Followers

Wednesday 24 May 2023

ஹென்றி கிஸ்ஸிங்கர்-100வது வயதைக் காணும் போர்க்குற்றவாளி

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் (1969-73) வெளியுறவுத் துறைச் செயலாளராகவும் (1973-1977) பணியாற்றிய ஹென்றி கிஸ்ஸிங்கர் 2023 மே மாதம் 27-ம் திகதி தனது நூறாவது வயதை நிறைவு செய்கின்றார். அவர் விரும்பத்தகாத ஒருவராக இருந்தாலும் அவரது வாழ்க்கை வரலாறு அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல கற்றுக் கொள்ள வேண்டிய பலவற்றைக் கொண்டதாகவும் இருக்கின்றது. வியட்னாம் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னின்றமை, சோவியத் ஒன்றியத்தையும் சீனாவையும் பிரித்து உலக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டமை அவரது பெரும் சாதனைகளாகும்.

குர்திஷ் மக்களின் காலை வாரியவர்

உலக அரசியலை அதன் சரியான பரிமாணத்தில் உணர்ந்து கொள்ள அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய அறிதல் உதவும் என நிச்சயமாகச் சொல்லலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் ஒரு கலாநிதி அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு தனிநாடு பெற்றுக் கொடுக்கும் என்றார். அதை நான் மறுத்து துருக்கி இருக்கும் வரை அது நடக்காது என்றேன். என்னை பேசவிடாமல் பண்ணினார்கள். ஹென்றி கிஸ்ஸிங்கரின் வாழ்க்கை வரலாறு நான் அறிந்திருந்த படியால் நான் சொன்னது சரியாகப் போனது. 1972-ம் ஆண்டு சதாம் ஹுசேன் ஆட்சியில் அவர் சோவியத் ஒன்றியத்துடன் நெருங்கிய உறவைப் பேணினார். பெருமளவு படைக்கலன்களையும் சோவியத்திடம் இருந்து வாங்கினார். அப்போது அவரது ஆட்சிக்கு எதிராக ஈராகில் வாழும் குர்திஷ் மக்களுக்கு ஹென்றி கிஸ்ஸிங்கர் படைக்கலன்களை வழங்கி அவர்களை சதாமிற்கு எதிராக கிளர்ச்சி செய்யச் செய்தனர். 1979இல் ஈரானில் மதவாத ஆட்சி தொடங்கிய பின்னர் ஈராக்கில் சதாமின் ஆட்சிக்கு ஈரானால் ஆபத்து என்பதால் அமெரிக்காவிற்கும் சதாமிற்கும் இடையில் நட்பு வளர்ந்தது. அப்போது குர்திஷ் போராளிகளைக் கொல்ல கிஸ்ஸிங்கர் சதாமிற்கு உதவினார். கிஸ்ஸிங்கரின் உதவியாளர் குர்திஷ் மக்களுக்கு நாம் செய்தது தவறு என்ற போது கிஸ்ஸிங்கர் சொன்ன பதில் இதுதான்: Underground diplomacy இது Christian Missionary அல்ல; சரி பிழை பார்க்க முடியாது. அன்று இந்தியாவும் இன்று அமெரிக்காவும் இதையே எமக்கு செய்கின்றது. குர்திஷ் மக்களை அமெரிக்கா கால் வாருவது கிஸ்ஸிங்கருடன் முடியவில்லை. இஸ்லாமிய தீவிரவாதிகளை அழிக்கவும் அமெரிக்கா குர்திஷ் மக்களைப் பாவித்தது.

