Followers

Saturday 30 April 2022

இம்ரான் கான் இரண்டாம் ஆட்டத்தில் வெல்வாரா?

 

2022 ஜனவரியில் இம்ரான் கானை பாக்கிஸ்தானின் ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை பாக்கிஸ்தானின் படையினரும் எதிர்க்கட்சியினரும் முடுக்கி விட்ட போது. தான் ஆட்சியில் இருக்கும் போது அவரது எதிரிகளுக்கு உள்ள ஆபத்திலும் பார்க்க ஆட்சியில் அகற்றப் பட்ட பின்னர் வரப்போகும் ஆபத்து அதிகமானதாகவே இருக்கும் என முழங்கினார். மேலும் அவர் தான் தனது ஆதரவாளர்களுடன் தெருவில் இறங்கினால் தன் எதிரிகளுக்கு ஓடி ஒளிக்க இடமிருக்காது என்றார். அவர் சூளுரைத்த படியே அவருக்கு ஆட்சியில் இருக்கும் போது உள்ள ஆதரவிலும் பார்க்க அதிக அளவு ஆதரவு பாக்கிஸ்தான் மக்கள் மத்தியில் பெருகுவதுடன் பாக்கிஸ்தான் படைத்துறையின் மீது மக்கள் அதிக வெறுப்பு காட்டுகின்றனர்.

இம்ரான் கானின் ஆதரவு அதிகரித்துள்ளது

இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அமெரிக்காவும் பாக்கிஸ்தான் படைத்தளபதி கமார் ஜாவிட் பஜ்வாவும் இணைந்து சதி செய்தே அகற்றினர் என இம்ரான் சொல்லுவதை பல பாக்கிஸ்தான் மக்கள் நம்புகின்றனர். அமெரிக்கா இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது என உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதற்கு பாக்கிஸ்தானியர் விதி விலக்கல்ல. தலைமை அமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இம்ரான் கான் பாக்கிஸ்தானின் முக்கிய நகரங்களில் எல்லாம் பல பேரணிகளை நடத்தியுள்ளார். அவற்றில் திரண்ட மக்கள் தொகை இம்ரான் கானின் ஆதரவுத் தளம் மேலும் வலிமையடைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இம்ரான் கான் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்துள்ளதும் இம்ரான் கானுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இம்ரான் கான் மக்கள் முன் உரையாற்றும் போதெல்லாம் இரண்டாவது விடுதலைப் போர் ஆரம்பம் என்கின்றார். பாக்கிஸ்தானை அமெரிக்கப் பிடியில் இருந்து விடுவிக்கும் விடுதலைப் போரை ஆரம்பிப்போமாக என அவர் முழங்குகின்றார். சிஐஏ பாக்கிஸ்தானில் படைத்தளம் அமைக்க தான் மறுத்த படியால் தன்னை ஆட்சியில் இருந்து அகற்றியது அமெரிக்காவே என இம்ரான் கான் குற்றம் சாட்டுகின்றார்.

உறுதியற்ற ஆட்சி

இம்ரான் கானைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்த ஷபாஸ் ஷெர்ஃப்பால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அதனால் பாக்கிஸ்தானுக்கு ஒரு உறுதியான அரசு தேவைப்படும் நிலையில் தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெர்ஃப்பால் உறுதியான ஆட்சி அமைக்க முடியவில்லை. அவரை ஆட்சியில் அமர்த்திய கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தல் நடத்தும்படி அவர நச்சரிக்கின்றனர்.

இம்ரானின் குற்றச் சாட்டை உறுதிசெய்த Fox News

அமெரிக்க தொலைக்காட்சி சேவையான Fox Newsஇல் தோன்றிய அதன் அரசியல் ஆய்வாளரான Rebecca Grant பாக்கிஸ்தான் உக்ரேனுக்கு ஆதரவளிக்க வேண்டும், பாக்கிஸ்தான் இரசியாவுடன் உடன்பாடுகள் செய்வதை நிறுத்த வேண்டும், சீனாவுடனான தனது ஈடுபாடுகளை மட்டுப்படுத்த வேண்டும், அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளை கைவிட வேண்டும் ஆகியவை இம்ரான் கான் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டமைக்கான காரணமாக அமைந்தது என்றார். அதைத் தொடர்ந்து இம்ரான் கான் தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியமைக்கு அமெரிக்காதான் காரணம் என்பதை Rebecca Grant உறுதிப்படுத்தியுள்ளது என்றார். 

இம்ரானிற்கு பின் மோசமான பொருளாதாரம்

2022 மார்ச்சில் பாக்கிஸ்தானில் பணவீக்கம் 12.6% ஆக இருந்தது. அத்துடன் பாக்கிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதியிலும் பார்க்க அதிகமாகவும் அரச செலவு வரவிலும் அதிகமாகவும் உள்ளது. பாக்கிஸ்தானின் வெளிநாட்டுச் செல்வாணைக் கையிருப்பு $11 பில்லியன் மட்டுமே. இது கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் மிகக் குறைவான கையிருப்பாகும். இது இரண்டு மாத இறக்குமதிக்கு மட்டும் போதுமான கையிருப்பாகும். பொதுவாக எந்த ஒரு நாடும் மூன்று மாதத்திற்கு தேவையான கையிருப்பை வைத்திருக்க வேண்டும். பாக்கிஸ்தானிற்கு இது போன்ற நிதி நெருக்கடி புதிதல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளில் பதின் மூன்று தடவை அது நிதி நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. 2021 ஜூலையில் இருந்து 2022 மார்ச் வரையிலான ஒன்பது மாதப் பகுதியில் பாக்கிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதியிலும் பார்க்க $13.7 பில்லியன் அதிகமாக இருந்தது 2020/2021 அதே ஒன்பது மாத காலப்பகுதியில் அது $275 மில்லியனாக மட்டுமே இருந்தது. இதனால் பாக்கிஸ்தான நாணயத்தின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தத்தில் 2021-ம் ஆண்டு இலங்கை இருந்த நிலையில் பாக்கிஸ்தான் 2022 ஏப்ரல் மாதத்தில் இருக்கின்றது. பாக்கிஸ்தானியர் தமது நாட்டை எப்போதும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இந்தியா பாக்கிஸ்த்தானைப் போல் அடிக்கடி பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கப் போவதில்லை என்பதை இட்டு அவர்கள் விசனம் அடைந்துள்ளனர். அத்துடன் பாக்கிஸ்த்தானின் பொருளாதாரச் சுட்டிகள் பல பங்களாதேசத்தின் சுட்டிகளிலும் பார்க்க மோசமாக இருப்பதையிட்டு அவர்கள் வெட்கப்படுகின்றன.

அடுத்த தேர்தலில் இம்ரானின் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பவை:

1. பதவியில் இருந்து விலக்கப்பட்ட உடனேயே இமரான் கான் தன் பரப்புரைக் கூட்டங்களை ஆரம்பித்தமை

2. இம்ரான் கானுக்கு பின்னால் அவரே எதிர்பார்த்திராத அளவு மக்கள் கூடுகின்றனர்.

