Followers

Friday 30 September 2022

புட்டீனின் குழாயடிச் சண்டை

 


இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனிடம் உள்ள வலிமை மிக்க பொருளாதாரப் படைக்கலனாக இரசியாவின் எரிவாயு இருக்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் எரிபொருள் தேவையில் 43% இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. அமெரிக்கா இதை கடுமையாக எதிர்த்து வந்தது. இரசியாவில் இருந்து பெறுவது மலிவானது என்பதால் அதன் அயல்நாடுகள் அங்கிருந்து பெறுவதை தவிர்க்க விரும்பவில்லை.

படைக்கலனாக எரிபொருள் விநியோகம்

2014 பெப்ரவரி 20-ம் திகதி இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர்  இரசியா இரசியா உக்ரேன் மீது போர் தொடுத்த பின்னர் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நட்பு நாடுகளும் இரசியா மீது பொருளாதார தடைகளை செய்தன. பின்னர் 2022 பெப்ரவை 24-ம் திகதி இரசியாவின் இரண்டாம் ஆக்கிரமிப்பு போரின் பின்னர் அந்த தடைகள் மேலும் விரிவாக்கப்பட்டன. 2022 பெப்ரவரி ஆக்கிரமிப்பின் பின்னர் நேட்டோ நாடுகளும் ஜப்பான் மற்றும் ஒஸ்ரேலியா போன்ற நாடுகளும் இரசியாவிற்கு எதிராக ஒற்றுமைப் பட்டன-. இந்த ஒற்றுமையைக் குலைக்க புட்டீன் இரசியாவின் எரிபொருள் வளத்தை அரசுறவியல் பகடைக் காயாக பயன் படுத்தினார். இரசியா மீது பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு எதிராக தனது எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தினார். அதனால் உலகில் எரிபொருள் விலை ஏறியதுடன் இரசியாவின் ஏற்றுமதி வருமானமும் அதிகரித்தது.

புட்டீனின் பதிலடிகள்

உக்ரேனுக்கு எதிரான போரை இரண்டு வாரங்களில் முடிக்க புட்டீன் போட்ட திட்டம் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு வழங்கும் படைக்கலன்களால் தவிடு பொடியானது. 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இரசியா பெரும் பின்னடைவையும் சந்திக்க வேண்டியிருந்தது. இதன் பின்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் பல நகர்வுகளைச் செய்து வருகின்றார். இரசியப் படையினருக்கு ஆட் சேர்ப்பு, இரசியா ஆக்கிரமித்த உக்ரேனின் பிரதேசங்களை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மூலம் இரசியாவுடன் இணைத்தல் உக்ரேனின் உட்-கட்டுமானங்கள் மீது தாக்குதல் என அவரது நடவடிக்கைகள் விரிகின்றன.



Nord Stream – 1 & 2

தனது எரிவாயு விநியோகத்தின் உக்ரேனூடாக செல்லும் நிலத்தடிக் குழாய்களில் தங்கியிருப்பதை விரும்பாத இரசியா 2011-ம் ஆண்டு Nord Stream – 1 என்னும் பெயரில் 2011-ம் ஆண்டு போல்ரிக் கடலினூடாக ஒரு எரிவாயு விநியோகிக்கும் 1222கிமீ (759 மைல்) நீள குழாயை உருவாக்கியது. பின்னர் 2012 இல் Nord Stream – 1 குழாயையும் உருவாக்க தொடங்கியது. இத்திட்டங்களுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

புட்டீனின் எரிவாயுத் தாக்குதல்கள்

2022 ஜூலை 25-ம் திகதி இரசியாவின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான Gazprom ஜேர்மனிக்கு Nord Stream – 1இனூடாக் செல்லும் எர்வாயு விநியோகத்தை 20%ஆல் குறைத்தது. பின்னர் 2022 ஓகஸ்ட் 31-ம் திகதி பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்காக எரிபொருள் விநியோகம் நடைபெற மாட்டாது என இரசியா அறிவித்தது. 2022/23 குளிர்காலத்திற்கு தேவையான எரிவாயுக் கையிருப்பை ஜேர்மனியும் மற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சேமிக்காமல் பண்ணவே இரசியா இந்த எரிவாயு விநியோகத்தை அவ்வப்போது தடுத்தது எனக் குற்றம் சாட்டப்பட்டது. உக்ரேன் போரில் 2022 செப்டம்பர் முதல் வாரத்தில் இரசியாவிற்கு ஏற்பட்ட பின்னடைவு இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை கடும் சினத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அவருடைய ஆதரவாளர்கள் அவர் போர் நடத்தும் முறை பற்றி தமது அதிருப்தியை தெரிவிப்பதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.



புட்டீனின் குழாயடித் தாகுதல்களா?

2022 செப்டம்பர் 26-ம் திகதி நோர்வேயில் இருந்து டென்மார்க் ஊடாக போலாந்து வரை எரிவாயு விநியோகிக்கும் குழாய் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில் Nord Stream – 1 மற்றும் Nord Stream – 2 குழாய் சேதப் படுத்தப்பட்டது. இது அமெரிக்காவினதும் உக்ரேனினதும் வேலை என இரசியா குற்றம் சாட்டுகின்றது. அது இரசியாவின் வேலை என அமெரிக்காவும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. இலையுதிர் காலத்தின் முதலாம் வாரத்திலேயே இந்த எரிபொருள் விநியோகத்திற்கான தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Nord Stream குழாய்களை யார் சேதப்படுத்தினார் என்பதற்கான ஆதாரம் எதையும் யாரும் முன் வைக்கவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் குளிர்கால எர்பொருள் தேவைக்கான பாதுகாப்பின் வலிமை பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. Nord Stream குழாய்களுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சேதங்களால் மூன்று இடங்களை எரிவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வாயு போல்ரிக் கடற்பரப்பில் இருப்பதால் கப்பல் மற்றும் மீன்பிடிப் படகுப் போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன.