வாழ்க்கை வரலாறு

ஜேர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்து அவரது குடும்பத்தில் பலர் கொல்லப்பட்ட பின்னர் 15வயதில் ஜேர்மனியில் இருந்து தப்பி ஓடி அமெரிக்கப் படையில் இணைந்து ஹிட்லருக்கு எதிராகப் போராடியதுடன் அவரது ஜேர்மனிய மொழியறிவால் அமெரிக்காவின் உளவுத்துறையிலும் பணியாற்றியவர். முன்னாள் போர்வீரர்களுக்கான சலுகையைப் பாவித்து ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் எம் ஏ பட்டத்தையும் கலாநிதி பட்டத்தையும் பெற்றார். ரிச்சர்ட் நிக்சனுக்கு தேர்தல் ப்ரப்புரையின் போது வெளியுறவுத்துறை ஆலோசகராக செயற்பட்டு பின்னர் அவரது ஆட்சியிலும் அவருக்குப் பின்னர் ஜெரால்ட் போர்ட்டின் ஆட்சியிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் செயற்பட்டவர். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல அரசுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆலோசகராகச் செயற்பட்டவர். டிரம்பின் ஆட்சிக் காலத்தில் சீனாவிற்கும் ஆலோசகராகச் செயற்பட்டவர். அவர் எழுதிய நூல்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவு பற்றியது. அரசியில் இருந்தவர் செயற்கை நுண்ணறிவு பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கின்றார். அரசியலில் ஆழமான அறிவு பெற வரலாறு, அரசியல், பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி அறிந்து வைத்தால் மட்டும் போதாது. தொழில் நுட்பங்களைப் பற்றியும் படைக்கலன்களைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நாம் கிஸ்ஸிங்கரின் வாழ்க்கையில் இருந்து உணர்ந்து கொள்ளலாம்.

இந்திரா காந்தியை வெறுத்தவர்.

ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியாவை வெறுப்பவராகவும் குறிப்பாக இந்திராகாந்தியை வெறுப்பவராகவும் இருந்தவர். பங்களா தேச விடுதலையின் போது அவரது அரசுறவியல் நுட்பங்களை இந்திராகாந்தி முறியடித்தார். இந்தியா மீது போர் தொடுக்க இந்தோனோசியா, பிரித்தானியா, ஜோர்தான், ஆகிய நாடுகளை ஒன்று திரட்டினார். இந்தியாவிற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட நகர்த்த சீனா மறுத்தது. இரசியா அமெரிக்காவுடன் போருக்கு தயாரானது. அதனால் கிஸ்ஸிங்கர் தனது இந்தியாவிற்கு எதிரான போர் முயற்ச்சியைக் கைவிட்டார். கிஸ்ஸிங்கர் பாக்கிஸ்த்தானிற்கு கேந்திரமுக்கியத்துவம் கொடுத்தார். அவர் எழுதிய World Order என்ற நூலில் இலங்கை கேத்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருக்கின்றது எனக் குறிப்பிடவில்லை.

கிஸ்ஸிங்கரின் தீய செயல்கள்

1969இல் கிழக்கு திமோரில் நடந்த இனக்கொலைக்கு கிஸ்ஸிங்கர்தான் காரணம் என நம்பப்படுகின்றது.  

1969இல் கம்போடியாமீது மோசமான குண்டு வீச்சு செய்யப்பட்டமைக்கு பின்னால் நின்றவர் கிஸ்ஸிங்கர்.

1973-ம் ஆண்டு சிலியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சல்வடோர் அலெண்டேயை சதிமூலம் பதவியில் இருந்து அகற்றுவதில் முன்னின்றவர் கிஸ்சிங்கர்.

1974இல் சைப்பிரஸுக்கு எதிராகவும் துருக்கிக்கு ஆதரவாகவும் சதி செய்தார் கிஸ்ஸிங்கர்.

1980இல் ஈரான் ஈராக் போருக்கு தூபமிட்டவர் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

1981இல் பங்களா தேசம் விடுதலையடைவதை கடுமையாக எதிர்த்தவர் கிஸ்ஸிங்கர்.

உக்ரேன் – இரசியாப் போர்

2023 ஜனவரியில் நடந்த DAVOS மாநாட்டில் காணொலி மூலமாக கிஸ்ஸிங்கர் உரையாற்றும் போது உக்ரேன் – இரசியப் போர் பற்றி சொன்னவை:

1. இரசியாவிற்கு எதிராக தாக்குப் பிடிப்பதிலும் மேற்கு நாடுகளை ஒன்றுபடுத்துவதிலும் உக்ரேன் வெற்றியடைந்துள்ளது.

2. உக்ரேன் குடியரசுத் தலைவரையும் அதன் மக்களையும் நான் பாராட்டுகின்றேன்.

