம் நாடுகளில் உளவு பார்க்கின்றது எனக் குற்றம் சாட்டி ஹூவாவே நிறுவனம் தம் நாடுகளில் செயற்படுவதைத் தடை செய்துள்ளன.

நாணயத்தை எண்மிய மயப்படுத்தும் சீனா

வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் அதிக அளவு நிதிக்கொடுப்பனவுகள் இணையவெளியூடாக நடைபெறுவதால் சீனா தனது தேசிய நாணயமான யூவானை எண்மிய மயப்படுத்தியுள்ளது. அமெரிக்கா பிரித்தானிய போன்ற நாடுகள் தமது நாணயங்களை எண்மியப்படுத்தும் திட்டத்தை வரைந்து கொண்டிருக்கையில் சீனா அதை வெற்றிகரமாக அறிமுகம் செய்துள்ளது. உலக அரங்கில் அமெரிக்க டொலரின் இடத்தை சீனாவின் யுவான் நாணயம் பிடிக்க வேண்டும் என்ற சீனக் கனவை நிறைவேற்றும் முதற்படியாக சீனாவின் எண்மிய நாணயம் அமையும் என சீன ஆட்சியாளர்கள் நம்புகின்றார்கள். சீனாவைப் பின்பற்றி மற்ற நாடுகளும், முக்கியமாக ஈரான், இரசியா போன்ற நாடுகள் தமது நாணயத்தை எண்மியப் படுத்தினால் அவை தமக்கிடையேயான கொடுப்பனவுகளை டொலர் மூலம் செய்வதை விட்டு எண்மிய நாணயங்களால் செய்ய முடியும்.

செயற்கை விவேகம்

சீனா தனது நாட்டில் கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தியதில் அதன் செயற்கை விவேகம் பெரும் பங்காற்றியது. முகமினங்காணல் தொழில்நுட்பத்தின் மூலம் சீனா நாட்டில் குற்றச் செயல்களையும் தீவிரவாதத்தையும் குறைக்க முயல்கின்றது. சீனாவில் 2.6மில்லியன் கண்காணிப்புக் ஒளிப்பதிவுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது உலகிலேயே அதிகமான எண்ணிக்கையாகும். உலகிலேயே அதிக அளவு மக்களைக் கொண்ட சீனாவில் அரசும் தனியார் துறையினரும் மிக அதிக அளவு தரவுகளைக் கையாளவேண்டிய சூழ்நிலை நிலவுகின்றது. இது செயற்கை விவேகம் மூலம் தரவுகளைக் கையாள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் செயற்கை விவேக மேம்பாட்டிற்கு சீனாவில் அதிக அளவு நிதி ஒதுக்கப்படுவதால் சீனாவில் செயற்கை விவேகம் வேகமாக முன்னேறி வருகின்றது.

எண்மியத் தொழில்நுட்பம் வளரும் வேகத்தில் எண்மிய குற்றச் செயல்களும் வளர்ந்து வருகின்றது. இதில் எல்லா நாடுகளும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே எண்மியத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மக்களுக்கு பயனுடையதாக அமையும்.

Saturday 21 August 2021

எஸ்-400 இருந்தால் F-35 தேவையில்லையா?

 


சிலர் இந்தியாவின் படைத்துறை வலிமையை மிகைப்படுத்தி காட்டும் காணொலிப் பதிவுகளைத் தொடர்ச்சியாக யூடியுப்பில் பதிவேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். தங்கள் பார்வையாளர்களை அதிகரித்து தம் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பாவம் அவர்களது பார்வையாளர்கள். கர்ணனிடம் அவன அழிக்க முடியாத கவச குண்டலங்கள் இருந்தன. அதனால் அவர் வில்வித்தை கற்கத் தவறவில்லை, பரசுராமரிடம் வில்வித்தை கற்று சாபம் வாங்கினாலும் அவர் கொடுத்த விஜய தனுசு என்ற வில் அவனிடம் இருந்தது அதனால் அவன் 17-ம் நாட்போரில் எதிரிகள் பலரைக் கொன்றான். சிவபெருமானுக்காக விஸ்வகர்மா வடிவமைத்த விஜய தனுசு என்ற வில்லை சிவன் முப்புரம் எரித்த பின்னர் இந்திரனிடம் கொடுத்தார். அதை இந்திரன் பரசுராமரிடம் கொடுத்தான். இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமை கவச குண்டலம் என்றால் F-35 விஜய தனுசைப் போன்றது.

ரஃபேல் F-35இலும் சிறந்ததா?

ஜெய் ஹிந்த் என்னும் வாசகத்துடன் தம் பதிவுகளை முடிக்கும் ஆரிய ஆதிக்கத்தின் வால்பிடிகள் F-35 இலும் பார்க்க ரஃபேல் சிறந்த விமானம் எனவும் காட்ட முயல்கின்றனர். படைத்துறையில் முன்னணியில் இருக்கும் எல்லாம் நாடுகளும் ஐந்தாம் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தையும் ஆறாம் தலைமுறைப் போர் விமானத்தையும் பெற தொடர்ச்சியாக முயன்று கொண்டிருக்கின்றன. ரஃபேல் நான்காம் தலைமுறைப் போர்விமானங்களில் ஒரு மேம்படுத்தப்பட்ட வகையைச் சார்ந்த விமானம். நான்காம் தலைமுறைப் போர்விமானங்களுக்கும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை பழைய விரல் வைத்து சுழற்றும் தொலைபேசிகளுக்கும் தற்போது உள்ள ஐ-போன்களுக்கும் இடையிலான வித்தியாசத்திற்கு ஈடானது. ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தில் உள்ள இலத்திரனியல் செயற்பாடுகள் அப்படிப்பட்டவை. முன்னணி போர்விமான உற்பத்தி நாடுகள் பல இணைந்து உருவாக்கப்பட்டது F-35. எந்த ஒரு நாட்டிலும் தங்கியிருக்காமல் தனக்குத் தேவையான படைக்கலன்களை தானே உற்பத்தி செய்யவேண்டும் என்ற கொள்கையுடைய பிரான்ஸ் உருவாக்கிய விமானம் ரஃபேல். F-35 போர் விமானங்களில் விரைவில் லேசர் படைக்கலன்களும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளும் இணைக்கப்படும். அதற்கான வாய்ப்பு ரஃபேலில் உள்ளனவா என்பது கேள்விக் குறி. F-35ஐ வடிவமைக்கும் போது எதிர்காலத்தில் உற்பத்தி செய்யக் கூடிய ஏவுகணைகளையும் பொருத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. F-22இல் கிடைத்த அனுபவத்தை வைத்தே அமெரிக்கா இந்த அம்சத்தை F-35இல் உள்ளடக்கியது. செய்மதிகளுடன் தொடர்பாடல்கள் வைத்துச் செயற்படக்கூடிய தன்மையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. F-35 விமானத்தைச் செலுத்த விமானியின் பங்களிப்பு மிகவும் குறைந்த அளவே தேவைப்படும் அளவிற்கு அதன் தானியங்கித் தன்மை உள்ளது. இதனால் அதை ஓட்டும் விமானி எதிரியின் நகர்வு, இலக்கு, தாக்குதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடியும். பார்க்க ரஃபேல் அதிக வேகமாகப் பறக்கக் கூடியது என்பது உண்மை. பொதுவாக F-35இலும் புலப்படாத்தன்மை (Stealth) கொண்ட விமானங்கள் மிக அதிக வேகமாகச் செல்வதில்லை. அதன் இயந்திரங்கள் அதற்கு ஏற்ப வடிவமைக்கப்படும். இயந்திர வேகம் அதிகரிக்கும் போது புலப்படாத்தன்மை இழக்கப்படும். உலகிலேயே ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றான சுவிற்சலாந்து போர் விமானங்கள் வாங்கும் முடிவை எடுக்கும் போது ரஃபேலா F-35ஆ என்ற கணிப்பில் F-35ஐயே தெரிவு செய்தது. இந்தியா ரஃபேல் விமானம் வாங்குவதாக எடுத்த முடிவில் ஊழல் இல்லை என ஆரிய வாற்பிடிகளால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