3. உலகப் பொருளாதாரம் உக்ரேன் போரால் பாதிப்படைந்திருப்பது பாக்கிஸ்தானையும் பெரிதும் பாதித்துள்ளமை புதிய தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு எதிர்பாராத தலையிடியைக் கொடுத்துள்ளது.

4. இம்ரான் பாக்கிஸ்தானில் பயங்கரவாதத்தை தணித்திருந்தார்.

5. இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது மக்களிற்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கியிருந்தார்.

6. இம்ரான் கான் பாக்கிஸ்தானின் கல்வித்துறையில் பல முன்னேற்றங்களைச் செய்திருந்தார்.

7. ஷபாஸ் ஷெரிஃப்பின் ஆட்சி அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆட்சி என பாக்கிஸ்தான் மக்களை இம்ரான் நம்ப வைக்கின்றார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஷபாஸ் ஷெரிஃப்பின் ஆட்சி “இறக்குமதி செய்யப்பட்ட ஆட்சி” என்ற கொத்துக்குறியில் (hasgtag) நான்கு மில்லியனக்ளுக்கும் அதிகமான பதிவுகள் இடப்பட்டுள்ளன.

8. அறுபது கோடி கைப்பேசி பாவனை உள்ள பாக்கிஸ்தானில் மற்றக் கட்சியினரிலும் பார்க்க இம்ரான் கான் சமூக வலைத்தளங்களை சிறப்பாக கையாளுகின்றார்.

9. பல முன்னாள் படைத்தளபதிகள் இம்ரான் கானைப் பராட்டுகின்றனர்.

அமெரிக்கா தனது பிராந்திய நலன்களிற்காக பாக்கிஸ்தானில் ஊழல் செய்யும் சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்துவதை வழமையாகக் கொண்டுள்ளது என்பதை பாக்கிஸ்த்தானிய மக்கள் எல்லோரும் உணர வேண்டும். அமெரிக்காவின் இந்த அணுகு முறையால் பாக்கிஸ்தான் தரமான முறையில் ஆட்சி செய்வதற்கும் மக்களுக்கு நன்மையளிக்க கூடிய வகையில் பொருளாதார முகாமையை செய்வதற்கும் கடினமான ஒரு நாடாக இதுவரை இருந்து வந்துள்ளது. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பங்களாதேசையும் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு  இலங்கையையும் பாக்கிஸ்த்தான் உதாரணமாக பார்க்க வேண்டும்.

Monday 25 April 2022

உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

 


உத்திசார் படைக்கலன்கள், கேந்திரோபாயப் படைக்கலன்கள் என இரு வகை உள்ளன. உத்திசார் படைக்கலன்கள் இலக்குத் தெரிவு, இலக்கை அடைதல், இலக்கை அழித்தல் ஆகியவை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டவையாக இருக்கும். அவை குறுகிய தூரம்வரை பாயக் கூடியவையாக இருக்கும். போர்த்தாங்கிகள், கப்பல்கள், விமானங்கள் போன்ற சிறிய இலக்குகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவையாக இருக்கும். கேந்திரோபாய படைக்கலன்கள் எதிரியின் படைவலிமை, பொருளாதாரம், அரசியல் வலிமை போன்றவற்றை தகர்கக் கூடியவையாக இருக்கும். அவற்றால் படைத்தளங்கள் படைக்கல உற்பத்தி நிலையங்கள், நகரங்கள், உட்கட்டுமானங்கள், தொடர்பாடல் கட்டமைப்பு போன்றவற்றை அழிக்கலாம். இரசியாவிற்கு எதிராகப் போராட உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் வழங்கியவை எல்லாம் உத்திசார் படைக்கலன்களே. இரசியாவிற்கு எதிராக கேந்திரோபாய படைக்கலன்களை வழங்கினால் இரசியாவும் அமெரிக்காவின் எதிரி நாடுகளான ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கு அவற்றை வழங்கலாம் என்ற கரிசனையால் அவற்றை வழங்கவில்லை. வலிமை மிக்க படைக்கலன்களைக் கொண்ட எதிரியுடன் மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களைக் கொண்ட மக்கள் போராடும் போது அவர்கள் பலத்த இழப்பைச் சந்திப்பார்கள்.

நோக்கத்தை மாற்றிய புட்டீன்

உக்ரேன் மீதான இரசியாவின் போர் உக்ரேனை நாஜிவாதிகளிடமிருந்து மீட்பதையும் உக்ரேனை படையற்ற பிரதேசமாக்குவதையும் நோக்கங்களாக கொண்டது என இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் கூறிக்கொண்டு போரை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தார். அவரது இந்த இரண்டாவது ஆக்கிரமிப்புப் போரின் உண்மையான நோக்கங்கள் 1. கிறிமியா மீதான இரசியப் பிடியை உறுதி செய்வது, 2. உக்ரேனில் இரசிய சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்துவது. 3. உக்ரேனின் கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் இரசியக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. 4. இரசியப் படைகள் நிலை கொண்டுள்ள மொல்டோவாவின் Transnistria பிரதேசத்துடன் இரசியாவிற்கு ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்துவது, 5. கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கத்தை மேம்படுத்துவது. உக்ரேனில் இரசிய சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்த முடியாது என்பதை உணர்ந்த நிலையில் புட்டீன் தனது படையினரை 2022 ஏப்ரல் 6-ம் திகதி உக்ரேன் தலைநகரை சுற்றி வளைத்த தனது படையினரை அங்கிருந்து முழுமையாக விலக்கிக் கொண்டு உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் அங்கு தன் படையினரை அதிகரித்தார். டொன்பாஸ் போருக்கு பொறுப்பாக சிரியாவின் கசாப்புக் கடைக்காரர் என மேற்கு நாடுகள் விபரிக்கும் ஜெனரல் அலெக்சாண்டர் வோர்ணிக்கோவை புட்டீன் நியமித்தார். இரசிய கட்டளைத் தளபதி ருஸ்டாம் மின்னெகயேவ் இரசியா அயல்நாடுகளின் நிலங்களை வென்றெடுக்க உள்ளது என்றார்.