3. 2022 பெப்ரவரிக்குப் பின்னர் இரசியா ஆக்கிரமித்த உக்ரேன் பிரதேசங்களில் இருந்து இரசியா வெளியேற வேண்டும் ஆனால் அதற்கு முன்னர் ஆக்கிரமித்த கிறிமியாவில் இருந்து அது வெளியேறத்தேவையில்லை.

4. உக்ரேனுக்கு நேட்டோவில் இணைய உரிமையுண்டு.

கிஸ்ஸிங்கரின் பேட்டி

கிஸ்ஸிங்கரின் 100வது பிறந்த நாளை ஒட்டி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை அவரது பேட்டியை “எப்படி மூன்றாம் உலகப் போரைத் தவிர்ப்பது” என்னும் தலைப்பில் பிரசுரித்துள்ளது. நூறுவயதிலும் புத்தி கூர்மை சற்றும் குறையாமல் இருக்கின்றார் என்றது அந்த சஞ்சிகை.  அவரது பேட்டியில் கூறியுள்ளவற்றில் முக்கியமானவை:

·         சீனாவைச் சமாளிக்க அமெரிக்காவிற்கு இந்தியா அவசியம்.

·         ஜப்பான் ஐந்து ஆண்டுகளுக்குள் அணுக்குண்டு உற்பத்தி செய்யும்.

·         ஆசியாவின் வலு ஈடாக்கலுக்கு அமெரிக்காவிற்கு பிரான்சும் பிரித்தானியாவும் உதவ வேண்டும். 

·         உலக மேம்பாட்டிற்கு சிறந்த தலைமைகள் அவசியம். முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர்களான Franklin Roosevelt, John F Kennedy, பிரான்சின் Chares de Gaulle, ஜேர்மனியின் Otto Von Bismarck ஆகியோர் சிறந்த ஆளுமைகள்.

·         சீன அமெரிக்க முறுகலை செயற்கை நுண்ணறிவு மேலும் தீவிரப்படுத்தும்.

·         அமெரிக்கா கீழ்முகமாகச் செல்வதாக சீனர்கள் நம்புகின்றார்கள்.

·         அமெரிக்கா தன்னை அடக்கப்பார்க்கின்றது என சீனா நினைக்கின்றது.

·         உலகின் முதன்மை நிலையில் இருக்கும் அமெரிக்காவை அந்த நிலையில் இருந்து வீழ்த்த சீனா முயல்கின்றது என அமெரிக்கா நினைக்கின்றது.

·         முதலாம் உலகப் போரின் முன்னர் இருந்தது போன்ற பெருவல்லரசுகள் மோதும் நிலை தற்போது உருவாகியுள்ளது.

·         சினாவின் வலயத்தினுள் இரசியா விழுந்து கொண்டிருக்கின்றது.

·         தனது கணிப்புக்கள் தவறானது என புட்டீன் இறுதியில் உணர்ந்து கொள்வார்.

·         அமெரிக்கா போன்ற நாடுகள் நியதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கு என்பது பற்றிச் சொல்லுவது சீனர்களைச் சினமடைய வைக்கின்றது.

·         சீனர்கள் காள் மாக்ஸை பின்பற்றுவதிலும் பார்க்க கொன்ஃபியூசியசை அதிகம் பின்பற்றுகின்றனர்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் நடப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்கின்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர்.

Monday 22 May 2023

உக்ரேன் போரை F-16 போர்விமானங்கள் மாற்றுமா?

 