மாறி மாறிக் குற்றச் சாட்டுகள்

உக்ரேனும் போலந்தும் இரசியாவே Nord Stream குழாய்களை சேதப்படுத்தியது என்கின்றன. டென்மார்க் தலைமை அமைச்சர் Mette Frederiksen குழாய்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சேதம் ஒரு விபத்தி என நம்ப முடியாது என்றார். Nord Stream – 2இனூடாக விநியோகம் செய்ய முன்னரே உக்ரேன் மீதான இரசியாவின் இரண்டாவது ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டபடியால் அதுனூடாக ஒரு போதும் எரிவாயு விநியோகம் செய்யவில்லை. இரசியாவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் Nord Stream – 1 உருவாக்கும் போது செய்த ஒப்பத்தத்தின் படி இரசியா எரிவாயுவை விநியோகிக்கும் கடப்பாடு கொண்டுள்ளது. அதை மீறினால் பன்னாட்டு சட்ட நடவடிக்கை மேலும் பொருளாதாரத் தடை போன்றவற்றை மேற்கு நாடுகள் செய்யலாம். சேதப்படுத்தப் பட்ட குழாயால் விநியோக செய்ய முடியாது என்னும்போது இரசியாவிற்கு எதிரான நகர்வுகளைச் செய்ய முடியாது. அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளிங்கன் ஆரம்ப தகவல்களின் படை வேண்டுமென Nord Stream குழாய்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன என்றார்.

உக்ரேனுடான எரிவாயு விநியோகத்தை தடுக்க சதியா?

2019-ம் ஆண்டு இரசியாவும் உக்ரேனும் 40பில்லியன் கன மீற்றர் எரிவாயு உக்ரேனூடாக நிலத்தடி குழாய்கள் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் உக்ரேன் 2024-ம் ஆண்டு வரை $7பில்லியன் வருமானத்தைப் பெற அவ் ஒப்பந்தம் வகை செய்துள்ளது. இரசியாவின் Gazprom நிறுவனம் தற்போது நாளொன்றிற்கு 42.4 மில்லியன் கன மீற்றர் எரிவாயுவை உக்ரேனூடாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகின்றது. இது உக்ரேனூடாக செல்லும் குழாய்கள் மூலம் அனுப்பக் கூடிய எரிவாயுவின் அளவின் 17% மட்டுமே!

இந்த எரிவாயு அனுப்புதலுக்கு உக்ரேனின் Naftogaz என்னும் நிறுவனம் இரசியாவின் Gazprom நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வில்லை என தீர்ப்பாயம் ஒன்றில் முறையிட்டுள்ளது. இரசிய Gazprom மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு எரிபொருள் விநியோகம் செய்யாமல் இருப்பதற்கே  வேண்டுமென்றே திட்டமிட்டு செய்வதாக மேற்கு நாட்டு ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றது.

குளிர்காலப் போட்டி நகர்வுகள்

குளிர் காலத்தின் முன்னர் இரசியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் முயல்கின்றன. 155-மில்லி மீட்டர் Howitzers பல்குழல் ஏவூர்தி செலுத்திகள், GMLR ஏவூர்திகள், M-31 HIMARS மற்றும் M-142 HIMARS பல்குழல் ஏவூர்தி செலுத்திகள் போன்ற இரசியப் படையினருக்கும் அவர்களின் படைக்கலன் களஞ்சியங்களுக்கும் பேரழிவு ஏற்படுத்தக் கூடிய படைக்கலன்கள் அமெரிக்கா உக்ரேனியப் படைகளுக்கு வழங்குகின்றது. ஜேர்மனியும் உக்ரேனுக்கான தனது படைக்கல விநியோகத்தை அதிகரித்துள்ளது. இவை இரசியப் படையினருக்கு நடுக்கத்தை ஏற்படுத்த தொடங்கி விட்டன. மேற்கு ஐரோப்பாவை குளிரில் நடுங்க வைக்க எரிவாயுப் போரை புட்டீன் ஆரம்பித்து விட்டாரா என்ற கேள்வி எழுகின்றது. உக்ரேனுடன் பிணக்கு Nord Stream குழாய் சேதம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இரசிய அதிபர் புட்டீன் ஒரு குழாயடிச் சண்டையை தொடக்கி விட்டார் என்றே தோன்றுகின்றது. இப்போது வலுவாக இருக்கும் புட்டீனின் எரிவாயுப் படைக்கலன் வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கான குழாய்மூலமான எரிபொருள் விநியோகம், அமெரிக்காவில் இருந்து திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு விநியோகம் ஆகியவற்றால் இன்னும் 3 ஆண்டுகளில் வலிமை இழந்து போகும். பின்னர் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எரிபொருள் விநியோகத்தில் இரசியா தங்கியிருக்க வேண்டியிருக்கும்.