உதவிகளை அதிகரித்த அமெரிக்கா

உக்ரேனின் கிழக்குப் பிராந்த்யத்தில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தில் போர் உக்கிரமடையவிருக்கும் நிலையில் அமெரிக்கா 2022 ஏப்ரில் 21-ம் திகதி உக்ரேனியர்களுக்கு எண்ணூறு மில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை உதவியாக வழங்குவதாக அறிவித்தது. அமெரிக்காவின் Howitzers ஆட்டிலெறிகள் தொண்ணூறை 184,000 குண்டுகளுடன் உக்ரேனுக்கு அவசரமாக வழங்குதல் அதன் முதல் கட்டமாக அமைகின்றது. அவற்றை இயக்குவதற்கான துரிதப் பயிற்ச்சியையும் அமெரிக்கப் படையினர் பெயர் குறிப்பிடாத ஐரோப்பிய நாடு ஒன்றில் வைத்து உக்க்ரேனியர்களுக்கு வழங்குகின்றனர். உக்ரேனுக்கு நிண்ட தூர ஆட்டிலெறிகள் 300 தேவைப்படுகின்றது. அமெரிக்கா 72ஐ மட்டும் கொடுத்துள்ளது. உக்ரேன் தலைநகர் கீவ்வைப் போல் அல்லாமல் டொன்பாஸ் பிரதேசம் சமதரைப் பிரதேசமாகும். அங்கு ஆட்டிலெறிகள் பவிப்பது அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கும் என அமெரிக்காவும் இரசியாவும் நம்புகின்றன. உக்ரேன் போரில் துருக்கியின் TB-2 ஆளிலி வானூர்திகள் சிறப்பாகச் செயற்பட்ட படியால் அமெரிக்கா Ghost Phoenix எனப்படும் ஆளிலி வானூர்திகளை மிக அவசரமாக வடிவமைத்து உக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இவை எதிரியின் இலக்கு மீது மோதி தன்னையும் அழித்து இலக்கையும் அழிக்கும் தன்மை கொண்டவை. இவை tube launched loitering munition என்னும் வகையைச் சேர்ந்தவை. அமெரிக்காவின் Switchblade என்னும் ஆளிலிவானூர்திகளைப் போன்றவை. ஏற்கனவே அமெரிக்கா அறுநூற்றுக்கும் மேற்பட்ட Switchbladeகளை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. Ghost Phoenix ஆளிலிகள் தொடர்ந்து பத்து மணித்தியாலங்கள் பறக்கக் கூடியன பத்து கிலோ மீட்டர் தொலவில் உள்ள ஆட்டிலெறிகளையும் தாங்கிகளையும் அழிக்கக் கூடியவை. அமெரிக்கா தனது தனியார் படைத்துறை உற்பத்தியாளர்களுக்கு அவசரமாக உக்ரேன் களமுனைக்கு ஏற்ப படைக்கலன்களை உருவாக்கும் வேண்டுகோளையும் விடுத்துள்ளது.



இரசியாவிற்குள் தாக்குதல்கள் தீவிரமடையலாம்

சுலோவாக்கியா தன்னிடமுள்ள பதினான்ங்கு மிக்-29 போர் விமானங்களையும் உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. உக்ரேனிடம் உதிரிப்பாகங்கள் இன்றி செயற்படாமல் இருந்த போர் விமானங்கள் தற்போது செயற்படக் கூடிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனாலும் உக்ரேனிடம் வலிமை மிக்க வான் படை இல்லை என்பதுதான உண்மை. இரசியாவின் முதன்மை கப்பலான Moskovaவை உக்ரேன் தனது சொந்த தயாரிப்பான நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் மூழ்கடித்தது. அதனை இடமறிதலில் துருக்கியின் TB-2ஆளிலிகள் முக்கிய பங்கு வகித்தன. இனிவரும் காலங்களில் அந்த ஏவுகணைகள் இரசியாவிற்குள் சென்று தாக்கலாம். ஏற்கனவே உக்ரேனின் உலங்கு வானூர்திகள் இரசியாவின் Belgorod நகருக்குள் ஊடுருவி அங்குள்ள எரிபொருள் குதங்களை அழித்துள்ளன. 2022 ஏப்ரல் 25-ம் திகதி இரசிய உக்ரேன் எல்லையில் இருந்து 154கிமீ தொலைவில் இரசியாவிற்குள் உள்ள எரிபொருள் குதம் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது. இவை போன்ற பல நிகழ்வுகள் இனி இரசிய நிலப்பரப்பில் நடக்கலாம். இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை தேர்வுக்கு உட்படுத்தப்படலாம்.

இரசியாவின் எதியோப்பியாவிற்கான தூதுவரகத்தில் இரசியாவின் கூலிப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு விடுத்ததும் அங்கு நீண்ட வரிசையில் இளையோர் திரண்டனர் எனவும் செய்திகள் வந்திருந்தன. ஜோர்ஜியா, இரசியாவின் தூரகிழக்கு பிரதேசம் ஆகியவற்றில் இருந்து பல இரசியப் படையினர் உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். டொன்பாஸ் போரின் ஆரம்பத்தில் Kharkhiv நகரம் உட்பட 42 கிராமங்களை இரசியா இலகுவாக கைப்பற்றியது. ஏற்கனவே இரசியா Mariupol, Kherson ஆகிய இரு மூக்கிய நகரங்களை இரசியா கைப்ப்ற்றியுள்ளது.

அமெரிக்காவின் செய்மதிகளின் உளவு, வேவு, கண்காணிப்பு உக்ரேனுக்கு நல்ல பயன்களைக் கொடுக்கின்றன. ஆனால் கேந்திரோபாயப் படைக்கலன்களை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்காமல் இரசியாவை உக்ரேனால் வெற்றி கொள்ள முடியாது என்பதை அமெரிக்கா அறியும். உக்ரேனை வெற்றி கொள்ள வைப்பதிலும் பார்க்க ஒரு நீண்ட போரையே அமெரிக்கா விரும்புகின்றது.

2022 மே மாதம் உக்ரேன் போரின் திசையை முடிவு செய்யும் மாதமாக இருக்கும்.

Sunday 17 April 2022

இரசியாவின் முதன்மைக் கப்பலை மூழ்கடித்த உக்ரேனின் ஏவுகணைகள்

 


2022 ஏப்ரல் 14-ம் திகதி இரசியாவின் பத்தாயிரம் தொன் எடையுள்ள Moskva என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் உக்ரேனின் Odessa மாகாணத்திலிந்து 65 கடல் மைல் தொலைவில் கருங்கடலில் பயணிக்கையில் உக்ரேனியப் படையினர் வீசிய இரு R-360 Neptune ஏவுகணைகள் மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. அதன் தளபதி உட்பட அதில் பயணித்த 510 பேரும் கொல்லப்பட்டதாக உக்ரேன் சொல்வதை இரசியா மறுத்துள்ளது. இரசியாவின் தலைநகரின் பெயர் சூட்டப்பட்ட Moskva கப்பல் அதன் கடற்படையின் பெருமை மிகு கப்பலாகும்.  அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உக்ரேனிய உலங்கு வானூர்திகள் இரசியாவின் Belgorod நகருக்குள் ஊடுருவி இரசியப் படையினருக்கு எரிபொருள் வழங்கும் குதம் ஒன்றையும் அழித்தனர். 2022 மார்ச் மாதம் 29-ம் திகதி இன்னும் ஒரு எரிபொருள் குதம் அழிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கருங்கடல் மற்றும் அஜோவ் கடல் பகுதியில் உக்ரேன் எல்லைக்கு அண்மையாக செயற்பட்டு வந்த இரசியக் கடற்படைக்கலன்கள் யாவும் அங்கிருந்து விலகி தூரத்தில் செயற்படுவதாக போரை அவதானிப்பவர்கள் சொல்கின்றனர்.