உக்ரேனுக்கு அமெரிக்காவின் நான்காம் தலைமுறைப் போர்விமானமான F-16 வழங்கப்படுவதை அமெரிக்கா தடுக்க மாட்டாது என அதன் உச்ச அதிகார நிலையமான வெள்ளை மாளிகையில் இருந்து அறிவிப்பு வந்துள்ளது. வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. உக்ரேனுக்கு வல்லூறு என்னும் குறியீட்டுப் பெயர் கொண்ட F-16 போர் விமானங்களை வழங்கும் நாடுகள் பெரும் இடர்களை எதிர் நோக்கும் என இரசியாவின் துணைப் பாதுகாப்பு சமைச்சர் அலெக்சாண்டர் குருக்ஷோ எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரேன் போர் முனையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்பட்ட அமெரிக்காவின் HIMARS செலுத்திகளில் இருந்து வீசப்படும் ஏவுகணைகளின் செயற்படு திறன் இரசியாவின் இலத்திரனியல் குழப்பிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உக்ரேன் தனக்கு நான்காம் தலைமுறைப் போர் விமானம் தேவை என்பதை நேட்டோ நாடுகளிடம் கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வந்தது. உக்ரேன் போர் 2022 பெப்ரவரி தொடங்கிய போது அது 145 போர் விமானங்களை வைத்திருந்தது. இதுவரை போரில் 45 விமானங்களை இழந்துவிட்டது. போலந்து, எஸ்தோனியா ஆகிய நாடுகள் தம்மிடமிருந்த MIG-29 போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்கியிருந்தன. அமெரிக்காவிடமிருந்து F-16 போர் விமானங்களை வாங்கிய நாடுகள் அவற்றை இன்னொரு நாட்டுக்கு விற்பனை செய்வதாயின் அதை அமெரிக்காவின் முன் அனுமதியுடனேயே செய்ய முடியும்.

விமானங்களின் தலைமுறைகள்

போர்விமானங்கள் அவற்றின் தொழில்நுட்பத் தரங்களுக்கு ஏற்ப தலைமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஒலியிலும் குறைந்த வேகத்தில் பறப்பவை முதலாம்தலைமுறை என்றும், ஒலியின் வேகத்தில் பறப்பவை இரண்டாம் தலைமுறை என்றும், ஒலியின் வேகத்திலும் இரண்டு மடங்கு அல்லது அதற்கு அதிக வேகத்தில் பறப்பவை நான்காம் தலைமுறை என்றும் சிலர் வகுத்துள்ளனர். ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் ரடாருக்கு புலப்படாதவையாகும். அமெரிக்கா தனது ஆறாம்தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கிவிட்டது. அமெரிக்காவின் F-22 Raptor, F-35 Lightening ஆகியவை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். சீனா தனதுJ-20ஐயும் இரசியாதனது SU-35ஐயும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்கள் என்கின்றன. திரண்ட மேற்கு (Collective West) நாடுகளின் போரியல் ஆய்வாளர்கள் அவற்றின் புலப்படாத்தன்மை போதியன அல்ல என்பதால் அவற்றை நான்கரையாம் தலைமுறைப் போர்விமானம் என்கின்றனர். F-16 போர்விமானம் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவை. அவற்றின் புதிய வகைகள்

சாதனை படைத்த F-16

1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒன்றை இருக்கை ஒற்றைப் பொறி (இயந்திரம்) கொண்ட F-16 போர்விமானம் களம்பல கண்ட போர்விமானமாகும். இதுவரை 4500இற்கு மேற்பட்ட F-16 போர்விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு பட்ட மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன. அவை பற்பணிப் போர்விமாங்களாகும். பற்பணிப் போர்விமானமான F-16 வான் பாதுகாப்பு, வானில் இருந்து வானிற்கு தாக்குதல், வானில் இருந்து தரை/கடல் தாக்குதல், இலத்திரனியல் போர்முறைமை, எதிரியின் வான்பாதுகாப்பை அழித்தல் ஆகியவற்றைச் செய்யக் கூடியன. ஒலியிலும் பார்க்க இரு மடங்கு வேகத்தில் பறக்கக் கூடிய F-16 20மிமீ பீராங்கி குண்டுகளை எதிரியின் விமானத்தின் மீது பாய்ச்சக் கூடியது. உலக வரலாற்றில் 13மில்லியன் பறப்புக்களைச் செய்த விமானம் என்ற சாதனையை F-16 தனதாக்கிக் கொண்டுள்ளது. அத்துடன் உலகில் பல போர்களில் பரந்த அளவில் பாவிக்கப்பட்ட விமானமும் F-16தான். இதன் பற்பணிச் சிறப்பு அம்சங்களால் F-16ஐ வானில் பறக்கும் Swiss Army Knife என்பார்கள்.

அதிக F-16 வைத்திருக்கும் நாடுகள்.