நாய்ச்சண்டையைச் செல்லுபடியற்றதாக்கிய F-35

F-35 நாய்ச் சண்டையை செல்லுபடியற்றதாக உருவாக்கப்பட்ட வானாதிக்க விமானம் ஆகும். போர் விமானங்களிடையே நடக்கும் Dog fight எனப்படும் நாய்ச்சண்டை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எதிரி விமானங்கள் குறுகிய தூரத்தில் நின்று ஒன்றை ஒன்று தாக்குவதாகும். F-35 வானாதிக்கம் (Air Dominance) மற்றும் வான்மேன்மை (Air superiority) போன்றவைக்கு உகந்தவையாக வடிவமைக்கப்பட்டவை. ஒரு விமானம் ஒரு குறித்த வான்பரப்பில் பறக்கும்போது அது மற்ற விமானங்களை அவ்வான்பரப்பில் பறக்க அனுமதிக்காது என்றால் அவ்விமானம் வானாதிக்க விமானமாகும். ஒரு குறித்த விமானம் எதிரியின் விமானங்களிலும் பார்க்க மேன்மயானதாக இருந்தால் அது வான்மேன்மை விமானமாகும். அதனால் F-35 விமானத்தை எதிரி விமானம் கண்டறிய முன்னரி F-35 எதிரி விமானங்களை கண்டறிந்துவிடும். அதனால் எதிரி விமானம் F-35ஐ அண்மிக்க முன்னர் அதை F-35ஐ அழித்துவிடும். அதனால் நாய்ச்சண்டைக்கு வாய்ப்பில்லை. குளவித் தாக்குதல் முறைமையில் F-35 விமானத்தை அணுகினால் அதன் பரிவாரங்களாக வரும் பல ஆளில்லா போர்விமானங்களால் குளவித் தாக்குதலுக்கு வரும் விமானங்கள் அழிக்கப்பட்டுவிடும். நிலைமை இப்படியிருக்க ஆரிய ஆதிக்க வாற்பிடிகள் நாய்ச்சண்டையில் ரஃபேல் F-35ஐ சுட்டு விழுத்திவிடும் எனத் தம்பட்டமடிக்கின்றனர்.

The F-35 has the most advanced sensor suite of any fighter in history, including the Active Electronically Scanned Array (AESA) radar, Distributed Aperture System (DAS), Electro Optical Targeting System (EOTS) and advanced electronic warfare capabilities to locate/track enemy forces, jam radars and disrupt attacks.

Sensor Suite

The F-35 has the most advanced sensor suite of any fighter in history, including the Active Electronically Scanned Array (AESA) radar, Distributed Aperture System (DAS), Electro Optical Targeting System (EOTS) and advanced electronic warfare capabilities to locate/track enemy forces, jam radars and disrupt attacks. The F-35 serves as an information and communications gateway, sharing its operational picture with the ground, sea and air assets.

Sensor Fusion

The F-35's advanced sensor fusion enables pilots to draw on information from all of their on-board sensors to create a single integrated picture of the battlefield that greatly enhances awareness and survivability.

 

F-35 செலவு மிக்கதா?

F-35 செலவு மிக்க விமானம் என்கின்றனர் சிலர். ஆனால் எதிரியைத் தோற்கடிக்க செலவுக்கான பயன்பாடு உடைய விமானம் என்கின்றனர் அதன் உற்பத்தியாளர்கள்.  As the most cost-effective solution for defeating our increasingly sophisticated adversaries, the F-35 will accomplish what would otherwise require a far greater number of less capable aircraft to achieve. F-35 ஐ உருவாக்கியவர்கள் தொடர்ச்சியாக அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் மூலம் அதன் வானாதிக்கத்தையும் வான்மேன்மையையும் பேண முடியும்.


ரஃபேலைக் குறைத்து மதிப்பிடக்கூடாது

பறப்பு நேரம், பறப்பு தூரம் போன்றவற்றில் F-35இலும் பார்க்க ரஃபேல் சிறந்தது. கடல் மட்டதில் இருந்து உயரமான தளங்களில் இருந்து பறப்பை மேற்கொள்ளக் கூடிய ரஃபேல் சீன எல்லையில் மிகவும் பயனுள்ளதாகும்

SPECTRA (Self-Protection Equipment to Counter Threats for RAFALE Aircraft) has been jointly developed by MBDA and Thales to provide an integrated self-protection system for the new Rafale combat aircraft now in service with the French Air Force and Navy. The SPECTRA integrated electronic warfare suite provides long-range detection, identification and accurate localisation of infrared, electromagnetic and laser threats. The system incorporates, radar warning, laser warning and missile warning receivers for threat detection plus a phased array radar jammer and a decoy dispenser for threat countering. ரஃபேலை உருவாக்க 46பில்லியன் யூரோ செலவிடப்பட்டது. F-35ஐ உருவாக்க 400பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது. சிலர் F-35ஐ உருவாக்க 1.6ரில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டது என்கின்றனர்.

இந்தியாவிற்கு ரஃபேல் போதாது.

இந்தியாவின் மிகப் பெரிய அச்சுறுத்தல் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளே. அதிலும் பெரிய அச்சுறுத்தலாக வரவிருப்பது. சீனா அந்த ஏவுகணைகளை அல்லது அதன் தொழில்நுட்பத்தை பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்வதாகும். அதனால் F-35இலும் பார்க்க மேம்பட்ட புலப்படாத் (Stealth) தன்மை கொண்ட விமானங்களும் லேசர் படைக்கலன்களும் இந்தியாவிற்கு அவசியமாகும். ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்தியாவிடமிருக்கும் எஸ்-400 விமான எதிப்பு ஏவுகணைகளால் அழிக்க முடியாது. பாக்கிஸ்த்தான் அல்லது இரசியாவுடன் ஒரு போர் என்றுவரும் போது இந்தியாவிடம் புலப்படாத் தன்மை கொண்ட விமானங்கள் மூலம் எதிரியின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை எதிரி நாட்டுக்குள் வைத்தே அழிக்க முடியும்.

பல ஊடகங்களில் படைக்கலன்களைப் பற்றி எழுதப்படும் கட்டுரைகளில் படைக்கல விற்பனையாளர்களினதும் அவர்களது முகவர்களதும் தாக்கம் இருக்கும். அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். சரியான தொழில்நுட்ப அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்ளுதல் அவசியம். “Rafale Jets won’t save Indian Air Force” என்னும் தலைப்பில் Foreign Policy என்ற அமெரிக்க சஞ்சிகையில் ஒரு கட்டுரை வந்தது. அதை ரஃபேலுக்கு போட்டியாக இந்தியாவிற்கு தமது விமானங்களை விற்பனை செய்ய முயன்று தோல்வியடைந்தவர்களின் குரலாகவே நான் பார்க்கின்றேன்.

மூன்றாம் தர Youtube Channelகள் பற்றி கவனமாயிருங்கள்.

Tuesday 17 August 2021

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் புதிய விமானம் தாங்கிக் கப்பல்கள்

 


2021 ஓகஸ்ட் 8-ம் திகதி அமெரிக்கா தனது யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலின் வெள்ளோட்டதை நிறைவு செய்தது. இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலும் தனது வெள்ளோட்டத்தை ஓகஸ்ட் 4-ம் திகதி ஆரம்பித்தது. விமானம் தாங்கிக் கப்பல்களை முதலில் கடலில் இறக்கி பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்படும். கடலில் பயணிக்கும் விதம் குண்டு வெடிப்பு அதிச்சியைத் தாங்கும் திறன், இயந்திரம் மற்றும் பல்வேறுகருவிகளின் செயற்பாடு போன்றவை தேர்வுக்கு உட்படுத்தப்படும். இந்தியா அமெரிக்காவிற்கும் பிரான்சையும் அடுத்து 1957-ம் ஆண்டில் இருந்தே விமானம் தாங்கிக் கப்பலைப் பயன் படுத்துகின்றது.