 


இரு கேந்திர முக்கியத்துவ இழப்பு

உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தை இரசியாவின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்கு இரசியாவின் கடல் வலிமையும் Belgorod நகரில் இருந்து வழங்கப்படும் விநியோகங்களும் அவசியமாகும். முதலில் இரசியா Moskvaவில் தீப்பிடித்ததாக பொய்யுரைத்தது. பின்னர் இரசியா பழுதடைந்த Moskvaவை வேறு கப்பல் மூலம் கட்டி இழுத்துச் செல்கையில் கடலில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது. நெப்டியூன் ஏவுகணைகளின் தாக்கத்தால் Moskvaவில் உள்ள ஏவுகணைகள் வெடித்து அது நீரில் மூழிகியுள்ளது. செய்மதிகள் மூலமான அவதானிப்புக்கள் மூலம் Moskvaவின் மூழ்கடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரசியாவின் கருங்கடல் கடற்படையணியில் தலைமைக் கப்பலாக Moskva இருந்தது.

 

இரசியாவின் Moskva ஏவுகணை தாங்கி

இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரசியா இழந்த மிகப் பெரிய கப்பல் Moskva ஆகும். இரசியாவின் P-1000 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் செலுத்திகள் பதினாறு, இரசியாவின் பிரபல விமான எதிப்பு ஏவுகணை முறைமையான S-300இன் 64 செங்குத்து குழாய்கள், Osa என்னும் வான் தற்பாதுகாப்பு ஏவுகணைகளின் செலுத்திகள் நாற்பது, நீரடிஏவுகணைகள் (Torpedo) செலுத்திகள், உலங்கு வானூர்தி தளங்கள் ஆகியவற்றுடன் Moskva வழிகாட்டி கப்பல் இரசியாவின் கருங்கடல் பிராந்தியத்தின் மீதான் ஆதிக்கத்தின் கோட்டையாக இருந்தது. 12,500 தொன் எடையுள்ள Moskva 1979இல் செயற்பாட்டிற்கு விடப்பட்டது. அன்றிலிருந்து அதற்கு பல தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்ட்ன. அதில் 440மைல்கள் பாயக் கூடிய கப்பல்களை அழிக்கும் பதினாறு ஏவுகணைகள் உள்ளன. இரண்டு வகையான முப்பரிமாண ரடார்கள், கப்பலோட்டும் ரடார்கள், மூன்று வகையான தீயணைக்கும் ரடார்கள் எனப் பலதரப்பட்ட ரடாரகளும் அதில் உள்ளன. Moskvaவை இழந்தமையால் எதிரியின் விமானங்கள், ஏவுகணைகள், உலங்கு வானூர்திகள், ஆளிலிகள் போன்றவை இரசியாவின் கடற்கலனிகள் மீது தாக்குதல் செய்வதை தடுக்கும் திறன் குறைந்துள்ளது.

உக்ரேனின் உன்னத தயாரிப்பு நெப்டியூன்

உக்ரேன் முதன் முதலாக தனது நெப்டியூன் ஏவுகணையை போரில் பயன்படுத்தியுள்ளது. நெப்டியூன் துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய வழிகாட்டல் ஏவுகணையாகும். நெப்டியூன் ஏவுகணைகள் சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கப்பட்ட KH-25 என்ற ஏவுகணைகளை அடிப்படையாக கொண்டு உக்ரேனியர்களால் உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த போது உக்ரேனியர் தம் கடற்படைக்கலன்களில் எண்பது விழுக்காட்டை இழந்த பின்னர் உக்ரேனியரக்ள் நெப்டியூன் ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கினர். KH-25 ஏவுகணைகள் கடலிலும் வானிலும் இருந்து வீசப்படும் ஏவுகணைகளாகும். ஆனால் உக்ரேனியர்கள் அதில் பல மாற்றங்களைச் செய்து தரையில் பார ஊர்திகளிலும் இருந்து ஏவக் கூடிய வகையில் மாற்றியுள்ளனர். அதனால் அவை மும்முனைகளில் இருந்தும் வீசக் கூடையவை. நெப்டியூன் ஏவுகணைகள் இருநூறுமைல்கள் வரை பாயக் கூடியவை. அவற்றின் முக்கிய இலக்குகள் கடற்கலன்களாகும். உக்ரேனின் மேற்கு கரையில் உள்ள அஜோவ் கடலிலும் தெற்குப் பகுதியில் உள்ள கருங்கடலிலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்டன. உக்ரேனின் LUCH Design Bureau நெப்டியூனை உருவாக்கியது. உக்ரேனின் நெப்டியூன் ஏவுகணைகள் கருங்கடலின் எப்பாகத்திலும் தாக்கும் திறனை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. R-360 நெப்டியூன் ஏவுகணையால் ஐயாயிரம் தொன் எடையுள்ள கடற்கலனை அழிக்க முடியும் Moskva வழிகாட்டி கப்பல் பத்தாயிரம் தொன் எடையுள்ளது என்றபடியால் அதன் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டன. நெப்டியூனின் முதலாவது பரிசோதனை 2016 மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டது. எதிரியின் இடைமறிப்பு ஏவுகணைகளால் தடுக்கப்படுவதை தடுக்க நெப்டியூன் கடல் மேற்பரப்பில் இருந்து பத்து முதல் பதினைந்து மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும் இறுதியாக இலக்கைத் தாக்க முன்னர் அது மூன்று முதல் பத்து மீட்டர் உயரத்தில் பறக்கும். அந்த சிறப்புத் தன்மையால் S-300 உட்பட பல ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளைக் கொண்ட Moskva வழிகாட்டி கப்பலை அழித்தது. ஐந்து மீட்டர் நீளமான நெப்டியூன் ஏவுகணை 320 இறாத்தல் எடையுள்ள உயர் திறன் வெடிபொருள் கொண்ட குண்டுகளைத் தாங்கிச் செல்லும். அது தனது வழிகாட்டல் முறைமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இரசியாவின் கண்காணிப்பு, வேவு, உளவு தோல்வி

பெருவல்லரசாக கருதப்படும் இரசியா தன் எதிரியின் நகருவுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக வேவு பார்க்க வேண்டும். போதிய உளவாளிகளை எதிரிகளிடையே நிறுத்தியிருக்க வேண்டும். நெப்டியூன் ஏவுகணையை செலுத்துவதற்கு பெரிய பார ஊர்தி தேவை. அதன் உயர்ந்த செலுத்தியை தூக்கி நிறுத்த வேண்டும். இவற்றை செய்மதியில் இருந்தே அவதானிக்க முடியும். உக்ரேனின் ஏவுகணைச் செலுத்திகளையும் அதன் ஏவுகணை இருப்பு களஞ்சியங்களையும் அழிக்க இரசியா தவறியமை அதன் வலுவற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

2022 பெப்ரவரி 24-ம் திகதி பல நேட்டோ நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட வலுவுள்ள படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்குகின்றன. முதல் தடவையாக வலிமை மிக்க படைக்கலன் ஒன்றை இரசியாவிற்கு எதிராக பாவித்து இரசியாவிற்கு பேரிழப்பை உக்ரேன் ஏற்படுத்தியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக இருந்த போது மிகச் சிறந்த படைத்துறை உற்பத்தி நாடாக இருந்த உக்ரேன் மீண்டும் தன் படைக்கல உற்பத்தியை மேம்படுத்த ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் நெப்டியூன் அதன் படைக்கல உற்பத்தியின் மீள் எழுச்சியை உறுதி செய்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட நெப்டியூன் ஏவுகணைகள் உக்ரேனிடம் உள்ளன.