எரிவாயு தொடர்பான கட்டுரையைப் படிக்க இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://veltharma.blogspot.com/2020/06/blog-post_16.html

Monday 26 September 2022

சீன அதிபரி ஜீ ஜின்பிங்கை சிறையிலடைத்த பொய்-ஹிந்த்

 


சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங்கு எதிராக படையினர் புரட்சி செய்து அவரை சிறையில் அடைத்து விட்டதாக பல இந்திய ஊடகங்கள் 2022 செப்டம்பர் 24-ம் திகதி செய்தி வெளியிட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவில் ஒரு பெரிய குழப்ப நிலை என்பது Too good to be true. ஆனால் சீனாவைப் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரிய ஊடகங்கள் அப்படி ஒரு செய்திகளை வெளிவிடவில்லை. அது மட்டுமல்ல உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகளை முந்தியடித்து வெளிவிடுவதை வழமையாக கொண்ட பிரித்தானிய Daily Mail, அமெரிக்க Washington Post ஆகியவை ஜீ ஜின்பிங்க் கைது பற்றி ஏதும் செய்திகளை வெளிவிடவில்லை.



பொய் சொல்லும் ஜெய் ஹிந்த் கும்பல்

ஜெய் ஹிந்த் என தமது உரையாடல்களை முடிக்கும் இந்திய youtube channels பொய்ச் செய்திகளை வெளியிடத் தயங்காதவரகள், மேஜர் மதன்குமார் என்பவர் பாக்கிஸ்த்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தைப் பற்றிய கலந்துரையாடலில் உலகில் தனது சொந்த நாட்டு மக்கள் மேல் விமானத்தில் இருந்து குண்டுகளை வீசிய ஒரே நாடு பாக்கிஸ்த்தான் எனப் பொய்யுரைத்தார். இந்தியா 1966இல் மிஸ்ரோம் மக்கள் மீது குண்டு வீசியமையையும் இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியுடன் இலங்கை விமானப் படையினர் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தமையையும் ஒரு வாக்கியத்தில் மதன் குமார் மறைக்க முயன்றார். இன்னும் ஒரு youtube channel இல் B-21 Raider போர் விமானங்களை இந்தியா உற்பத்தி செய்வதாக புரட்டினார். ஆனால் அவை அமெரிக்காவின் விமானங்களாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய youtube channels பார்த்தால் இன்னும் சில நாட்களில் சீனா தன் படைக்கலன்களுடன் இந்தியாவிடம் சரணடைந்து விடுபது போலத் தோன்றும். ஈழ விடுதலையையும் தமிழ்த்தேசியத்தையும் கொச்சைப் படுத்துவதற்கு அவர்களுக்கு கூலி கிடைக்கின்றதா என எண்ணத்தோன்றும். 

தமிழர்களைப் பொறுக்கி என அழைக்கும் சுப்பிரமணியன் சுவாமி தன் பதிவை நீக்கி விட்டார்.:



ஜின்பிங்கிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள்

சீனாவின் புரட்சி நடந்தமைக்கு ஆதாரமாக சீனாவில் இருந்து 6,000 விமானப் பறப்புக்கள் இரத்து செய்யப்பட்டன என்பதை முதலாவது ஆதாரமாக முன்வைத்துள்ளன. சீனாவில் பல விமானப் பறப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டன என்றன. சீனாவில் போர் ஒத்திகை நடக்கும் போது விமானப் பறப்புகள் இரத்துச் செய்யப்படுவதுண்டு. சீன விமானச் சேவைகளின் இணையத்தளங்களில் பறப்பு இரத்துப் பற்றி பெரிதாக எதுவும் இருந்திருக்கவில்லை. SCO மாநாடு முடிய முன்னரே ஜீ ஜின்பிங் உட்பட பல சீனப் பிரதிநிதிகள் உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினர் என்பது இரண்டாவது ஆதாரமாக முன் வைக்கப்படுகின்றது. 2022 ஒக்டோபர் 16-ம் திகதி சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாடு நடக்கவிருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் அம்மாநாட்டிற்கான ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் அவசரமாக நாடு திரும்பினர். முன்றவது ஆதாரமாக சீனாவில்  படையினர் நடமாட்டம் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்தும் காணொலிகள் வெளிவந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது. Republic என்ற இந்திய ஊடகம் சீனாவில் 80கிலோ மீட்டர் நீளமான பார ஊர்தி படை வண்டிகள் தலைநகர் பீஜிங்கை நோக்கி நகர்வதாக செய்தி வெளியிட்டது. ஆனால் அக்காணொலி ஒரு சில செக்கண்டுகள் மட்டுமே காட்டப்பட்டன். 80கிமீ என்பது போலிச் செய்தி. இந்திய ஊடகங்கள் முன் வைக்கும் நான்காவது ஆதாரம் சீன அதிபர் எங்குள்ளார் என்பது பற்றி எந்த ஒரு சீன ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை என்பதாகும். 69 வயதான ஜீ ஜின்பிங்க் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சீனர்கள் தம்மைத் தனிமைப் படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதையே அவரும் கடைப்பிடித்தார். சில இந்தியர்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி மக்கள் சீனப் படைத்தளபதி லி கியோமிங் விரைவில் சீன அதிபராகுவார் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் Newsweek சஞ்சிகையின் இணையத்தளம் சீனா அதிபர் கைதுச் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வலம் வருகின்றன என்றது.