விமானம் தாங்கிக் கப்பல்களின் வகைகள்

ஒரு விமானம் தாங்கிக் கப்பலின் திறன் அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையிலும் திறனிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தனை விமானங்கள் அதிலிருந்து பறந்து செல்லும் போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. விமானம் தாங்கிக் கப்பல்களை மூன்றாக வகைப்படுத்தலாம்: 1. மீகை- விமானம் தாங்கிக் கப்பல்கள் (Super-carriers) இவை 100,000 தொன் எடையுள்ளவை. 90 விமானங்களைக் கொண்டவை. 2. நடுத்தர விமானம் தாங்கிக் கப்பல்கள். இவை 40,000 தொன் எடையுடவை. 40 விமானங்களைக் கொண்டவை. 3. தாழ்ந்த தரமான விமானம் தாங்கிக் கப்பல்கள் இவை விமானம் தாங்கிக் கப்பல் உற்பத்தியிலும் கடற்போரிலும் அனுபவமில்லாத நாடுகள் வைத்திருக்கும் கப்பல்கள். இரசியா கடற்போர் அனுபவம் குறைந்த நாடு. சீனா கடற்போர் அனுபவமில்லாத நாடு.

செலவு மிக்க வி/தா கப்பல்கள்

1988இல் இரசியா 70விமானங்கள் தாங்கிச் செல்லக்கூடிய 85,000 தொன் எடையுள்ள அணுவலுவில் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பலை கட்ட முடி செய்திருந்தது. ஆனால் அதைப் பின்னர் கைவிட்டது. அதில் இரசியா சந்திக்கவிருக்கும் நிதிப் பிரச்சனை தொழில்நுட்பப் பிரச்சனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் கைவிடப்பட்டது. சீனாவிடம் லியோனிங் என்னும் விமானம் தாங்கி கப்பல் உள்ளது. அது மேலும் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவின் ஐ.எஸ்.எஸ் விக்ராந்த 23,000 கோடி ரூபாக்களில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் விமானம் தாங்கிக் கப்பலிற்கான மொத்தச் செலவு $12.8பில்லியன்.

அரசுறவில் பெரும் பங்கு வகிக்கும் விமானம் தாங்கிகள்

அமெரிக்கா 11 விமானம் தாங்கிக் கப்பல்களையும் சீனாவும் இந்தியாவும் பிரித்தானியாவும் இத்தாலியும் இரண்டு விமானம் தாங்கிக்கப்பல்களையும் பிரேசில், இரசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தாய்லாந்து ஆகியவை ஒரு விமானம் தாங்கிக் கப்பல்களையும் வைத்திருக்கின்றன. சீனா தனது மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலை நிர்மாணித்துக் கொண்டிருக்கின்றது. 2030-ம் ஆண்டு சீனா ஐந்து அல்லது ஆறு விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. ஹென்றி கிஸ்ஸிங்கர்: ஒரு விமானம் தாங்கிக் கப்பல் 100,000 தொன் அரசுறவுக்கு ஈடானது. (An aircraft carrier is 100,000 of diplomacy)

இரண்டும் தேறின

2021 ஓகஸ்ட் மாதம் உள்ள கணக்கின்படி உலகில் 41 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. அதில் 11 அமெரிக்காவிற்கு சொந்தமானது. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் அணுவலுவில் இயங்கும் பாரிய அளவிலானவை. ஒவ்வொன்றும் 80விமானங்களைக் காவிச்செல்ல வல்லவை. அமெரிக்காவின் USS GERALD FORD கப்பலுக்கு அருகில் மூன்று தடவை குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது வெடிப்பு 3.9ரிக்டர் அளவுகோல் பூமி அதிச்சிக்கு ஈடானது. Kochin Shipyard Ltd என்னும் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்தியாவின் விக்ராந்தை உற்பத்தி செய்துள்ளது. அதற்கான கடற் கடற்தேர்வுகளில் அது தேறியுள்ளதாக இந்தியக் கடற்படை அறிவித்தது. விக்ராந்த் வெடிப்புக்கு உள்ளாக்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதா எனத் தகவல் இல்லை.



மலையும் மடுவும்

262மீட்டர் நீளம் 62மீட்டர் அகலம். 14அடுக்குகள், 2300 அறைகள் கொண்டது விக்கிரந்த். அதில் 1700பேர் செயற்படுவர். விக்ராந்தின் மிதப்பு வேகம் 18கடல் மைல்கள். அதி உயர் வேகம் 28கடல் மைல்கள்.அமெரிக்க ஃபோர்ட் வகை விதா கப்பல்களில் 25 அடுக்குகள், வேகம் 30கடல் மைல்கள். அது 4539ஆளணிகளையும் 2700 அறைகளையும் கொண்து. ஃபோர்ட் கப்பல்கள் குறைந்த அளவு ஆட்கள் தேவைப்படும் அளவிற்கு பல தானியங்கி முறைமைகளைக் கொண்டுள்ளது.

விமானங்கள் கப்பலில் இருந்து பல்வேறு வழியில் கிளம்பிச்செல்லும்:

1. catapult-based launch system (CATOBAR)- பாரம் குறைந்த விமானங்கள்

2. Short Take-Off, Barrier Assisted Recovery (STOBAR)

3. Short Take-Off and Landing (STOL)

4. Vertical take-off and short landing (VSTOL)

விக்கிராந்த்தில் STOBAR முறைமை உண்டு. ஃபோர்ட்டில் VSTOL முறைமை செயற்படுகின்றது. அத்துடன் மின்காந்த உந்து முறைமையும் பாவிக்கப்படுகின்றது. விக்கிராந்தில் மிக்-29கே அல்லது தேஜஸ் போன்ற நான்காம் தலைமுறைப் போர்விமானங்கள் பயன்படுத்தப்படலாம். ஃபோர்ட்டில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஈடுபடுத்தப்படும். நான்காம் தலைமுறைப் போர்விமானத்திற்கும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானத்திற்கும் உள்ள வித்தியாசம் பழைய விரல்விட்டு சுழற்றும் தொலைப்பேசிக்கும் தற்போது உள்ள ஐ-போனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் போன்றது. விக்ராந்த் டீசல் மூலம் தன் வலுவைப் பெறுகின்றது. ஃபோர்ட் அணுவலுவால் இயக்கப்படுகின்றது. விக்ராந்த தொடர்ச்சியாக 6000மைல்கள் பயணிக்கும். ஃபோர்ட் பயணிக்கும் தூரத்திற்கு வரையறை இல்லை அது இருபது ஆண்டுகள் கடலில் பயணிக்கலாம்.

இந்தியாவிற்கு விக்ராந்த்அவசியம் தேவை

இந்தியாவின் கரையோரம் 7516கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரம் 32,000கிலோ மீட்டர் நீளமானது. சீனாவின் கரையோரங்களில் உள்ள தென் கொரியா, ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சீனா சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தியா பங்களாதேசம், மியன்மார், இலங்கை பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தன் கரையோர அயல் நாடுகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிற்கு கடல் வழியாக வந்த தீவிரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகரை தொடர்ந்து 64 மணித்தியாலங்கள் தாக்கினர். இந்தியா கடல்வழியாக தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்கின்றது. இந்தியாவின் அடுத்த விமானம் தாங்கி கப்பலாக விகிரமாதித்தியா வரவுள்ளது. அமெரிக்கா ஃபோர்ட் போன்று மேலும் பத்து கப்பல்களை உருவாக்கவுள்ளது.

அமெரிக்காவின் ஃபோர்ட் வகை வி/தா கப்பல்களிற்கு முந்திய தலைமுறைக் கப்பல்களான நிமிட்ஸ் வகைக் கப்பல்களை அழிக்க்க் கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை சீனா உருவாக்கியது. அவற்றைத் தடுக்க அமெரிக்கா தனது வி/தா கப்பல்களை பாதுகாக்கும் ஆழி பேர்க் வகை நாசகாரக் கப்பல்களில் சிறந்த ரடார்களையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் இணைத்துள்ளது. அதனால் சீனா பாரிய எண்ணிக்கையில் குளவித் தாக்குதல் பாணியில் அமெரிக்க வி/தா கப்பல்களில் மீது தாக்குதல் செய்யும் திட்டத்துடன் உள்ளது. அதை முறியடிக்க அமெரிக்கா லேசர் படைக்கலன்களைப் பாவிக்கவுள்ளது. ஆனால் பாவம் இந்தியாவின் விக்ராந்த் சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளுக்கு நின்று பிடிக்குமா?

காளி அம்மாள் காப்பாற்றுவாளா?

இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO)யும் Bhabha Atomic Research Centre (BARC)உம் இணைந்து இலத்திரன் அதிர்வுகளை வீசும் கருவிகளை உருவாக்கியுள்ளன. அதற்குப் பொருத்தமாக காளி எனப் பெயரும் சூட்டியுள்ளனர். Kilo Ampere Linear Injector என்பதன் முதலெழுத்துக்களே காளி என அழைக்கப்படுகின்றது. அது எதிரியின் ஏவுகணைகளை நோக்கி pulses of Relativistic electron beam இலத்திரன் அதிர்வுகளைக் கொண்ட கதிர்களை வீசும். லேசர் கதிர்கள் எதிரியின் இலக்கில் துளையிடும். ஆனால் இந்தியாவின் காளியின் கதிர்கள் எதிரியின் இலக்கில் படும் போது அவற்றின் இலத்திரனியல் செயற்பாட்டை முற்றாக அழிக்கும். அதனால் ஏவுகணை செயலிழந்து போகும். எதிரியின் விமானங்கள் மற்றும் பல எண்ணிக்கையில் வரும் ஆளில்லா விமானங்களையும் காளி இடைமறித்து அழிக்கக் கூடியது. KALI 80, KALI 200, KALI 1000, KALI 5000 and KALI 10000 என இந்திய தொடர்ச்சியாக காளியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. அந்த வழியில் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருந்தால் இந்தியாவால் நுண்ணலைக் கதிர்களை (Microwave) உற்பத்தி செய்யும் படைக்கலன்களை விரைவில் உருவாக்க முடியும். ஒளியின் வேகத்தில் பாயும் நுண்ணலைக் கதிர்கள் மூலம் எதிரியின் ஏவுகணைகளையும் விமானங்களையும் இடையில் வைத்தே கருக்கி அழிக்க முடியும். 

Sunday 15 August 2021

திபெத்தை சீனாவில் இருந்து பிரிக்க முடியுமா?

 


சீனா, இந்தியா, மியன்மார், பங்களாதேசம், நேப்பாளம் ஆகியவற்றுடன் எல்லையைக் கொண்ட நீர்க்கோபுரம் எனப்படும் திபெத்தை 1950இல் இருந்து சீனா கைப்பற்றி வைத்திருக்கின்றது. அன்றிலிருந்து சீனா திபெத்தில் பெரும் அபிவிருத்தித் திட்டம் என்னும் போர்வையில் சீனர்களை திபெத்தில் குடியேற்றி திபெத்தியர்களை முடக்குகின்றது. திபெத்தியர்களுக்கும் அவர்களின் ஞானப்பெரும் தந்தையான தலாய் லாமாவிற்கும் இடையிலான தொடர்புகளையும் தொடர்ந்து துண்டித்து வருகின்றது. தற்போது உள்ள தலாய் லாமாவிற்கு அடுத்து வரும் 15வது தலாய் லாமாவை தாமே தெரிவு செய்வோம் என சீனா அடம் பிடிக்கின்றது. அடுத்த தலாய் லாமா தெரிவில் இந்தியா தலையிடக் கூடாது என இந்தியாவையும் சீனா எச்சரித்துள்ளது. சீனாவிற்கு எதிராக பல நாடுகள் ஒன்று சேரும் தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் திபெத்தியர்கள் பகடைக்காய்களாக்கப்படலாம்.

திபெத்தின் வரலாறு

13-ம் நூற்றாண்டில் சீனாவைக் கைப்பற்றிய மங்கோலியர் தீபெத்தையும் கைப்பற்றினர். சீனாவின் மிங் பேரரசு 14-ம் நூற்றாண்டில் மங்கோலியரை விரட்டியடித்த போது தீபெத்தை தனியாக விட்டனர். 18-ம் நூற்றாண்டில் சீனாவின் கிங் பேரரசின் பிடியின் கீழ் திபேத் கொண்டு வரப்பட்டது. 1911இல் திபெத் சுதந்திர நாடாகியது. 1914-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவும் சீனாவும் கஷ்மீர் நகர் சிம்லாவில் “சிம்லா மரபொழுங்கு உடன்பாட்டில்” கையொப்பமிட்டன. அதில் திபெத்தை உள்-திபெத், வெளி-திபெத் என இரண்டு நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டு உள்-திபெத் சீனாவின் ஆட்சியின் கீழும் வெளி-திபெத் ஒரு தனிநாடாகவும் அங்கீகரிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சீனாவிற்கும் பிரித்தானியா ஆண்ட இந்தியாவிற்கும் இடையிலான எல்லை என்னும் மக்மான் கோடு வரையப்பட்டது இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1950-ம் ஆண்டு சீனா வெளி-திபெத்தையும் ஆக்கிரமித்து தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவும் சீனாவும் 1914இல் கொண்ட சிம்லா மரபொழுங்கு உடன்பாட்டையும் இரத்துச் செய்ததுடன் மக்மான் கோட்டையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக முடிவு செய்தது. திபெத்தை சீனா கைப்பறியமையால் ஆசியாவின் பல நாடுகளிற்கு நீர் வழங்குகின்ற இமயமலையின் முக்கிய பகுதி சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. திபெத் இமயமலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள பெறுமதி வாய்ந்த பீடபூமியாகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கவசப் பிரதேசமாக இருந்த திபெத் சீனா வசமானது. திபெத்தை சீனா ஆக்கிரமிக்க முன்னர் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லை என ஒன்று இருந்தில்லை. தற்போதைய பாக்கிஸ்த்தான், இந்தியா பங்களாதேசம், மியன்மார் ஆகியவற்றைக் கைப்பற்றிய பிரித்தானியப் பேரரசால் நேப்பாளத்தையும் திபெத்தையும் கைப்பற்ற முடியவில்லை. திபெத்தை சீனர்கள் தம் மண்டரின் மொழியில் சிஜாங் என அழைக்கின்றனர். சிஜாங் என்றால் மேற்குச்செல்வ வீடு எனப் பொருள்படும். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய-இந்தியப் படையின் தளபதியாக இருந்த ஃபிரான்சிஸ் தக்கர் என்பவர் இரசியாவிலும் பார்க்க சீனா ஆபத்தானது என்றும் சீனாவிடமிருந்து திபெத் பாதுகாகப்பட வேண்டியது என்றும் தெரிவித்திருந்தார்.

திபெத்தில் சீனா நிறைவேற்றும் திட்டங்கள்

1999-ம் ஆண்டில் இருந்து திபெத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அந்த அபிவிருத்தி திட்டங்களுடன் ஹன் சீனர்கள் அங்கு குடியேற்றியும் வருகின்றது. அதற்காக திபெத்தில் வறுமை ஒழிப்பையும் மேற்கொண்டது. 2006-ம் ஆண்டு திபெத்திற்கான தொடரிப்பாதை உருவாக்கப்பட்டு அங்கு சீனாவின் மற்றப் பாகங்களில் இருந்து பயணிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது. 2010இல் உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்த விமான நிலையம் திபெத்தில் 13மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டது. சீனாவின் மிகப்பெரிய செப்பு இருப்பு திபெத்தில் உள்ளது. மேலும் இரும்பு, துத்தநாகம், ஈயம், கட்மியம், யூரேனியம் போன்ற கனிம வளங்கள் திபெத்தில் உள்ளன. அவற்றின் பெறுமதி ஒரு ரில்லியன் டொலர்களிலும் அதிகமானது.

நாடு கடந்த திபெத்திய அரசு

1959-ம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த போது அங்கிருந்து தப்பியோடிய தலாய் லாமாவிற்கு ஜவகர் லால் நேருவின் அரசு அடைக்கலம் கொடுத்து இந்தியாவில் நாடு கடந்த திபெத்திய அரசையும் அமைக்க அனுமதித்தார். ஆனால் 1954-ம் ஆண்டு செய்த இந்திய சீன ஒப்பந்தத்தில் திபெத்தை “சீனப் பிராந்தியமான திபெத்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ஒரு இலட்சம் திபெத்தியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். அவர்களின் அரசியற் செயற்பாடுகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் திபெத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல திபெத்தை ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகக்கூட அறிவிக்கவுமில்லை. 2020-ம் ஆண்டு அமெரிக்கப் நாடாளுமன்றத்தில் திபெத்திற்கான கொள்கை மற்றும் உதவிக்கான சட்டம் (Tibetan Policy and Support Act) என ஒன்று நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் அமெரிக்கா திபெத்தில் ஒரு துணைத்தூதுவரகத்தை அமைக்க வழிவகுப்பதுடன் திபெத் தொடர்பாக தவறிழைக்கும் சீனர்களுக்கு எதிராக பொருளாதரத் தடைகளையும் அமெரிக்காவிற்கு பயணிப்பதற்கான தடையையும் விதிக்க முடியும். ஆனால் இவை திபெத்தின் விடுதலைக்கு வழிவகுக்க மாட்டாது.