 

Thursday 14 April 2022

உக்ரேனின் டொன்பாஸ் பிராந்தியத்திற்கு சுயநிர்ணய உரிமையுண்டா?

 


2022 ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து உக்ரெனின் கிழக்குப் பிரதேசமான டொன்பாஸ் பகுதியில் இரசிய அதிபர் புட்டீன் தனது ஆக்கிரமிப்பு போரை தீவிரப்படுத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தை இரசியப் படையினரின் ஆதரவுடன் அங்கு வாழும் இரசிய மக்கள் பிரிவினைவாதப் போர் தொடுத்தனர். உக்ரேனின் முழு நிலப்பரப்பையும் ஆக்கிரமிக்கும் விளடிமீர் புட்டீனின் திட்டத்தில் அது முக்கிய பங்காக அமைந்தது. உக்ரேனில் மிகவும் கைத்தொழில் மயமாக்கப்பட்ட டொன்பாஸ் பிரதேசத்தின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளை இரசியப் படையினரும் டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர்களும் இணைந்து 2014-15இல் நடந்த போரில் கைப்பற்றிக் கொண்டனர். டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர்களுக்கு அங்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா என நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

டொன்பாசின் வரலாறு

ஆறாம் நூற்றாண்டில் உக்ரேனிலும் கிறிமியாவிலும் கிரேக்கர்கள் குடியேற்ற ஆட்சி ஏற்படுத்தினர். அதன் பின்னர் அவர்களுடன் ஈரானியர்கள் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து துருக்கியர்கள் அப்பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினர். துருக்கியர்களிடமிருந்து உக்ரேனியர்கள் ஏழாம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களை அரபுக்கள் ஆக்கிரமித்தனர். உக்ரேனியர்கள் கிரேக்கர், ரோமர், துருக்கியர், அரபுக்கள், ஈரானியர் போன்ற பண்டைய நாகரிகம் மிக்க இனங்களுடன் தொடர்பு பட்டவர்களாக இருந்தபடியால் அவர்களும் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர். தற்போதைய இரசியத் தலைநகர் மொஸ்க்கோ ஒரு கிராமமாக இருந்த போது உக்ரேனியத் தலைநகர் கீவ் ஒரு உலகத்தரம் வாய்ந்த நகராக இருந்தது. 18-ம் நூற்றாண்டின் பின்னரே உக்ரேனின் கிழக்குப் பதியான டொன்பாஸ் பிரதேசத்துடன் இரசியர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

நிலக்கரிக்காக நிலம் பிடித்த இரசியர்

கைத்தொழில் புரட்சி ஐரோப்பாவிற்கு பரவிய நிலையில் நிலக்கரிக்கான தேடல் ஐரோப்பாவில் தீவிரமானது. 1721-ம் ஆண்டு உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொன்பாஸ் பிரதேசத்தில் நிலக்கரி இருப்புக் கண்டறியப்பட்டது. மரம் பழுக்க வரும் வௌவால்களாக கிரேக்கர், சேர்பியர், இரசியர் எனப்பலர் அங்கு சென்று நிலக்கரி அகழும் தொழிலில் ஈடுபட்டனர். பிரித்தானிய முதலாளிகளும் அங்கு அக்கறை காட்டினர். 1869-ம் ஆண்டு வேல்ஸ் வர்த்தகரான John Hughes என்பவர் டொன்பாஸ் பகுதியில் உருக்கு அகழ்வில் ஈடுபட்டு அங்கு பெரிய உருக்கு ஆலையையும் நிறுவினார். அவரே Donetsk என்ற நகரை உருவாக்கிவர் ஆவார். Donetsk இரசியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். Russian Imperial Census என்ற இரசிய ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிரிவு 1897 ச்செய்த கணக்கெடுப்பின் படி Donetsk மாகாணத்தில் 52.4% உக்ரேனியர்களும் 28.7% இரசியர்களும் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள், ஜெர்மனியர்கள், யூதர்கள், தாட்டார்கள் போன்றவரகளும் அங்கு வாழ்ந்துள்ளனர். 1918-ம் ஆண்டு வரை உக்ரேனிய குடியரசின் கட்டுப்பாட்ட்டில் டொன்பாஸ் பிரதேசம் இருந்தது. பின்னர் இரசியர்கள் உக்ரேனை ஆக்கிரமித்து உக்ரேனையும் தங்களது “பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு” என்பதன் ஒரு பகுதியாக்கினர். உக்ரேனையும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு ஒரு “குடியரசு” எனவும் பறைசாற்றினர். சோவியத் ஒன்றிய காலத்தில் அதில் இணைக்கப்பட்ட குடியரசுகளின் வளம் மிக்க பகுதிகளில் இரசியர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டனர். அதனால் டொன்பாஸ் பிரதேசத்தில் இரசியர்கள் திட்டமிட்ட முறையில் பெரும்பான்மை இனமாக்கப்பட்டனர். Donetsk பகுதியில் 52.4% விழுக்காடாக இருந்த உக்ரேனியர்கள் 46% ஆக்கப்பட்டு 28.7% ஆக இருந்த இரசியர்கள் 48.15% ஆக அதிகரிக்கப்பட்டனர். இதுவே Luhansk மாகாணத்திலும் நடந்தது. ஆக்கிரமித்து இணைத்து குடியேற்றம் மூலம் பெரும்பான்மை ஆக்கப்பட்டவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா? கட்டமைக்கப்ப்ட்ட இனக்கொலை, இனச்சுத்தீகரிப்பு போன்றவற்றை இரசியா பல நூற்றாண்டுகளாக உக்ரேனியர்களுக்கு சொந்தமாக இருந்த டொன்பாஸ் பிரதேசத்தில் செய்யவில்லை என்பதை மறுக்க முடியுமா?