பொய்யாக முன்வைத்த “பின்னணி”

ஜின்பிங் தைவானைக் கைப்பற்ற அவசரப்படுகின்றார் ஆனால் சீனப் படைத்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் ஜின்பிங்குடன் படையினருக்கு பிணக்கு அதனால் அவர்கள் உஸ்பெக்கிஸ்த்தானில் இருந்து நாடு திரும்பியவுடன் ஜின்பிங்கை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர் என்ற வகையிலும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. 2022 ஒக்டோபர் 10-ம் திகதி நடக்கவிருக்கும் சீனப் பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் ஜீ ஜின்பிங் மூன்றாவது தடவையாக சீன அதிபராக பதவி ஏற்கும் வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் அவர் இறக்கும் வரை சீன அதிபராக இருப்பார் என எதிர் பார்க்கப்படுகின்றது. இதை பல பொதுவுடமைக் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் விரும்பவில்லை எனக் கருதப்படுகின்றது. ஊழலை ஒழிக்கவும் ஜக் மா உட்படப் பல செல்வந்தர்கள் அளவிற்கு மிஞ்சி செல்வம் சேர்ப்பதை தடுக்கவும் ஜீ ஜின்பிங்க் கடுமையாக செயற்பட்டார். அதனால் அவருக்கு பொதுவுடமைக் கட்சியில் எதிரிகள் அதிகரித்துள்ளனர். ஊழல் செய்தவர்கள் பலரை ஜின்பிங் சிறையில் அடைத்துள்ளார். கொவிட்-2019 பெருந்தொற்று நோய்க்கு எதிராக சுழிய-பொறுமைக் கொள்கையை (Zero-Tolerance policy) ஜின்பிங் கடைப்பிடிப்பதால் சீனாவின் உற்பத்தித் துறையும் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பல உற்பத்தியாளர்கள் ஜின்பிங் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர்.

மோடியின் கேடி வால்பிடிகள்

சில மோடி ஆதரவாளர்கள் மோடியைச் சந்தித்த வெளிநாட்டுத்தலைவரகள் பதவி இழக்கும் அளவிற்கு அவரிடம் அதிசய சக்தி உள்ளது எனக் கதை அளந்தனர். டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, பிரித்தானியாவின் பொறிஸ் ஜோன்சன் ஆகியோரின் வரிசையில் ஜீ ஜின்பிங்கும் இணைந்துள்ளார் என்றனர். டுவிட்டரில் சில இஸ்லாமியர்களுக்கும் சில இந்துக்களுக்கும் கடும் மோதல் நடப்பது வழமை. ஜீ ஜின்பிங் என போலிச் செய்தி வெளியிட்ட இந்துக்களை இஸ்லாமியர்கள் கழுவி ஊற்றுகின்றார்கள். ஜின்பிங் கைது செய்யப்பட்டதாக பொய்யாஅ செய்தி வெளியிட்ட youtube பதிகளை அதன் மொக்கை இரசிகர்கள் "ஆகா அற்புதமான ஆய்வு" என தொடர்ந்தும் வழமையான புளுகித் தள்ளி பின்னூட்டமிடுதலை செய்து கொண்டே இருக்கின்றார்கள்.  பல டுவிட்டர் பதிவுகள் இந்திய டுவிட்டர் பதிவுகளை கிண்டல் செய்தன:



உண்மையில் பொதுவுடமைக் கட்சியில் ஜீ ஜின்பிங்கின் எதிரிகளாக கருதப்படுபவர்களை தூக்கிலிட்டும் சிறையிலடைத்தும் தன் இருப்பை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கின்றார். சீனாவை எப்படி முன்னேற்றி உலகின் முதல்தர நாடாக்குவது என்ற கனவுடன் சீனர்கள் செயற்படுகின்றார்கள். பாவம் இந்தியர்கள் மனுதர்ம சாஸ்த்திரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு அடுத்த நாடு எப்போ சீரழியும் என்ற கனவுடன் அலைகின்றார்கள். 

உலக நாடுகளின் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால் தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்கும். நாணயங்களின் பெறுமதி குறையும் பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண் சரியும். அப்படி ஏதும்  நடக்கவில்லை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கவில்லை. 

பொதுவுடமைச் சர்வாதிகாரிகள் தங்கள் நாட்டில் படையினர் அதிகாரப் போட்டியில் தனித்து ஈடுபடாதவாறு பொதுவுடமைக் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் படையினரை வைத்திருப்பார்கள். இது முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் தற்போதைய சீனாவிலும் உள்ளது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த போது படையினரால் ஏதும் செய்ய முடியவில்லை. இதை அறியாதவர்கள் பலர் youtube channels நடத்தி மக்களிடையே அறியாமையை பரப்புகின்றார்கள். 

Thursday 22 September 2022

உக்ரேனில் இரசியப் பின்வாங்கல் பின்னடைவா?

 


2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர். உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், உக்ரேன் தனது கிழக்குப் பிராந்தியத்தில் பெருமளவு நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும், உக்ரேன் தனது படைக்கலன்களை கைவிட வேண்டும், உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் போன்ற தனது கோரிக்கைகளை உக்ரேனை ஏற்க வைப்பதற்காக இரசியா உக்ரேன் மீது “சிறப்புப்படை நடவடிக்கை” என்னும் பெயரில் இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு படையெடுப்பை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தது. அதில் பெரும் பின் வாங்கல் ஒன்றை செப்டம்பர் 5-ம் திகதி இரசியாவை உக்ரேன் செய்ய வைத்தது.

Combined Arms Manoeuvre

தொலைதூரத் தாக்குதல் படைக்கலன்களையும் குறுகிய தூரத் தாக்குதல் படைக்கலன்களையும் ஒன்றிறைந்துக் கையாளும் திறனை படைத்துறையில் Combined Arms Manoeuvre (இணைக்கப்பட்ட படைக்கலன்களை கவனமாககையாள்தல்) என அழைப்பர். இதை தனது 2022 செப்டம்பர் 5-ம் திகதி தாக்குதல்களின் போது உக்ரேன் சிறப்பாகச் செய்தனர். இதனால் இரசியாவின் வழங்கல் பாதைகள், கட்டுப்பாட்டு-கட்டளைப்  பணியகத்தின் புறநிலைகள்(outposts) உட்படப் பல தாக்குதல் வலிமைகள் சேதமடைந்தன. 