உக்ரேனுக்கு F-16 போர் விமானங்களை இலவசமாக விநியோகிக்க கூடிய நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே. எகிப்த்திடம் இருநூற்றி இருபது F-16கள் உள்ளன, துருக்கியிடம் இருநூற்றி எழுபது F-16கள் உள்ளன, இஸ்ரேலிடம் 362 F-16கள் உள்ளன. பாக்கிஸ்த்தானிடம் எண்பதிற்கும் அதிகமான F-16கள் உள்ளன. இவை எதுவும் உக்ரேனுக்கு F-16களை வழங்க மாட்டாது. அமெரிக்காவிற்கு வெளியே எனப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு F-16 போர் விமானங்கள் உள்ளன. F-16 A/Bஇல் இருவகை F-16 C/Dஇல் இருவகை F-16 E/F என ஏழிற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் உக்ரேனுக்கு போலந்திடமுள்ள F-16 C/Dவகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளன. போலந்திடம் 48 F-16 உள்ளன. போலந்தைப் போலவே எஸ்தோனியாவும் உக்ரேனுக்கு படைக்கலன்கள் வழங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றது. எஸ்தோனியா தேவை ஏற்படின் அமெரிக்காவிடமிருந்து F-16களை வாங்கி உக்ரேனுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தன்னிடமுள்ள F-16 விமானங்களை அகற்றிவிட்டு F-35 விமானங்களை பாவிக்க திட்டமிட்டுள்ள பெல்ஜியம் தன்னிடமுள்ள F-16களை உக்ரேனுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெல்ஜியத்திடம் எட்டுF-16 B, நாற்பத்தி எட்டு F-16 A ஆகியவை இருக்கின்றன. டென்மார்கிடம் முப்பது F-16, நோர்வேயிடம் அறுபத்தி நான்கு F-16கள் உள்ளன. இவற்றில் எத்தனை உக்ரேன் போரில் பாவிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளன எத்தனை அனுப்பப்படும் என்பவை பற்றி உறுதியாகச் செல்ல இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம்.

அமெரிக்கா உக்ரேனுக்கு F-16 வழங்க மாட்டாது?

ஜேர்மன் அதிபர் Olaf Scholz உக்ரேனுக்கு F-16 வழங்கும் திட்டம் தம்மிடமில்லை என்றார். G-7 மாநாட்டின் போது அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் உக்ரேன் விமானிகளுக்கு F-16 செலுத்தும் பயிற்ச்சியை மட்டுமே குறிப்பிட்டார். அமெரிக்காவின் நட்பு நாடுகள் தம்மிடமுள்ள F-16களை உக்ரேனுக்கு வழங்கலாம் என்ற பைடன் அமெரிக்கா உக்ரேனுக்கு F-16களை வழங்குவது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. F-16 போர் விமானங்களால் உக்ரேன் போரில் பாரிய மாற்றம் ஏற்படாது என பைடன் கருதுகிறார். இரசியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு முறைமை F-16களை இலகுவில் அடையாளம் காணக் கூடியவை. எஸ்-400ஐ அழிக்கக் கூடிய தொலைதூர ஏவுகணைகள் அல்லது ஆழ ஊடுருவும் அணிகள் உக்ரேன் போரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். F-16 Block 70 மிகவும் மேம்படுத்தப்பட்டவையாகும். அவை நான்கரையாம் தலைமுறைப் போர்விமானங்களாகும். அவை இப்போது உக்ரேனுக்கு கிடைக்காது. உக்ரேனுக்கு F-16 போர் விமானங்கள் வழங்குதல் போரை மேலும் தீவிரமாக்கும் என சில நேட்டோ கூட்டமைப்பின் உறுப்புரிமை கொண்ட நாடுகள் கரிசனைச் கொண்டுள்ளன.