உக்ரேனின் ஒரு பகுதி டொன்பாஸ்

சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்த போது டொன்பாஸ் பகுதி உக்ரேனின் பகுதியாகவே இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பிற்கு ஏற்ப உக்ரேன் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்றது. ஒரு நாடாக ஐக்கிய நாடுகள் சபையால் உக்ரேன் ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது அதன் ஒரு பகுதியாக டொன்பாஸ் இருந்தது. உக்ரேன் சோவியத் ஒன்றியதில் இருந்து பிரியும் போதோ அல்லது தனிநாடாகப் பிரகடனப் படுத்தப் பட்ட போதோ டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பெரும்பாலான உக்ரேனியர்களின் கருத்து தம்முடைய கடந்த காலத்தை இரசியா அபகரித்தது. என்பதாகும். அதே இரசியா தமது எதிர்காலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்பதும் பெரும்பாலான உக்ரேனியர்களின் நிலைப்பாடும் ஆகும். அதனால அவர்கள் இரசியாவின் இரசியாவின் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதிலும் பார்க்க வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பில் இணைய விரும்பினார்கள் இதற்கான நகர்வுகளை 2014இல் உக்ரேனியர்கள் செய்த போது இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது. 2019இல் உக்ரேனின் அரசியலைப்பு நேட்டோவில் உக்ரேன் இணைவதை உறுதி செய்யும் வகையில் உக்ரேன் அதிபர் செயற்பட வேண்டும் என திருத்தப்பட்டது. இரண்டாம சோவியத் ஒன்றியத்தை (USSR-2.0) கட்டி எழுப்பும் வெறியுடன் இருக்கும் விளடிமீர்புட்டீனுக்கு அது கடும் சினத்தை மூட்டியதனால் 2021இல் உக்ரேனை சுற்றி இரசியப் படைகளை நிறுத்தி உக்ரேனை ஆக்கிரமிப்பேன் என மிரட்டிய போது உக்ரேனியர்கள் மசியவில்லை. சீற்றமடைந்த புட்டீன் 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனை ஆக்கிரமிக்க அங்கு தன் படைகளை அனுப்பினார்.

புட்டீனின் நில அபகரிப்பு வெறி

2014இல் உக்ரேனின் கிழக்குப் பகுதிக்கு இரகசியமாக இரசியப் படையினரை அனுப்பி அங்கிருந்த உக்ரேனியப் படையினர் விரட்டப்பட்டனர். அதனால் டொன்பாஸ் பகுதியின் மீதான கட்டுப்பாட்டை உக்ரேனியர்கள் இழந்தனர். டொன்பாஸ் பகுதியின் Donetsk மற்றும் Luhansk மாகாணங்கள் தம்மை தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. அதேவேளை கிறிமியாவை கைப்பற்றிய இரசியப்படைகள் அங்கு கருத்துக் கணிப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதை இரசியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். உக்ரேனை முழுமையாக அபகரிக்காமல் பகுதி பகுதி பகுதியா அபகரிக்கும் திட்டத்தின் முதற்பகுதியை புட்டீன் 2014 சிறப்பாக நிறைவேற்றியமைக்கு காரணம் உக்ரேனியர்கள் இரசிய ஆக்கிரமிப்பிற்கு தயார் நிலையில் இல்லாமல் இருந்தமையே காரணம். 2008-ம் ஆண்டு ஜோர்ஜீயா மீது இரசியா ஆக்கிரமிப்பு போர் தொடுத்த போது உக்ரேனியர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இரசிய எல்லையில் உள்ள போல்ரிக் நாடுகளான எஸ்துவேனியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன. ஆனால் அந்த நாடுகளால் இரசியாவிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் ஏற்பட்டதில்லை. 2014 உக்ரேனின் நிலங்களை இரசியா அபகரித்த பின்னர் இரசியாவின் பல அயல் நாடுகள் தமது நாடுகளில் நேட்டோ படைகள் நிலை கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. போலாந்து அமெரிக்கப்படையினர் தமது நாட்டில் நிலை கொள்வதற்கான செலவை ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு வழங்குவோம் எனச் சொல்லி அமெஇர்க்கப் படையினரை தம் நாட்டில் நிலை கொள்ள வைத்தனர். கரும்பு தின்னக் கைக்கூலி கிடைத்த நிலை அமெரிக்க ஆதிக்கவாதத்திற்கு!

 

2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனுக்கு படை அனுப்ப முன்னர் உரையாற்றிய புட்டீன் உக்ரேன் ஒரு நாடாக இருப்பதற்கு தகுதியற்றது. அதன் எல்லை போலியானது என்றார். ஆனால் உக்ரேனின் டொம்பாஸ் பிரதேச மாகாணங்களான Donetsk மற்றும் Luhansk ஐ தனி நாடுகளாக அங்கீகரித்தார். நியாயமற்ற அந்தக் கூற்று உக்ரேனியர்களைச் சினமடையச் செய்தமையால் உக்ரேனியர்கள் இரசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். உக்ரேனும் இரசியாவும் இலங்கையின் இனக்கொலைக்கு உதவிய நாடுகள். உக்ரேன் தனது விமான ங்களை விமானிகளுடன் இலங்கைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியது. அவர்கள் இலங்கையில் குண்டு போட்டார்கள் என்பதால் தமிழர்கள் உக்ரேனியர்கள் மீது வஞ்சத்தை வைத்திருக்கலாம் அதற்காக இரசியப் படையினர் உக்ரேனில் செய்யும் அட்டூழியங்களை நியாயப்படுத்தக் கூடாது.

Monday 11 April 2022

இரசியாவின் SU¬-35 விமானத்தை சுட்டுவீழ்த்திய உக்ரேன்

 


உலகிலேயே முன்னணி விமானங்களையும் நன்கு பயிற்ச்சி பெற்ர விமானிகளையும் கொண்டதாகக் கருதப்படும் இரசியாவின் உயர் தொழில்நுட்ப 4++ தலைமுறைப் போர் விமானமான SU­-35 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரேன் அறிவித்துள்ளது. அதன் விமானி அதிலிருந்து வெளித்தள்ளப்பட்டு வான்குடை (parachute) மூலம் தரையிறங்கிய போது அவரைக் கைது செய்ததாவும் உக்ரேன் அறிவித்துள்ளது. ஐம்பது மில்லியன் டொலர் பெறுமதியான SU­-35 Flanker-E சண்டை விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் Kharkivஇல் இருந்து 120கிமீ தொலைவில் உள்ள izium நகரில் விழுந்துள்ளது. இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57 இன்னும் உக்ரேனில் களமிறங்கவில்லை என்றும் அது களமிறங்க இன்னும் தயாராகவில்லை எனவும் கருதப்படுகின்றது. 

தாழ்த்தப்பட்ட உயர் தொழில்நுட்பம்

இரசியாவின் SU­-35 போர்விமானம் எதிரியின் ரடார்களுக்கு புலப்படமாட்டாது என இரசியர்கள் பறைசாற்றியிருந்தனர். அதனால் அதை உக்ரேனுக்குள் பறக்க விட்டு அங்குள்ள ரடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு முறைமைகளை அழிப்பது என்ற நோக்கத்துடன் உக்ரேனுக்குள் சென்ற போதே அது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரேனுக்குள் சென்ற இரசியப்படையினர் பல தாங்கிகளையும், உலங்கு வானூர்திகளையும் ஆளணியையும் இழந்து பல படைத்துறை நிபுணர்களின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற வேளையில் இரசியா தனது மிக உயர் தொழில்நுட்ப விமானத்தை இழந்திருப்பது அவர்களுக்கும் மேலும் அவமானகரமாக அமையும். இரசியாவின் வலிமை மிக்க Mi-28 உலங்கு வானூர்தி ஒன்று பிரித்தானியாவின் தோளில்காவும் ஏவுகணைச் செலுத்தியில் இருந்து உக்ரேனியர்கள் ஏவிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில நாட்களில் SU­-35 போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