பின்வாங்கலின் பின்னர் இரசியா செய்த நகர்வுகள்:

1.இரசியப் படையினருக்கு எதிரான சட்டம்

இரசியப் படையில் இருந்து படை நடவடிக்கைகளின் போது தப்பி ஓடுபவர்களையும் படைக்கலன்களுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிபவர்களையும் கடுமையாக தண்டிக்கும் சட்டத்தை 2022 செப்டம்பர் 20-ம் திகதி நிறைவேற்றியுள்ளது. இரசியப் படையினர் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய மறுக்கின்றார்கள் தங்கள் சொத்துக்களை தாமே சேதப்படுத்துகின்றார்கள், படையில் இருந்து தப்பி ஓடுகின்றார்கள் என மேச்ற்கு நாட்டு ஊடகங்கள் பரப்புரை செய்தபோது இரசியா அவை பொய்யான செய்திகள் என மறுத்து வந்தது. இரசியாவின் மறுப்பை இரசியாவின் இந்த நகர்வு கேள்விக்குறியாக்கியுள்ளது. இரசியா உக்ரேனில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்த போரை இரசியா போர் என்று சொல்லாமல் அதை ஒரு சிறப்புப் படை நடவடிக்கை என்றே அழைக்கின்றது. இரசியா உக்ரெனில் போர் செய்கின்றது என்று சொல்வது இரசிய சட்டப்படி குற்றமாகும். இரசிய சட்டத்தில் சிறப்பு படை நடவடிக்கை என ஒன்று இல்லை என்றபடியால் அதற்கான சட்டம் இரசியாவில் தேவைப்படுகின்றது.

2. புதிதாக மேன்படைக்கு (Reserve Force) ஆட்சேர்ப்பு

இரசியா புதிதாக மூன்று இலட்சம் பேரை தனது மேன்படையில் (Reserve Force) இணைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இரசியா தனது படைக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்யலாம் என்ற கரிசனையில் பல இரசியர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுவதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் என்னும் இரசியாவிற்கு எதிரான செய்திகளை வெளியிடும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரசியாவை பின் வாங்கச் செய்யும் அமெரிக்கப் படைக்கலன்கள்:

அமெரிக்கா தொடர்ந்தும் பல படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கி வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தப்பட்ட வலிமைகளைக் கொண்ட படைக்கலன்களையே அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கி வந்தாலும் 2022 ஜூன் மாதத்தில் இருந்து வலிமை மிக்க பல்குழல் ஏவூர்தி செலுத்திகளை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்குகின்றது.

1. 155-மில்லி மீட்டர் Howitzers ஏவூர்தி செலுத்திகள்

155-மில்லி மீட்டர் Howitzers என்னும் இழுத்துச் செல்லும் ஏவுகணைச் செலுத்திகள். இந்த வகை எறிகணைச் செலுத்திகள் 122ஐ அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியிருந்தது. அவற்றிற்கான குண்டுகள் எட்டு இலட்சம் வரை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியது.


2. அமெரிக்காவின் GMLR ஏவூர்திகள்

GMLR என்னும் துல்லியமாக எதிரியின் இலக்குகளைத் தாக்கக் கூடிய ஏவூர்திகள். இவை GPS மூலம் வழிகாட்டப்படுபவை. 70கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கி அழிக்க வல்லவை. இவற்றைச் செலுத்தக் கூடிய 155மிமீ Howitzer செலுத்திகளையும் அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.



3. அமெரிக்காவின் M-31 HIMARS மற்றும் M-142 HIMARS ஏவூர்தி செலுத்திகள்

M-31 HIMARS M-142 HIMARS என்ற இருவகை High Mobility Artillery Rocket System மிகவும் நகரக் கூடிய பல் குழல் ஏவுகணைச் செலுத்திகள் ஆகும். இவற்றால் பல தொலைதூரம் பாயும் வழிகாட்டல் ஏவுகணைகளை ஒரேயடியாக வீச முடியும். அமெரிக்கா 2022 ஜூனில் உக்ரேனுக்கு வழங்கிய இந்த ஏவுகணைச் செலுத்தியை இரசியர்களின் கட்டளை நிலையங்களையும் படைக்கலன் கழஞ்சியங்களையும் அழிக்க உக்ரேனியர்கள் பயன்படுத்துகின்றார்கள். பல M-31 HIMAR ஏவுகணைச் செலுத்திகளை அழித்ததாக இரசியர்கள் சொல்கின்றனர். உக்ரேனியர்களிடம் முப்பதிற்கும் மேற்பட்ட M-31 HIMARS இருப்பதாக நம்பப்படுகின்றது. M-31 HIMARS ஐப் பாவித்து 400இற்கு மேற்பட்ட இரசிய இலக்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சொல்கின்றது. HIMARS இரசியப் படைக்கலன்களின் அரைப்பங்கை அழித்து விட்டது என சில செய்திகள் வருகின்றன. ஆனால் இரசியா தனது படை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்கின்றது. M-142 HIMARSஇல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் 200மைல்கள்(321கிமீ) தூரம் வரை பாயக்கூடியன. இவற்றைப் பாவித்து கிறிமியாவில் உள்ள இரசியப் படை நிலைகள் மீது உக்ரேனியப் படையினர் தாக்குதல் செய்கின்றனர். இதனால் கிறிமியாவில் இருந்து இரசியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வெளியேறியதாகவும் செய்திகள் வருகின்றன. HIMARS ஏவூர்திச் செலுத்திகள் துரிதமாக இடமாற்றம் செய்யக் கூடியவை. ஓரிடத்தில் இருந்து தாக்குதல் செய்து விட்டு உடனடியாக வேறு இடத்திற்கு மாறி மறைந்திருக்க கூடியவை. அதனால் ஏவூர்திகள் செலுத்தப்படும் இடத்தின் மீது பதிலடி தாக்குதல் செய்து அவற்றை அழிக்க முடியாது. 