கிறிமியாவிற்கு ஆபத்து

F-16 போர்விமானங்கள் மிகத்தொலைவில் உள்ள இலக்குகளை அறிந்து கொள்ளக் கூடிய உணரிகளைக் கொண்டுள்ளன. இரசியாவின் SU-35 என்னும்புதிய விமானம் இரசியாவின் பழைய விமானமான MIG-29இலும் பார்க்க ஐந்து மடங்கு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியன. உக்ரேனிடம் 1991இற்கு முன்னர் (சோவியத் கால) உருவாக்கப்பட்ட MIG-29கள் உள்ளன. இரசியக் கடற்படையின் இதய நிலமாக கருதப்படும் கிறிமியாவின் எப்பகுதியிலும் உக்ரேனியர்களால் தாக்கக் கூடிய வலிமையை F-16 வழங்குகின்றது. இரசியாவின் வான்பாதுகாப்பு முறைமைகளான எஸ்-400, எஸ்-300 ஆகியவை இல்லாத இடங்களாகப் பார்த்து உக்ரேனியர்கள் தாக்கலாம். அல்லது எஸ்-300, எஸ்-400 ஐ அழிக்க வல்ல ஏவுகணைகளை அமெரிக்கா உக்ரேனில் தேர்வுக்கு உள்ளாக்கிப் பார்க்கலாம். சிரியப் போரில் இருந்து இரசியாவின் வான் பாதுகாப்பை உடைக்கும் வழிகளை அமெரிக்கா ஆய்வு செய்து வருகின்றது. உக்ரேன் போரில் இரசிய இலக்குகளை இலகுவில் வீசி அழிக்கும் திறன் F-16 போர்விமானத்திடம் உண்டு. இரசியா ஆக்கிரமித்துள்ள உக்ரேனின் நிலப்பரப்புக்கள் மீது F-16 துல்லியமாகத் தாக்குதல் செய்யும். போலாந்து வழங்கும் என எதிர் பார்க்கப்படும் F-16இல் எல்லா புதிய ஏவுகணைகளை எடுத்துச் செல்லலாம். எந்த வகையான F-16, எத்தனை F-16 உக்ரேனுக்கு வழங்கப்படவிருக்கின்றது என்பதும் அவற்றுடன் எந்த வகையான ஏவுகணைகள் உக்ரேனுக்கு வழங்கப்படவிருக்கின்றன என்பதும் தான் உக்ரேனின் போரில் F-16 செய்யவிருக்கும் தாக்கத்தை முடிவு செய்யும். அரபு நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது F-16மூலம் செய்யும் தாக்குதல்களைப் போல் உக்ரேனால் இரசியாமீது தாக்குதல் செய்ய முடியாத அளவிற்கு இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை உன்னதமானவை.

விமானிகளின் திறன் விமானங்களையும் தாண்டி போர்முனையின் முடிவுகளைச் செய்யக் கூடியவை என்பதை இஸ்ரேலியப் வான்படையினர் பல தடவைகள் உறுதி செய்துள்ளனர். உக்ரேன் விமானிகளின் திறன் முக்கிய பங்கு வகிக்கும். F-16 போர் விமானங்களை ஓட்டும் பயிற்ச்சியை ஒரு தேர்ச்சி பெற்ற விமானிக்கு போதிக்கவே மூன்று மாதத்திற்கு மேல் எடுக்கும். உக்ரேன் தனது Spring Offensiveஇல் F-16 போர் விமானங்களை களத்தில் இறக்கி சண்டை செய்ய முடியாது Spring பருவகாலம் ஜூன் மூன்றாம் வாரத்துடன் முடிந்துவிடும். Summer Offensive?

Thursday 11 May 2023

Spring Offensive: உக்ரேன் இரசியாவை விரட்டுமா?

 


2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ பெருமளவு சுடுகலன் பாவிப்புக்களையோ செய்யும் நிலையில் உக்ரேன் இல்லை. இரசியாவின் நகர்வுகளைப் பார்க்கும் போது அது மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதிலும் பார்க்க தான் ஏற்கனவே கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றது. அத்துடன் கிறிமியாவில் உள்ள துறைமுகங்கள், கடற்கலன்கள், இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் இரசியா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கைப்பற்றிய பகுதிகளை இழந்த இரசியா