சீனா தனக்கு பாடம் என்கின்றது

இரசியாவின் Su-35 சுட்டு வீழ்த்தப்பட்சதை செய்தியாக வெளியிட்ட சீனாவின் South China Morning Post ஊடகம் அது சீனாவிற்கு ஒரு பாடம் என்கின்றது. Su-35 விமானம் ஆபத்தான வகையில் தாழப் பறந்தமையே சுடப்பட்டமைக்கான காரணமாக அது தெரிவிக்கின்றது. SEAD என்னும் Suppression of Enemy Air Defence நடவடிக்கையில் ஈடுபட்ட போதே Su-35 சுட்டு விழ்த்தப்பட்டதாக பல்கேரிய ஊடகம் சொல்கின்றது. SEAD நடவடிக்கையின் போது விமானங்கள் எதிரியின் வான் பாதுகாப்பு முறைமை, தொடர்பாடல் முறைமை, கண்காணிப்பு முறைமை போன்றவை அழிக்கப்படும்.



உன் கைப்பிள்ளை உன்னையே சரித்தது

The Drive என்ற இணையத்தளம் இரசியா தனது புதிய 9K37BUK வான் பாதுகாப்பு முறைமையை உக்ரேனில் பாவிப்பதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனின் தென்பகுதியில் உள்ள Kherson நகரைக் கைப்பற்றுவதற்கு இரசியாவிற்கு வான் ஆதிக்கம் தேவைப்பட்ட போது 9K37BUK உக்ரேன் போர் முனையில் பயன்படுத்தப்பட்டது என்றது The Drive. Kyiv Independent என்னும் உக்ரேனிய ஊடகம் 2022 ஏப்ரல் 3-ம் திகதி உக்ரேனில் செயற்பட்டுக் கொண்டிருந்த இரசியாவின் 9K37BUK என்னும் வான் பாதுகாப்பு முறைமை ஒன்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனியர்கள் தமது சிறப்புப் படையணி ஒன்றை 9K37BUK ஐக் கைப்பற்ற அனுப்பினார்கள் என்றும் அது வெற்றிகரமாக தங்கள் பணியை முடித்தனர் என்றும் உக்ரேனியர்கள் தெரிவிக்கின்றனர். அதைக் கைப்பற்றிய பின்னர் அதி அழிக்க வந்த அழிக்க வந்த இரசியாவின் Su-35 ஐ உக்ரேனியர்கள் முந்திக் கொண்டு அழித்து விட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:

1. எல்லா வகையிலும் எதிரிக்கு புலப்படாமை

2. எதிரியால் இடைமறிக்கப்பட முடியாமை

3. உயர் செயற்பாடுடைய விமானக் கட்டமைப்பு (high-performance airframes)

4.  மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் பறப்பு அம்சங்கள் (advanced avionics features)

5. சிறந்த வலையமைப்புத் தொடர்பாடல் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணனித் தொகுதி (highly integrated computer systems capable of networking with other elements within the battlespace for situation awareness).

 

இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானப் பிரச்சனை.

ஒற்றை விமானி மூலம் இயக்கப்படும் Su-35 மணிக்கு 1500மைல்கள்(2400கிமீ) வேகத்தில் 2200மைல்கள் (3600கிமீ) தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கக் கூடியது. 2014-ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கும் Su-35 வானில் இருந்து வானிற்கும் வானில் இருந்து தரைக்கும் ஏவக் கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். ஐந்தாம் தலைமுறைப் போர் வானூர்திகளின் முக்கிய திறன் அவற்றை எதிரிகளின் ரடார்களால் கண்டறிய முடியாமையே. அதனால் அவற்றை Stealth (புலப்படா) என அழைப்பர். இரசியாவான் இன்னும் முழுமையான புலப்படாப் போர்வானுர்திகளை இரசியாவால் உருவாக்க முடியவில்லை. இரசியா தனியாக ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Sukhoi T 50ஐ உருவாக்குவதாகவும் இந்தியாவுடன் இணைந்து வேறு ஒரு வகை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதாககும் இரசியா முடிவு செய்தது. இருந்தும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கான இயந்திரத்தை உருவாக்குவதில் பின்னர் தாமதம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளில் இருந்து இயந்திரம் வாங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் எந்த ஒரு மேற்கு நாடும் தமது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரம் இரசியாவின் கைகளுக்குப் போவதை விரும்பவில்லை. இதனால் இரசிய இந்தியக் கூட்டு ஐந்தாம் தலைமுறைப் போர்வானூர்தி உருவாக்கும் திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. Su-35 முதற் பறப்பைச் செய்த போது அதை 4++தலைமுறைப் போர் விமானம் என்றே புட்டீன் அறிவித்தார். பின்பு இரசியா முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57ஐ உருவாக்கியது. அது இன்னும் போதிய எண்ணிக்கையில் உருவாக்கப்படவைல்லை. முன்மாதிரி விமானங்கள் தான் உருவாக்கப்பட்டன.

உக்ரேனியர்கள் பிரித்தானியாவின் தோளில் வைத்துச் செலுத்தப்படும் Starstreak missiles ஐப் பாவித்து இரசியாவின் Mi-28 உலங்கு வானூர்தி ஒன்றையும் 2022 ஏப்ரல் மாதத்தில் சுட்டு வீழ்த்தியமையும் இரசியாவிற்கு அவமானமாக அமைந்தது. இரசியாவின் போர் விமானங்கள் எப்போதும் excellent manoeuvrability and thrust vectoring engines கொண்டவை என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் வானில் வைத்து எதிரி விமானங்கள் மோதிக் கொள்ளும் நாய்ச் சண்டையில் (Dog fight) எப்போதும் இரசிய விமானிகளும் விமானங்களும் சிறப்பாக செயற்படும். உக்ரேனில் இரசியாவின் படைக்கலன்களுக்கு ஏற்படும் பின்னடைவு இரசியாவின் படைக்கல விற்பனையை பெருமளவில் பாதிக்கும் அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.

 

Saturday 9 April 2022

இரசிய விமானங்களுக்கு சவாலான Starstreak ஏவுகணைகள்

 


உக்ரேனுக்கு பிரித்தானியா 2022 மார்ச் மாதம் இனாமாக வழங்கிய உக்ரேனியப் படையினர் இரசியாவின் MI-24 உலங்கு வானூர்தியை சுட்டு விழுத்தியதில் இருந்து Starstreak ஏவுகணை படைத்துறை நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரேனியர்களுக்கு அவர்களின் அயல் நாடு ஒன்றில் வைத்து பிரித்தானியப் படைத்துறை நிபுணர்கள் Starstreak ஏவுகணைகளை இயக்குவதற்கு பயிற்ச்சி வழங்கியிருந்தனர். Starstreak ஏவுகணைகளைப் பெட்டியில் எடுத்துச் சென்று ஒரு சில நொடிகளில் பொருத்த முடியும். உக்ரேனியர்களால் சுடப்பட்ட இரசியாவின் உலங்கு வானூர்தி Starstreak ஏவுகணையால் இரண்டு துண்டங்களாக தரையில் விழுந்தது. இது முதன் முதலாக உக்ரேனியர்கள் ஏவிய Starstreak ஏவுகணையால் வீழ்த்தப்பட்டுள்ளது.