உக்ரேன் பாவித்தஉத்தி

தெற்கில் கேர்சன் பிராந்தியத்தைக் மீளக் கைப்பற்றுவோம் கிறிமியாவை மீட்போம் எனச் சொல்லி சிறிய தாக்குதலை அங்கு தொடுத்துவிட்டு வடகிழக்கில் கார்கீவ் பகுதியில் அதிரடித் தாக்குதல் செய்தமை. இரசியப் படைத்துறையில் நிலவும் ஊழலும் இரசியாவின் பின்னடைவிற்கு காரணம். உக்ரேனியர்கள் கேர்சனைக் கைப்பற்றப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில் இரசியா அதிக கவனத்தை அங்கு செலுத்தி வட கிழக்குப் பகுதியில் குறைந்த கவனத்தை செலுத்தியது.

போலந்து வழங்கிய Krab Self-propelled ஆட்டிலெறிகள் பலவற்றை செப்டம்பர் 5-ம் திகது உக்ரேனியர்கள் கார்கீவ் படை நடவடிக்கையின் போது பாவித்தார்கள்.

இடர் சூழ் எதிர்காலம்

இரசியா பெரிய அளவில் படை நகர்வுகளை இனிச் செய்தால் பெரும் ஆளணி இழப்பை சந்திக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  HIMRS Howitzer ஆகியவற்றை பயன்படுத்தும் திறனை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கற்றுக் கொண்டனர். உக்ரேனியர்கள் இது போன்ற படைக்கலன்களை ஏற்கனவே தாமே உற்பத்தி செய்தும் பயன்படுத்தியும் உள்ளனர். உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கேர்சன் பிரதேசத்தில் எதிரிகளின் படைநிலைகளுக்கு பின்னால் உள்ள படைக்கலன் களஞ்சியங்கள், பாலங்கள் போன்றவற்றை Howitzer இல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் மூலம் தாக்கி அழித்துள்ளனர். இரசியப் படையினர் அதிக இடர் மிக்க பறப்புக்களைச் செய்கின்றனர். அதில் பல இழப்புக்களை அவர்கள் சந்திக்கின்றனர். தாழப்பறந்து தமது படையினருக்கு ஆதரவாக குண்டுகளை வீசும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இரசிய வான்படையினரின் Situation Awareness தொழில்நுட்பம் உயர்த தரத்தில் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. Situation Awareness தொழில்நுட்பம் எதிரியின் வான்பாதுகாப்பு மற்றும் வான்எதிர்ப்பு முறைமைகளை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் முறைமையாகும்.

  விலகி நிற்கும் இரசியாவின் நண்பர்கள்

2022 செப்டம்பர் 16-ம் திகதி உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-ம் உச்சி மாநாடு நடைபெற்ற போது அங்கு வைத்து இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் தனைத்தனியே சந்தித்தனர். மோடி போர் புரிவதற்கு இது உகந்த காலம் அல்ல என புட்டீனுக்கு மோடி சொல்லியிருந்தார். ஜீ ஜின்பிங்கை சந்தித்த பின்னர் விளடிமீர் புட்டீன் சீனாவிடம் உக்ரேன் போர் பற்றிய கேள்வியும் கரிசனையும் உள்ளன என்றார். சீனாவின் பல முதலீடுகள் உக்ரேனில் இரசியாவின் படை நடவடிக்கையால் அழிக்கப்பட்டுள்ளன. சீனா உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு கொண்டு வரப்படுவதையே பெரிதும் விரும்புகின்றது.

இரசிய தேசியவாதிகளும் சில புட்டீனின் ஆதரவாளர்களும் இரசியா உக்ரேன் மீது முழுமையான போரைச் செய்ய வேண்டும் எனவும் அதிக படையினரையும் அதிக சிறப்பு படையணிகளையும் களமிறக்க வேண்டும் எனவும் புட்டீனை வற்புறுத்துகின்றனர். இரசியா கைப்பற்றிய முழுப் பிரதேசத்தையும் உக்ரேனால் மீளக் கைப்பற்ற முடியாது. இரசியா மேலும் அதிக படையினரை போரில் ஈடுபடுத்தும் போது நிலைமை மாற வாய்ப்புண்டு. 

இரசிய நலன்களைப் பாதுகாக்க எதையும் செய்வோம்; எம்மிடமிருக்கும் எந்தப் படைக்கலனையும் பாவிப்போம் என புட்டீன் சூளுரைத்துள்ளார். அவர் அணுக்குண்டைப் பாவிப்பார் என மிரட்டுகின்றார் என நம்பலாம். அணுக்குண்டுகள் இரசியாவிடம் இருக்கும் வரை இரசியாவிற்கு பின்னடைவு ஏற்படாது. 

இரசியாவின் உக்ரேன் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் நடந்தது:


Tuesday 13 September 2022

உக்ரேனின் பதிலடி இரசியாவிற்கு பேரிடியாகுமா?