இந்தியாவின் தடுமாற்றம் மிகுந்த வெளியுறவுக் கொள்கை

1965-ம் ஆண்டு அப்போது இந்திய தலைமை அமைச்சராகவிருந்த லால் பகதூர் சாஸ்த்திரி திபெத்தின் நாடுகடந்த அரசிடம் தான் அவர்களின் அரசை அங்கீகரிப்பேன் என உறுதியளித்தார். ஆனால் அதைச் செய்யமுன்னர் அவர் இறந்துவிட்டார். 2014-ம் ஆண்டு மோடி தனது தலைமை அமைச்சர் பதவியேற்பிற்கு வெளிநாடுகளில் இயங்கும் திபெத்திய அரசின் தலைமை அமைச்சரை அழைத்தது. ஆனால் தனது 2019 தலைமை அமைச்சர் பதவியேற்பிற்கு அப்படி யாரையும் அழைக்கவில்லை. 2019இல் சீனப்படையினருடன் மோதிய போது கொல்லப்பட்ட திபெத் போராளியின் இறுதிச் சடங்கில் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்டார். பின்னர் டுவிட்டரில் அது தொடர்பான தனது பதிவை நீக்கியிருந்தார். 2021இல் மோடி தலாய் லாமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் இருக்கும் திபெத்தியர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளது.

இந்தியாவிடம் திபெத் போராளிகள்

2020 செப்டம்பர் 1-ம் திகதி லடாக் பிரதேசத்தில் உள்ள பங்கொங் சோ என்ற இடத்தில் சீனா எல்லை தாண்டி அமைத்திருந்த ஒரு படை நிலை மீது திபெத்தியப் போராளிகள் தாக்குதல் நடத்தி அந்த படைநிலையையும் அங்கிருந்த படைக்கலன்களையும் கைபற்றினர். இந்தத் தாக்குதலில் நியிமா தென்ஞின் (Nyima Tenzin) என்ற திபெத்தியப் போராளி கொல்லப்பட்டார். இந்தச் செய்தியை இந்திய ஊடகங்கள் உடனடியாக வெளியிட்டதுடன் தாக்குதல் செய்தவர் இந்தியாவின் உளவுத்துறையான ரோவின் கீழ் மிக இரகசியமாகச் செயற்படும் திபெத்தியர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படையணியைச் சேர்ந்தவர் என்ற தகவலையும் வெளிவிட்டன. 1950களில் இருந்தே அமெரிக்காவினதும் இந்தியாவினதும் உளவுத்துறைகள் இணைந்து திபெத்தியப் போராளிகளுக்கு பயிற்ச்சியளித்து வருகின்றனர். சிறப்பு எல்லைப் படை என்னும் பெயரில் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இப்படையணியில் ஐயாயிரம் முதல் பன்னீராயிரம் போராளிகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவிடமிருந்து திபெத்தை மீட்க பன்னீராயிரம் படையினர் போதாது.

திபெத்தை மாற்றியமைக்கும் சீனா

கடந்த பத்து ஆண்டுகளாக சீனா திபெத்தில் பல உட்கட்டுமானங்களைச் செய்யும் அபிவிருத்தி என்ற போர்வையில் பல சீனர்களை அங்கு குடியேற்றி அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பை மாற்றி வருகின்றது. இதனால் அங்கு ஒரு தனிநாட்டுக்கான போர் செய்வது கடினமாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. திபெத்தியர்களுக்கும் தலாய் லாமாவிற்கும் இடையிலான தொடர்புகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சீனாவின் முகமறி தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள் மூலமும் பல்வேறுவகையான உளவாடல்களினாலும் திபெத்தியர்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். திபெத்திற்கும் நேப்பாளத்திற்கும் இடையிலான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டன. திபெத்தில் இருந்து 2மில்லியன் திபெத்தியர்கள் வேறு மாகாணங்களுக்கு இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவின் வெள்ளையறிக்கை

சீனாவின் எழுச்சியை முடக்குவதற்கு அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்குள் திபெத்தின் பிரிவினைவாதத்தை தூண்வதும் உள்ளடக்கப் பட்டிருக்கும் என சீனா கருத இடமுண்டு. அதனால் 2021 மே மாதம் சீனா திபெத் தொடர்பான தனது வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வெள்ளையறிக்கையில் கூறப்பட்டவை:

1. திபெத் மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,

2. 15வது தலாய் லாமாவை சினாவே தெரிவு செய்யும்,

3. திபெத்திய பௌத்த சமூகம் சமூகவுடமையை(Socialisam) கடைப்பிடிக்க வழிகாட்டப்படும்,

4. திபெத் மீதான சீனக் கட்டுப்பாடு மேலும் இறுக்கப்படும்,

2013-ம் ஆண்டு சீன தேசிய மக்கள் பேரவையில் உரையாற்றிய சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவை சிறப்பாக ஆள்வதற்கு எமது எல்லைகள் சிறப்பாக ஆளப்படவேண்டும்; எமது எல்லைகள் சிறப்பாக ஆளப்படுவதற்கு திபெத்தில் உறுதிப்பாடு நிலவ வேண்டும் என்றார். அந்த அளவிற்கு திபெத்திற்கு சீனா முக்கியத்துவம் கொடுக்கின்றது. சீனாவின் பல பகுதிகளில் நீர்த்தட்டுப்பாடு நிலவுகின்றது அப்படியிருக்கையில் மிகச் சிறந்த நீர் மூலமான திபெத்தை சீனா இலகுவில் விட்டுக் கொடுக்காது.

Monday 9 August 2021

மாறும் சீன ஐரோப்பிய ஒன்றிய உறவு


கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடன் வித்தியாசமான உறவைக் கொண்டிருந்தன. சீன வளர்ச்சியை அமெரிக்கா ஒரு சவாலாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தனக்கான ஏற்றுமதிச் சந்தையின் வளர்ச்சியாகவும் பார்த்தன. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ஜேர்மனிய அதிபர் அஞ்செலா மேர்க்கெல்லும் சீனாவுடனான உறவை உறுதியான நிலையில் வைத்திருக்க விரும்பினர். ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் உலக அதிக்கக் கனவைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சீனாவுடனான வர்த்தக உறவை வளர்க்க விரும்பியது. இதே கொள்கையை ஜோர்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா போன்ற முன்னாள் அமெரிக்க அதிபர்களும் கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார். 2019-ம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் சீனா தொடர்பான தனது கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கின்றது.

சீன உள்நோக்கதை உணர்ந்த ஐரோப்பிய ஒன்றியம்

சீனா அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை மாற்றியமைக்க முயல்கின்றது என்பதை உணர்ந்த ஐரோப்பிய ஒன்றியம் தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் செய்ய விரும்பிய முதலீட்டிற்கான முழுமையான ஒப்பந்தம் (Comprehensive Agreement on Investment) தற்போது கிடப்பில் போடப்படுள்ளது. 2021 மா மாதம் அது தொடர்பான முடிவெடுப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளமன்றம் காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்களிடையே சீனாமீதான வெறுப்பும் அதிகரித்துள்ளது. ஜேர்மனியும் பிரான்சும் தென் சீனக் கடலில் சுதந்திர போக்கு வரத்தை உறுதி செய்வதற்கு தமது பங்களிப்பை வழங்க முன் வந்துள்ளன. தென் சீனக் கடலில் உள்ள பல மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருள் மற்றும் கடலுணவு வகைகளுக்கு உரிமை கொண்டாடும் போட்டி, அங்கு சீனா அமைத்த செயற்கை தீவுகள் தொடர்பான போட்டி, தென் சீனக் கடலில் கடல் எல்லை தொடர்பாக அதை ஒட்டியுள்ள நாடுகளிடையேயான போட்டி ஆகியன தீவிரமடைந்துள்ளது. அங்கு சீனாவின் ஆதிக்கத்தை சுதந்திரமான கடற்போக்குவரத்துக்கு சீனாவின் அச்சுறுத்தல் என்னும் பெயரில் அமெரிக்கா பல நாடுகளை சீனாவிற்கு எதிராகத் திரட்டுகின்றது.