2022 பெப்ரவரி தொடங்கிய  போரின் பின்னர் 2022 செப்டம்பரில் உக்ரேனின் நிலப்பரப்பில் 27%ஐக் கைப்பற்றியிருந்த இரசியா அதன் பின் பல இடங்களில் பின்வாங்கி தற்போது 18% நிலப்பரப்பை மட்டும் வைத்திருக்கின்றது. உக்ரேனின் வடகிழக்கில் உள்ள கார்க்கீவ் மற்றும் தெற்குப் பதியில் உள்ள கேர்சன் ஆகிய இடங்களில் இரசியப் படையினரை உக்ரேன் பின்வாங்கச் செய்துள்ளது. சிறிய பாக்மூட் நகரை கைப்பற்ற இரசியாவின் கூலிப்படையினர் ஆறுமாதமாக முயற்ச்சி செய்தனர். 2023 மே 9-ம் திகதிக்கு முன்னர் அதை முழுமையாக கைப்பற்றி இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் மார்தட்டும் புட்டீனின் திட்டம் நிறைவேறமல் போய்விட்டது. மாறாக இரசியக் கூலிப்படையைன் தளபது தனது படை மக்மூட் நகரை இரசியப் படையினரிடும் கையளித்து விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். 2023 மே 10-ம் திகதி உக்ரேனியர்கள் மக்மூட் நகரின் மூன்று சதுர கிமீ நிலப்பரப்பில் இருந்து இரசியர்களைப் பின்வாங்கச் செய்துள்ளனர்.

சிறு தாக்குதல்கள் பெரும் நன்மை

இரசிய – உக்ரேன் போர் முனை அறுநூறு மைல் நீளமானதாக உள்ளது. அந்தளவு நீளமான போர் முனை உக்ரேனுக்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். அதில் எங்காவது சிறிய அளவில் உக்ரேனால் இரசியாவிற்கு அவமானம் ஏற்படக்கூடிய வகையில் தாக்குதல் செய்வது உக்ரேனுக்கு பயனுள்ளதாக அமையும். அத்தாக்குதல்களால் இரசிய அதிபர் புட்டீனின் நெருக்கமானவர்களிடையே உக்ரேன் மீதான சிறப்பு படை நடவடிக்கை மிகவும் விரயமானது, பயனற்றது, தொடர்ந்து நடத்த முடியாதது என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்கலாம். புட்டீனின் படைகள் மீது மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தினால் அவரின் எதிர்வினை எப்படி இருக்கும் எனச் சொல்ல முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அதனால் புட்டீனை இரசியர்களிடமிருந்து தனிமைப் படுத்துவது அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.



சிறிதான வெற்றி விழா அணிவகுப்பு

2023 மே மாதம் இரசியா தனது 2-ம் உலகப் போர் வெற்றி அணிவகுப்பைச் செய்தது. வழமையாக பத்தாயிரம் முதல் பதினான்காயிரம் படையினருடன் செய்யப்படும் இந்த அணிவகுப்பு இம்முறை ஏழாயிரம் படையினருடன் செய்யப்பட்டது. அதைப் பார்வையிடப் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்து ஒளிபரப்பை பார்க்க மக்கள் பணிக்கப்பட்டனர். தலைநகரைத் தவிர மற்ற பல இடங்களில் அணிவகுப்பு இரத்துச் செய்யப்பட்டது. உக்ரேனிய ஆழ ஊடுருவிகளுக்கு அஞ்சி இரத்துச் செய்யப்பட்டிருக்கலாம். அணிவகுப்பில் ஒரே ஒரு போர்த்தாங்கி மட்டும் பாவிக்கப்பட்டது. இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் SU-57 பங்கு பற்றியதாக காட்டப்பட்டவை கணினியால் உருவாக்கப்பட்ட அசைவுப்படங்கள் என சில நேட்டோ நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்தன.

உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive)

உக்ரேனியர் தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள் எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன. உக்ரேன் செய்யவிருக்கும் தாக்குதலிற்கு “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) எனப் பெயரும் இட்டுள்ளனர். குளிர்காலம் முடிந்து இளவேனிற் காலத்தில் தாக்குதல் செய்யலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. குளிர்காலம் 2023 மார்ச் 20-ம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. ஜூன் 21-ம் திகதிவரை இளவேனிற் காலம் தொடரும். சிலர் உக்ரேன் ஏற்கனவே தாக்குதல்களைத் தொடங்கி விட்டது என்பதற்கு:

1. மார்ச் – 23-ம் திகதி Zaorizhzhia குண்டுவெடிப்பு

2. மே 2-ம் திகதி கிறிமியாவில் எரிபொருள் களஞ்சியத்தின் மீது தாக்குதல்.