 


தன் நிலத்தை பாதுகாப்பதற்கான போரைச் செய்து கொண்டிருந்த உக்ரேன் நில மீட்பு போரைத் தொடங்கிவிட்டது போல பல தாக்குதல்களை 2022 ஓகஸ்ட் மாத இறுதியில் இருந்து செய்கின்றது. இரசியா தனக்கு மிக மிக கேந்திரோபாய முக்கியத்துவமான கிறிமியா குடநாட்டின் பாது காப்பை உறுதி செய்ய கேர்சன் (Kherson) பிரதேசத்தைக் கைப்பற்றியிருந்தது. அதை மீட்கும் போரை ஆரம்பிப்போம் என சூளுரைத்து விட்டு உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள கார்கீவ் (Kharkiv) பகுதியில் உள்ள இரசியப் படையினரின் வழங்கலின் இதயமாக இருந்த தொடரூந்து நிலையத்தை கைப்பற்றியுள்ளது. 

எதிர்பாராத தாக்குதல்

உக்ரேனியர்கள் இரசியர்கள் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத வகையில் செய்த தாக்குதல் இரசியப் படைகளை நிலைகுலையச் செய்து விட்டது. பல கிராமங்களை விட்டு அவர்கள் பின்வாங்கியுள்ளனர். இஜியம், குபியங்ஸ்க் ஆகிய நகரங்களை இரசியர்கள் இழந்துள்ளமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இரசியப் படையினரின் வழங்கல்களுக்கு முக்கியத்துவம் மிக்க தொடரூந்து நிலையங்களைக் கொண்ட இஜியம் நகரை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கைப்பற்றினார்கள் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எதிர்பாராத தாக்குதலால் இரசியர்கள் பெருமளவு படைக்கலன்களையும் சுடுகலன்களையும் கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்கள். T-80 போர்த்தாங்கிகள் உட்பட இரசியர்களின் 200இற்கும் அதிகமான படை வண்டிகளையும் உக்ரேனியர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் உக்ரேனின் கைகள் வலிமையடைந்துள்ளன. இரசியாவின் First Guards Tank Army என்னும் சிறப்புப் படையணியே தாங்கிகளையும் கைவிட்டு தப்பி ஓடியது என்பது இரசியாவிற்கு அவமானகரமான ஒன்றாக அமையும். 



மார் தட்டும் உக்ரேனும் மட்டம் தட்டப்படும் புட்டீனும்

இரசியாவின் தீவிர ஆதரவு சமூக வலைத்தள செயற்பாட்டாளரக்ளான Peter Lundstrom, Yuri Podolyaka ஆகியோர் இரசியாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை காரணம் காட்டி புட்டீனிற்கு எதிராக கருத்துகளை வெளியிடுவதாகவும் செய்திகள் வருகின்றன. 2022 செப்டம்பர் மாதம் 11-ம் திகதி உக்ரேனியப் படைத்தளபதி வலரி சலுஸ்னி பதினொரு நாட்களில் தமது படையினர் மூவாயிரம் சதுர கிலோ மீட்டரை மீளக் கைப்பற்றியுள்ளதாக மார் தட்டினார். அல் ஜசீரா கார்கீவில் இருந்து முன்னேறிச் சென்ற உக்ரேனியப் படையினர் இரசிய எல்லையில் இருந்து 50கிமீ தொலைவில் இருப்பதாகச் சொல்கின்றது. 2022 செப்டம்பர் 11-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரசிய அரச தொலைக்காட்சியின் வாராந்த செய்தி நிகழ்ச்சியில் உக்ரேனில் இரசியப் படையினர் செய்யும் “சிறப்பு நடவடிக்கையில்” (உக்ரேன் போருக்கு இரசியர்கள் கொடுத்துள்ள பெயர்) இந்த வாரம் மிகக்கடுமையான வாரமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புட்டீனின் படைநடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் இரசிய மரபு வழித் திருச்சபையின் ஞாயிறு ஆராதனையிலும் அது எதிரொலித்தது. ஆனால் இரசிய பாதுகாப்புத்துறை இது புறமுதுகிடல் அல்ல வேறு இடத்திற்கு படையினர் நகர்ந்து தம் நிலையை வலிமையாக்கினர் எனச் சொல்கின்றது.


அதிருப்த்தியடைந்த புட்டீனின் ஒட்டுக்குழுத்தலைவர்

புட்டீனுக்கு நெருக்கமானவரும் உக்ரேன் போரில் முக்கிய பங்கு வகிப்பவருமான செஸ்னிய தலைவர் ரமஜான் கடிரோவ் உக்ரேன் போர் இரசியா திட்டமிட்ட படி நடக்கவில்லை என்றார். அவரது செஸ்னியப் படையினர் உக்ரேன் போரில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செஸ்னிய விடுதலைப் போரில் இரசியாவிற்கு எதிராக போர் செய்த ரமஜான் கடிரோவ் பின்னர் புட்டீனின் ஒட்டுக்குழுவாக மாறி அவருடன் இணைந்து செயற்படுகின்றார். போர் உத்திகள் மாற்றப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல மேற்கு நாட்டு ஊடகங்கள் கார்கீவ் பகுதியில் இரசியப் படையினர் பின்வாங்கியதை உறுதிப் படுத்த ரமஜான் கடிரோவின் கருத்துக்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர். உக்ரேன் போருக்கு எதிரான கருத்துக்களை உடைய சில உள்ளூராட்சி உறுப்பினர்கள் புட்டீன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் தனிநாடாகப் பிரகடனப் படுத்திய தொனெட்ஸின்(Donetsk) தலைவர் போர் நடக்கும்விதத்தால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.