சீனாவிற்கு சவாலாக பிரெஞ்சுக் கடற்படை

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பிரான்சும் தனது கவனத்தை அதிகரித்துள்ளது. பிரான்ஸ் தனது ஈரூடக போர்க்கப்பலான தொன்னேறேயை (Torrenne) பசுபிக் மாக்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இக்கப்பலின் தலைமையில் பிரான்சின் கடற்படையினர் தென் சீனக்கடலில் பல போர்ப்பயிற்ச்சியில் 2021 பெப்ரவரி மாதத்தில் ஈடுபட்டிருந்தது. அதற்கு சீனா தனது ஆட்சேபனையையும் தெரிவித்திருந்தது. ஆனால் அதைத்தொடர்ந்து பிரான்சின் அணுக்குண்டு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான எமரூட் (Emeraude) தென் சீனக் கடலில் போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்டது. பிரான்சின் நடவடிக்கைகள் தென் சீனக் கடற் பிராந்தியத்தின் 90 விழுக்காடு கடற்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடுவதற்கு சவால் விடுவதாக அமைகின்றது. 2019 ஓகஸ்ட் மாதம் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவை மூன்றும் இணைந்து சீனா ஐக்கிய நாடுகள் சபையின் கடற் சட்ட மரபொழுங்கிற்கு (Unite Nations Conventions on the Law of Sea) ஏற்ப நடக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

தென்சீனக் கடலில் பிரித்தானிய விமானம்தாங்கி

பிரித்தானியாவின் விமானம் தாங்கிக் கப்பலான குயீன் எலிசபெத் தனது பரிவாரக் கப்பல்கள் நீர்மூழ்கிக்கப்பல்கள் புடைசூழ அமெரிக்கத் தாயரிப்பு F-35 என்னும் உலகின் மிகச் சிறந்த பற்பணிவிமானங்கள் பலவற்றையும் தாங்கிக்கொண்டு தென் சீனக் கடலில் 2021 ஜூலை இறுதியில் பயிற்ச்சியில் ஈடுபட்டது. Career Strike Group 21 என அழைக்கப்படும் இந்த விமானம்தாங்கிக் கடற் படைப்பிரிவு உலகின் அதி நவீனமானது எனக்கருதப்படுகின்றது. இது சிங்கப்பூரில் போர்ப்பயிற்ச்சி செய்தபின் தென் சீனக் கடலூடாக ஜப்பானைச் சென்றடைந்தது. ஜப்பானியப் பிரித்தானியப் படைகள் இணைந்து ஒரு போர்ப்பயிற்ச்சியில் ஈடுபட்ட்ன. தென் சீனக் கடலூடாக பிரித்தானியக் கடற்படைகள் பயணித்ததை கடுமையாக எதிர்த்த சீனா பிரித்தானியா இப்போதும் குடியேற்ற ஆட்சிக்கால மனப்பாங்குடன் இருக்கின்றது எனக் குற்றம் சாட்டியது. பிரித்தானியா, மலேசியா, சிங்கப்பூர், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது.

பல கடல் தாண்டிச் செல்லும் ஜேர்மனி

சீனாவுடன் சிறந்த வர்த்தக உறவைக் கொண்டிருக்கும் ஜேர்மனியும் தனது கடற்படையை தென் சீனக் கடலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஜேர்மனியப் பொருளாதாரம் சீனாவிற்கான ஏற்றுமதியால் நன்மையடைந்திருக்கின்றது. சொந்தப் பொருளாதார நலனிலும் பார்க்க சுதந்திரமான உலகக் கடற்போக்குவரத்து முக்கியமானது என உணர்ந்த ஜேர்மனி தனது ஃபிரிகேட் வகைக் கப்பலை தென் சீனக் கடலுக்கு அனுப்புகின்றது.  ஜேர்மனியில் இருந்து வட கடல், ஆங்கிலக் கால்வாய், அத்லாண்டிக் கடல், மத்திய தரைக்கடல், அரபிக் கடல், இந்து மாக்கடல், பசுபிக்மாக்கடல் ஆகியவற்றினூடாக செல்லப் புறப்பட்டுள்ள ஜெர்மனியின் போர்க்கப்பல் 2021 டிசம்பரில் சீனா போய்ச் சேரும் என எதிர் பார்க்கப்படுகின்றது. 2002-ம் ஆண்டின் பின்னர் ஜேர்மனியப் போர்க்கப்பல் ஒன்று தென் சீனக் கடலில் பயணிக்க விருக்கின்றது. அது தைவான் நீரிணை வழியாகவோ அல்லது சீனாவின் செயற்கைத் தீவுகளின் 12கடல் மைல் கடற்பரப்பினுள்ளோ செல்ல மாட்டாது. பல விமானம் தாங்கி கப்பல்களைக் கண்ட சீனாவிற்கு 200 படையினரைக் கொண்ட ஜேர்மனியில் ஃபிறிகேற் வகைக் கப்பல் எந்த வித அச்சத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் தனக்கு எதிராக பல நாடுகள் திரள்வது சீனாவைச் சிந்திக்க வைக்கும்.

 

சீனாவின் 2-ம் அணுக்குண்டு ஏவுகணைத்தளம்.

சீனா அமைத்துக் கொண்டிருக்கும் இரண்டாவது அணுக்குண்டு ஏவுகணைத் தளம் அதன் அமைதியான எழுச்சி என்ற கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சீனா தன் அணுக்குண்டு உபாயம் ஆகக் குறைந்த பாதுகாப்பை நோக்கமாக கொண்டது என இதுவரை பறைசாற்றி வந்தது. ஆனால் அது அமைத்துக் கொண்டிருக்கும் இரண்டாவது அணுக்குண்டு ஏவுகணைத்தளம் அதைப் பொய்யாக்குகின்றது. அத்துடன் சீனாவிடமிருக்கும் அணுக்குண்டுகளின் எண்ணிக்கை தொடர்பாக அது உண்மையான தகவலை வெளியிடுவதில்லை எனவும் எண்ணத்தோன்றுகின்றது. சீனா தனது புதிய அணுக்குண்டு ஏவுகணைத்தளத்தில் அமைத்துள்ள குதிர்களையும் சேர்த்து 200குதிர்கள் (Silos) சீனாவிடம் உள்ளது என செய்மதிகளில் இருந்து அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவற்றுடன் சீனாவுடம் பல நகரும் அணுக்குண்டு ஏவுகணை வீசிகளும் உள்ளன. இதனால் சீனாவின் அணுக்குண்டு ஏவுகணை வீசிகளை தரையில் வைத்தே ஒரேயடியாக எதிரிகளால் அழிக்க முடியாது. இது அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் பெரும் சவாலாக அமைகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இவற்றைக் கருத்தில் கொண்டு சீனா தனக்கென ஒரு உலக ஒழுங்கை நிலை நாட்ட முயல்வதை எதிர்க்க முன்வந்துள்ளது.

சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி

சீனா தனது அயல் நாடுகளை மிரட்டுவதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விரும்பவில்லை. சின்ஜியாங் மாகாணத்தில் சீனாவின் மனித உரிமை மீறல்களை ஐஒ கடுமையாக எதிர்க்கின்றது. சீனாவிற்கு எதிரான பொருளாதரத்தடையையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்தது. சீனா Made in China – 2025 என்னும் கொள்கையை வகுத்து அதற்கு ஏற்ப தனது உயர் தொழில்நுட்பங்களை முன்னேற்றி வருகின்றது. அதை தடுக்கும் முகமாக அமெரிக்கா உயர்தொழில் நுட்பத்துக்கான semi-conductorsஐ சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது. உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்கும் ஜேர்மனிக்கு சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் சவாலாக 2025இன் பின்னர் அமைய வாய்ப்புண்டு அதனால் ஜேர்மனிக்கு சீனாவின் வளர்ச்சியை தடைசெய்ய வேண்டிய அவசியம் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா ஜேர்மனியிடம் சீனாவிற்கு உயர்தொழில்நுட்பங்கள் கொண்ட கருவிகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என விடுத்த வேண்டுகோளை ஜேர்மனி ஏற்றுக் கொண்டது. பொதுவுடமைச் சீனாவை முதல் அங்கீகரித்தது பின்லாந்து. ஆனால் சீனாவைக் கடுமையாக எதிர்க்கும் சுவீடனில் வாழும் சீனருக்கு சுவீடன் விருது வழங்கியதை அடுத்து இரு நாடுகளிடையேயான உறவு மோசமடைந்துள்ளது. ஆர்க்டிக் கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதை பின்லாந்து விரும்பவில்லை.