3. மே 3-ம் திகதி தென் கிழக்கு இரசியாவில் Bryansk பிரதேசத்தின் தொடருந்து நிலைகள்மீது எறிகணைத் தாக்குதலும் அங்குள்ள விமானத் தளத்தின் மீது ஆளிலித்தாக்குதலும்.

ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். வேறு சிலர் இவை முன்னேற்பாட்டுத் தாக்குதல்கள் மட்டுமே இரசியப் படைகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல் இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது என்கின்றனர்.

 

இரசியாவிற்கு அதிச்சிக்கு மேல் அதிர்ச்சி

உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive) ஐ தடுப்பதற்காக 2023 மே மாதம் 6-ம் திகதி உக்ரேனின் பல்வேறு நகரங்கள் மீது இரசியா பல ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அவற்றில் ஒரு மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணை ஒன்றை உக்ரேன் அமெரிக்காவின் patriotic என்னும் வான்பாதுகாப்பு முறைமை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் அறிவித்து உலகப் படைத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் வலிமை எந்த நாட்டிடமும் இல்லை என பரவலாக நம்பப்பட்டது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி மேல் உள்ளன எனவும் நம்பப்பட்டது. அந்த அதிச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா $1.2 பில்லியன் உதவியை உக்ரேனுக்கு வழங்கவுள்ளது என்ற செய்தி 2023 மே 9-ம் திகதி வெளிவந்தது. இது உக்ரேனின் நீண்ட கால வான் பாதுகாப்புக்கானது எனவும் அமெரிக்கா சொன்னது. அமெரிக்காவும் மற்ற நேட்டோ நாடுகளும் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என நம்பிய புட்டீன் இதை எப்படி எதிர் கொள்ளப்போகின்றார்? அமெரிக்கா தனது புதிய படைக்கலன்களை உக்ரேன் போர்க்களத்தின் இரசியாவின் புதிய படைக்கலன்களுக்கு எதிராக பாவித்து தேர்வுக்கு உள்ளாக்குகின்றதா என்பது இரசியாவிற்கு இன்னும் ஒரு அதிர்ச்சி. இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்க patriotic சுட்டு வீழ்த்திய செய்தி மே  6ம் திகதி வெளிவந்தது

உக்ரேனின் “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) ஒரு பெரிய அதிரடித் தாக்குதலாக இருக்காது. இரசியர்கள் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில் சிறிய பல தாக்குதல்களாக இருக்கும்.

இப்போது எதிர்த்தாக்குதல் நடக்க மாட்டாது. எமது போர் வீர ர்களை போதிய படைக்கலன்களின்றி களத்திற்கு அனுப்ப மாட்டோம் என்றார் உக்ரேனிய அதிபர்.

தங்களிடம் பதில் தாக்குதல் பற்றிய விபரங்களைக் கேட்க வேண்டாம் என்றார் உக்ரேனிய துணைப்பாதுகாப்பு அமைச்சர்.

2023 ஏப்ரல் 28-ம் திகதி உக்ரேனில் பல இடங்களில் இரசியா தாக்குதல்களைச் செய்திருந்தது. உக்ரேனின் படைக்கலக் களஞ்சியங்கள் எங்கு இருக்கின்றன எனத் தெரியாத வகையில் குடிசார் உட்-கட்டுமானங்களுக்கு நடுவில் உக்ரேன் அவற்றை மறைத்து வைத்திருக்கின்றது. அவற்றை அழிப்பதற்கு இரசியா செய்யும் தாக்குதல்கள் பல அப்பாவி மக்களுக்கு உயிரிழப்புக்களையும் சொத்து இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன.

உக்ரேனியர் தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள் எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

உக்ரேனியர் தமது பதிலடியை எப்போது செய்வார்கள் என்பது கால நிலையில் பெரிதும் தங்கியுள்ளது என்றார் உக்ரேனியப் படைத்தளபதி. பனி உருகி சேறாக இருக்கும் போது படைக்கலன்களையும் வண்டிகளையும் நகர்த்துவது சிரமமாக இருக்கும். அதனால் இளவேனிற் காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

உக்ரேனின் தாக்குதல் Zaporizhzhiaவைக் கைப்பற்றி பின்னர் அங்கிருந்து கிறிமியாவிற்கான வழங்கற்பாதைகளைத் துண்டிப்பதாக அமையலாம் என சிலர் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...