பழிவாங்கும் தாக்குதல்கள்

கார்கீவ் பகுதியில் இருந்து பின்வாங்கிய இரசியப் படையினர் கார்கீவில் உள்ள குடிசார் உட்கட்டுமானங்கள் மீது தாக்குதல் நடத்தி பழிவாங்குவதாக உக்ரேன் குற்றம் சாட்டுகின்றது. அத்தாக்குதலில் கார்கீவில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாம். உக்ரேன் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் இரசியர்கள் உக்ரேனிய் உட்கட்டுமானங்கள் மீதான தாக்குதலைப் பாராட்டியதுடன் அவை 2022 மார்ச் மாதத்தில் செய்திருக்க வேண்டியவை எனவும் சொல்கின்றனர்.


வான் பொய்ப்பின் தானை பொய்க்கும்

இரசியப் போர் இரசியா எதிர்பார்த்திலும் பார்க்க அதிக காலம் நீடிப்பதற்கும் இரசியா அதிக இழப்பை சந்திப்பதற்கும் இரசியாவின் வான் படை சிறப்பாக செயற்பட முடியாமை முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. உக்ரேனிலும் பார்க்க பத்து மடங்கு வான் படை வலிமையைக் கொண்ட இரசியாவால் உக்ரேனின் வான்படையையும் அதன் வான் பாதுகாப்பையும் செயலிழக்கச் செய்ய முடியாமல் இரசியா இருக்கின்றது. இதனால் துணிவடைந்த உக்ரேனியர்கள் இரசியா கைப்பற்றிய Kherson பிராந்தியத்தை மீளக் கைப்பற்றும் படை நடவடிக்கையை 2022 ஓகஸ்ட் 30-ம் திகதி ஆரம்பித்தனர். 2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது இரசியாவிடம் உக்ரேனிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் உயர்வான விமானங்கள் இருந்தன. அதனால் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு எதிராக 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என போரின் ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சோவியத் ஒன்றிய காலத்து பழைய MIG-29 போர் விமானங்களில் உக்ரேனியரகள் அமெரிக்கா வழங்கிய புதிய HARM (High Speed Anti Radar missiles) ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பொருத்தி அவற்றை இரசியப் படை நிலைகள் மீது ஏவிவருகின்றனர். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கிய SU-34, SU-35 ஆகிய தாக்குதல் விமானங்களையும் MiG-29, SU-27 ஆகிய சண்டை விமானங்களையும் இப்போதும் உக்ரேன் போரில் பாவிக்கின்றது. அதே போர் விமான ங்களை இரசியா பல வகைகளிலும் மேம்படுத்தி உக்ரேன் போரில் இரசியா பாவிக்கின்றது. இரசிய போர் விமானங்கள் உக்ரேன் போரில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால் படைத்துறை நிபுணர்கள் தாம் போட்டக் கணக்கு தப்பானது என ஐயப்படுகின்றனர். இதனால் எதிர் காலத்தில் உலகப் படைக்கலச் சந்தையில் இரசியப் போர் விமான விற்பனையை பாதிக்கப்படலாம்.

வானாதிக்கம் செய்ய முடியாத இரசியா

2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது இரசியாவிடம் உக்ரேனிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் உயர்வான விமானங்கள் இருந்தன. அதனால் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு எதிராக 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என போரின் ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சோவியத் ஒன்றிய காலத்து பழைய MIG-29 போர் விமானங்களில் உக்ரேனியரகள் அமெரிக்கா வழங்கிய புதிய HARM (High Speed Anti Radar missiles) ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பொருத்தி அவற்றை இரசியப் படை நிலைகள் மீது ஏவிவருகின்றனர். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கிய SU-34, SU-35 ஆகிய தாக்குதல் விமானங்களையும் MiG-29, SU-27 ஆகிய சண்டை விமானங்களையும் இப்போதும் உக்ரேன் போரில் பாவிக்கின்றது. அதே போர் விமான ங்களை இரசியா பல வகைகளிலும் மேம்படுத்தி உக்ரேன் போரில் இரசியா பாவிக்கின்றது. இரசிய போர் விமானங்கள் உக்ரேன் போரில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால் படைத்துறை நிபுணர்கள் தாம் போட்டக் கணக்கு தப்பானது என ஐயப்படுகின்றனர். இதனால் எதிர் காலத்தில் உலகப் படைக்கலச் சந்தையில் இரசியப் போர் விமான விற்பனையை பாதிக்கப்படலாம். 1967-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போர், 1971 பங்களாதேசப் போர் ஆகியவற்றை வான் மேலாதிக்கத்தாலேயே வெற்றி கொள்ளப்பட்டது. 1991-ம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது நேட்டோ படையினர் ஓரு சில மணித்தியாலங்களுக்குள் ஈராக்கினதும் குவைத்தினதும் வான்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இரசியா உக்ரேனின் 127,484 சதுர கிலோ மீட்டரைக் கைப்பற்றியுள்ள நிலையில் வெறும் மூவாயிரம் சதுர கிமீட்டரை (உக்ரேன் அதிபர் ஆறாயிரம் சகிமீ என்கின்றார்) உக்ரேனியப் படையினர் மீளக் கைப்பற்றியமை அவர்களின் வெற்றியின் தொடக்கம் என்றோ இரசியாவிற்கு பேரிழப்பு என்றோ இப்போது சொல்ல முடியாது. மேலும் பிரதேசங்களை உக்ரேன் கைப்பற்றிய பின்னர்தான் போரின் போக்கைப் பற்றி எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.


இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...