குழம்பிய குட்டை

பல நாடுகளும் தென் சீனக் கடலுக்கு தமது போர்க்கப்பல்களை அனுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் சீனா தென் சீனக் கடலில் தனது விமானம் தாங்கிக் கப்பலுடன் ஒரு பாரிய போர்ப்பயிற்ச்சி செய்யப் போவதாகவும் அப்போர்ப்பயிற்ச்சி செய்யும் கடற்பிரதேசத்தில் வேற்று நாட்டு கப்பல்கள் பயணிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளது. தென் சீனக் கடல் குழம்பிய குட்டையாகின்றது.

சீனாவிற்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்து அதனைத் தனிமைப் படுத்தும் நகர்வை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்கின்றது. ஆனால் தன்னைத் தனிமைப்படுத்த முடியாது என்கின்றது சீனா.

Thursday 5 August 2021

ஆப்கானிஸ்த்தானில் இனி சீனாவா?

 


2021 ஜூலை மாத இறுதியில் ஆப்கானிஸ்த்தான் தலிபான் அமைப்பினரின் தூதுக் குழு ஒன்று சீன அரசின் அழைப்பை ஏற்று சீனா சென்று அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் வங் ஜீயைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்த்தானின் மீளிணக்கத்திலும் மீள்கட்டுமானத்திலும் சீனா முக்கிய பங்கு வகிக்கும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தலிபானின் குழுவினரிடம் தெரிவித்தார். 2007-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தானின் லோகர் மாகாணத்தில் உள்ள மெஸ் அய்னாக் பாரிய செப்பு படிமங்களை அகழ்வு செய்யும் உரிமம் சீனாவிற்கு ஆப்கானிஸ்த்தானிய அரசால் வழங்கப்பட்டது. சீனா அதில் செய்த மூன்று பில்லியன் டொலர் முதலீடு ஆப்கானிஸ்த்தான் வரலாற்றில் மிகப் பெரிய முதலீடாகும். இந்த முதலீட்டை எதிர்த்த ஆப்கானிஸ்த்தான் அமைச்சர் ஒருவரின் வாயை சீன பெருமளவு இலஞ்சம் கொடுத்து மூடியதாகவும் கூறப்படுகின்றது. அந்த முதலீட்டை தொடர்ந்து பேணுவதற்கு சீனாவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட வேண்டும்.

சீன தலிபான் உறவு

ஒரு பொதுவுடமை(?) அரசுக்கும் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கும் பொதுவானது என்று ஏதுமே இல்லாத நிலையில் தலிபானை ஆதரிக்க வேண்டிய நிலையில் சீனா இருக்கின்றது. சீனா தனது நாட்டின் எல்லையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடிய ஓர் அரசு அமைவதை விரும்பாது என்றாலும் ஆப்கானிஸ்த்தானின் உறுதிப்பாட்டை தலிபானகள் தலைமையிலாவது நிலைநிறுத்துவதை சீனா எதிர்க்காது. சீனாவின் புதிய பட்டுப்பாதைக்கு ஆப்கானிஸ்த்தானில் ஓர் உறுதியான அரசு அமைவது அவசியம். சீனா தனது பட்டுப்பாதைத் திட்டத்தை வரையும் போது அதில் ஆப்கானிஸ்த்தான் உள்ளடக்கப்படவில்லை. இப்போது அதையும் உள்ளடக்கி முன்னர் மத்திய ஆசியாவில் உள்ளடக்கப்படாத பிரதேசங்களையும் உள்ளடக்கி மேலும் பல பொருளாதார வளையங்களை (Economic Belts) சீனா உருவாக்க முடியும். ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்கள் சீனாவைப் பொறுத்தவரை ஒரு தங்கச் சுரங்கமாகும். தலிபான்களுடன் இணைந்து செயற்படும் சில அமைப்புக்கள் சீனாவின் இஸ்லாமியர்கள் வாழும் உய்குர் இன மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றன. தலிபான்களுடன் உறவு வைப்பதாயின் தனது நாட்டு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு தலிபான்களோ அல்லது அதன் இணை அமைப்புக்களோ ஆதரவு வழங்கக் கூடாது என்ற நிபந்தனையை சீனா விதித்துள்ளது. அதிலும் முக்கியமாக கிழக்கு துருக்கிஸ்த்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற போராளி அமைப்பை சீனா அறவே வெறுக்கின்றது.

பேரரசுகளின் புதைகுழி

முன்பு கிரேக்கர், மங்கோலியர், மொகாலயர் பின்பு பிரித்தானியர், இரசியர் இன்று அமெரிக்கர் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமிக்க முயன்று தோல்வி கண்டனர். அதனால் ஆப்கான் பேரரசுகளின் புதைகுழி என்று அழைக்கப்படுகின்றது. இந்த நாடுகள் தங்கள் படைகளை அங்கு அனுப்பி போர் புரிந்தன. ஆனால் சீனாவின் போர் வேறுவிதமாக இருக்கும். தன்னுடைய பேரழிவு விளைவிக்கும் படைக்கலனான உட்கட்டுமானங்களுக்கான கடன் மூலம் ஆப்கானை சீனா ஆக்கிரமிக்க திட்ட மிட்டுள்ளது. தலிபான் உட்பட பல்வேறு படைக்கலனிகள் ஏந்திய அமைப்புக்களும் அமெரிக்காவின் ஆதரவுடன் காபூலில் இருந்து ஆப்கானிஸ்த்தானை ஆட்சி செய்யும் அஸ்ரஃப் கானியின் படையினருக்கும் இடையில் நடக்கும் போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினரின் ஆதரவால் காபூல் அரசு தாக்கு பிடித்துக் கொண்டிருந்தது.

படைகள் விலகாவிடில் கடும் ஆபத்து

அமெரிக்கப் படைகள் விலகுகின்ற இடங்களில் ஆப்கான் அரச படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் மூண்ட போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச படையினர் அயல் நாடான தஜிகிஸ்த்தானுக்கு தப்பி ஓடினர். இது போல பல ஆயிரம் அரச படைகள் 2021 செப்டம்பர் 11இன் முன்னர் தப்பி ஓடுவார்கள். இதனால் அஸ்ரஃப் கானியின் அரசு நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர் சரிந்துவிடும் எனக் கருதப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையில் கட்டார் (கத்தார்) தலைநகர் டோகாவில் செய்த பேச்சு வார்த்தைகளின் இறுதியில் 2019 ஜூலையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 2021 செப்டம்பர் 11-ம் திகதி (இரட்டைக் கோபுர தாக்குதல்) நேட்டோப் படையினர் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அவர்கள் கடும் ஆபத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் என தலிபான் பேச்சாளர் 2021 ஜுலை 6-ம் திகதி எச்சரித்துள்ளார். ஆப்கானின் 407 மாவட்டங்களின் 188இற்கு மேலானவை தலிபான்களிடம் இருக்கின்றன, இன்னும் பத்துக்கு மேற்பட்டவையை அவர்கள் வெகு விரைவில் கைப்பற்றிவிடுவார்கள். அவர்கள் தொடர்ந்து பெருமளவு படைக்கலன்களையும் போர்த்தளபாடங்களையும் அரச படையினரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவை விரும்பும் காபூல்

காபூலில் உள்ள ஆட்சியாளரான அஸ்ரஃப் கானி இந்தியாவுடன் நல்லுறவை விரும்புபவர். தலிபான்களில் பெரும்பான்மையானவர்கள் பஷ்ரூன் இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள். 3.2 மில்லியன் பஷ்ரூன்கள் இந்தியாவின் வாழ்கின்றனர். இந்தி திரைப்படத்துறயில் இஸ்லாமியப் பெயர்களுடன் இருக்கும் நடிக நடிகைகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்த்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பஷ்ரூன்களே. அதனால்  தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிக் கொண்டு தலிபான்களுக்கு இரகசியமாகவும் பகிரங்கமாகவும் பாக்கிஸ்த்தான் பல உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் அஸ்ரஃப் கானி பாக்கிஸ்த்தான் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். ஆனாலும் 2021 செப்டம்பரில் நேட்டோப் படைகள் வெளியேறிய பின்னர் தனது இருப்பை உறுதி செய்ய கானி இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான், ஈரான் ஆகிய நாடுகளுடன் நல்லுறவு அவசியம் எனக் கருதுகின்றார். இந்தியாவிற்கும் ஆப்கானித்தானிற்கும் இடையில் தரைவழித் தொடர்பு மேற்கொள்வதாயின் அது பெரும்பாலும் பாக்கிஸ்த்தானூடாகவே செய்ய வேண்டும். 

பாக்கிஸ்த்தானின் கரிசனை

ஆப்கானிஸ்த்தானில் ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அரசு அமைவது தமது நாட்டு ஆட்சி முறைமைக்கு ஆபத்தாகும் என பாக்கிஸ்த்தான் தலைவர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே பாக்கிஸ்த்தானுடன் எல்லையைக் கொண்ட ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாத அரசு உள்ளது. ஆப்கானிஸ்த்தானில் தலிபான்கள் இஸ்லாம்ய அடிப்படைவாத அரசை உருவாக்கி அது பாக்கிஸ்த்தானிலும் பார்க்க சிறப்பாக ஆட்சி செய்தால் பாக்கிஸ்த்தானியர்கள் தமக்கும் அது போன்ற ஆட்சி வேண்டும் என விரும்பலாம். ஏற்கனவே ஆப்கானுடன் எல்லையைக் கொண்ட பாக்கிஸ்த்தானியப் பிரதேசங்களில் பாக்கிஸ்த்தானிற்கான தெஹ்ரிக் ஐ தலிபான் என்ற அமைப்பு செயற்படுகின்றது. 2019இல் பாக்கிஸ்த்தானியப் படையினர் அமெரிக்க நிர்ப்பந்தத்துடன் செய்த படை நடவடிக்கையால் அவர்களில் பலர் கொல்லப்பட்டனர். ஆனாலும் ஒரு சில ஆயிரம் தலிபான்களாவது பாக்கிஸ்த்தானில் எஞ்சியிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதனால் பாக்கிஸ்த்தான் ஆப்கானைக் கையாள சீன உதவியை நாடியுள்ளது. தலிபான் அமைப்பில் உள்ள பலர் பாக்கிஸ்த்தானில் உள்ள பஷ்ரூன் இனத்தவர்களுக்கு எதிராக பாக்கிஸ்த்தான் எடுக்கும் நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதுடன் பாக்கிஸ்த்தானில் உள்ள பஷ்ரூன் மக்கள் வாழும் பகுதிகளையும் இணைத்து அகன்ற ஆப்கானிஸ்த்தான் உருவாக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனால் பாகிஸ்த்தான் தலிபான் உறவு மிகவும் சிக்கலானதாகவே இருக்கும். நேட்டோப் படையினர்ன் வெளியேற்றத்தின் பின்னர் தலிபான்களைன் ஆட்சி அமைந்தால் அதற்கு அவசியம் தேவைப்படுவது நிதி. அது பாக்கிஸ்த்தானிடம் இல்லாததால் ஆப்கானின் உட்கட்டுமான அபிவிருத்திக்கு சீனா உதவி செய்யும் என்பதை தம்மால் உறுதி செய்ய முடியுமென்கின்றது பாக்கிஸ்த்தான்.



மத்திய ஆசியாவில் சீன-இரசிய ஆதிக்கப் போட்டி

ஏற்கனவே பல மத்திய ஆசிய நாடுகளின் சீனா தனது ஆதிக்கத்தை உட்கட்டுமான உதவிகளாலும் தனது Belt and Road Initiative என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தாலும் அதிகரித்து வருவதை இரசியா விரும்பவில்லை. ஆனாலும் தற்போதைய சூழலில் சீனாவுடன் இரசியா ஒத்துப் போகவேண்டி உள்ளது. ஈரான், சீனா, இரசியா ஆகிய மூன்றும் இணைந்து ஆப்கானிஸ்த்தானில் செயற்படுவது சிறந்த தீர்வாக அமையலாம். பாக்கிஸ்த்தானுடன் தனது உறவை தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டிருக்கும் சீனா பாக்கிஸ்த்தானை ஓரம் கட்டுவதை விரும்பாது.

சீனாவிற்கு நல்வாய்ப்பு

கடந்த பல பத்தாண்டுகளாக சீனாவில் பெரும் உட்கட்டுமானங்களை சீன அரசு செய்தது. அதற்குப்பாவிக்கப்பட்ட அத்தனை இயந்திரங்களும் உபகரணங்களும் தற்போது சும்மா இருக்கின்றது. அவற்றை வேறு ஒரு நாட்டில் பாவிக்கும் போது மூலதனச் செலவின்றி சீனாவால் பல உட்கட்டுமானங்களைச் செய்ய முடியும். அதனால் சீனாவிற்கு போட்டியாக குறைந்த செலவில் எந்த ஒரு நாட்டாலும் உட்கட்டுமான அபிவிருத்திகளை எந்த நாட்டிலும் செய்ய முடியாது. இருபது ஆண்டுகளுக்கு மேல் நடந்த உள்நாட்டுப் போரால் ஆப்கானில் பல உட்கட்டுமானங்கள் சிதைந்து உள்ளன. அவற்றை அபிவிருத்தி செய்து கொண்டு அதற்குப் பதிலாக ஆப்கானிஸ்த்தானில் உள்ள கனிம வளங்களை சுரண்டுவது சீனாவின் நோக்கமாகும். தலிபான ஆப்கானில் அமைக்கவிருக்கும் புதிய அரசுக்கு போதிய நிதியை சீனாவால் கடனாக வழங்கி அந்த அரசையும் தன் கடன் பொறிக்குள் இலகுவாக விழவைக்க முடியும். தலிபான் அமைக்கவிருக்கும் புதிய அரசு மேற்கு நாடுகளிடமோ, உலகவங்கியிடமோ அல்லது பன்னாட்டு நாணய நிதியத்திடமோ கடன் அல்லது உதவி என்று கேட்டால் அவை மனித உரிமை, பெண் உரிமை எனப் பல நிபந்தனைகளை விதிக்கும். ஆனால் சீனா கடன் கொடுக்கும் போது அப்படிப்பட்ட நிபந்தனைகளை விதிக்காமல் ஆப்கானிஸ்த்தானை பகுதி பகுதியாக கபளீகரம் செய்யும் நீண்டகாலத் திட்டத்துடன் கடன்களை அதிக வட்டிக்கு வழங்கும்.

சீனாவின் ஆதரவுடன் ஊழல் ஆட்சி நடக்குமா?

சீனாவின் உதவியுடன் ஆட்சி செய்பவர்கள் பலர் மோசமாக ஊழல் செய்பவர்களாக இருக்கின்றனர். தலிபான்கள் ஊழலை தொடர்வார்களா அல்லது உண்மையான இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டுவார்களா என்பதில் ஆப்கானிஸ்த்தானின் எதிர்காலம் தங்கியுள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாத நாடான ஈரானும் ஊழலில் திளைக்கும் பாக்கிஸ்த்தானும் ஆப்கானிஸ்த்தானின் அயல் நாடுகளாகும். சீனா வெளிநாடுகளில் முதலீடு என்னும் பெயரில் வைக்கும் கடன் பொறிக்கு இலங்கையை பலரும் உதாரணமாக முன்வைக்கின்றார்கள். அதிலும் மோசமான உதாரணமாக ஆப்கானிஸ்த்தான் அமைய வாய்ப்புண்டு.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோப் படையினரின் விலகலால் ஆப்கானில் போர் முடிந்துவிடும் என்றோ அல்லது அமைதி வரப்போகின்றதோ என்று தலிபான்களே எதிர்பார்க்க மாட்டார்கள். ஆப்கானில் தலிபான்கள் மட்டுமல்ல பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் இருக்கின்றன. எல்லோரும் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில் அடுத்து ஏறுபவர் கதி?

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...