MANPAD – MAN PORTABLE AIR DEFENCE SYSTEM

குறுகிய தூர ஏவுகணை, இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய MANPAD ஏவுகணைகள் வகையைச் சார்ந்தது. இதைத் தோளிலும் வானூர்திகளை இலக்கு வைத்து செலுத்தலாம். ஒரு முக்காலியிலும் வைத்து செலுத்தலாம். தாங்கிகள் கவச வண்டிகள் சிற்றூர்திகள் போன்றவற்றில் வைத்தும் இவற்றை செலுத்தலாம் என்பது மட்டுமல்ல உலங்கு வானூர்தி மற்றும் கடற்கலன்களிலும் இருந்து இவற்றை ஏவு எதிரியின் உலங்கு வானூர்தி மற்றும் தாழப்பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தலாம். இரசியர்களிடம் வழிகாட்டல் ஏவுகணைகள் போன்ற Smart bombsஇற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள படியால் அவர்களின் உலங்கு வானூர்திகளும் விமான ங்களும் தாழப்பறந்தே குண்டுகளை வீசுகின்றன.

நகர்சார் போரில் சிறப்பாக செயற்படும்

பிரித்தானியாவின் Starstreak ஏவுகணைகள் நகர்சார் போரில் சிறப்பாகச் செயற்படக் கூடியவை. அவற்றை மாடிக்கட்டிடங்கள், மொட்டை மாடிகள் போன்றவற்றில் மறைந்திருந்து செலுத்தி எதிரியின் வானுர்திகளை அழிக்கலாம். Starstreak ஏவுகணைகள் லேசர் கதிகளால் வழிகாட்டப்படுபவை என்பதால் அவை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. இந்த ஏவுகணை வீசமுன்னர் வீசப்படும் லேசர் ஒளிக்கதிர்கள் வலிமைகுறைந்தவையாக இருப்பதால் அவற்றை எதியின் வானூர்திகளால் உணர முடியாமல் இருக்கும். இவற்றால் தாக்கப்படும் போது உடன் சேதம் (Collateral Damage) குறைந்த அளவிலேயே இருக்கும். சிறிய ஆளிலிவிமானங்களையும் இவற்றால் அழிக்கலாம்.

MACH-3 ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகம்

ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்தில் பாயக் கூடியது. அதாவது மணித்தியாலத்திற்கு 3700கி.மீ வேகம். தற்போது உலகெங்கும் உள்ள குறுந்தூர ஏவுகணைகளுக்குள் இது மிக வேகமான ஏவுகணை. எழுகிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்குகளை அழிக்கவல்லது. இரசிய விமானிகள் தங்களது விமானத்தின் பறப்பு பாதையை சடுதியாக திசை திருப்புவதில் வல்லவர்கள். அவர்களின் விமான இயந்திரங்களும் அதற்கு ஏற்ப வடிவைக்கப்பட்டுள்ளவை. அதை vector thrust engine என்பார்கள். ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் Starstreak ஏவுகணைகள் அவர்கள் விமானத்தை திசை திருப்ப முன் அதை அழித்துவிடும். அமெரிக்காவின் Stinger Missiles ஒலியிலும் பார்க்க 2.54 மடங்கு வேகம். மணித்தியாலத்திற்கு 3136கிமீ வேகம்

Starstreak இரண்டு நிலைகளைக் கொண்ட ஏவூர்தி ஓடிகளைக் கொண்டது (Two stage solid propellant rocket motor) ஒன்று பிரிக்கும் முறைமை மற்றது மூன்று உயர் அடர்த்தியான குண்டுகளைக் கொண்டது. அவை மூன்று துளைகளை இட்ட பின்னர் குண்டு வெடிக்கும்.

பழைய விமானங்களைக் கொண்டது உக்ரேன் விமானப்படை. இரசிய வானூர்திகள் உக்ரேனில் வானாதிக்கம் செலுத்தாமல் இருக்க வலிமை மிக்க வான் பாதுகாப்பு உக்ரெனுக்கு அவசியம். ஆனால் நேட்டோ நாடுகள் தொலை தூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்காமல் இருக்கின்றன. அதிகமான Stinger Missilesஉம் Starstreak missilesஉம் உக்ரேனியர்களுக்கு கிடைக்கும் போது இரசிய உழங்கு வானூர்திகள் அங்கு செயற்பட முடியாமல் போகலாம். இரசியாவின் முன்னணி விமானங்கள் உயரத்தில் இருந்தே செயற்பட வேண்டியிருக்கும்.


Thursday 7 April 2022

இரசியாவின் SU-35 விமானத்தை சுட்டுவீழ்த்திய உக்ரேன்

 


இரசியாவின் உயர் தொழில்நுட்ப 4++ தலைமுறைப் போர் விமானமான SU­-35 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரேன் அறிவித்துள்ளது. அதன் விமானி அதிலிருந்து வெளித்தள்ளப்பட்டு வான்குடை (parachute) மூலம் தரையிறங்கிய போது அவரைக் கைது செய்ததாவும் உக்ரேன் அறிவித்துள்ளது. ஐம்பது மில்லியன் டொலர் பெறுமதியான SU­-35 Flanker-E சண்டை விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் Kharkivஇல் இருந்து 120கிமீ தொலைவில் உள்ள izium நகரில் விழுந்துள்ளது.

கடுமையாக விமர்சிக்கப்படும் இரசியா

இரசியாவின் SU­-35 போர்விமானம் எதிரியின் ரடார்களுக்கு புலப்படமாட்டாது என இரசியர்கள் பறைசாற்றியிருந்தனர். அதனால் அதை உக்ரேனுக்குள் பறக்க விட்டு அங்குள்ள ரடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு முறைமைகளை அழிப்பது என்ற நோக்கத்துடன் உக்ரேனுக்குள் சென்ற போதே அது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரேனுக்குள் சென்ற இரசியப்படையினர் பல தாங்கிகளையும், உலங்கு வானூர்திகளையும் ஆளணியையும் இழந்து பல படைத்துறை நிபுணர்களின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற வேளையில் இரசியா தனது மிக உயர் தொழில்நுட்ப விமானத்தை இழந்திருப்பது அவர்களுக்கும் மேலும் அவமானகரமாக அமையும். இரசியாவின் வலிமை மிக்க Mi-28 உலங்கு வானூர்தி ஒன்று பிரித்தானியாவின் தோளில்காவும் ஏவுகணைச் செலுத்தியில் இருந்து உக்ரேனியர்கள் ஏவிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில நாட்களில் SU­-35 போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

சீனா தனக்கு பாடம் என்கின்றது

இரசியாவின் Su-35 சுட்டு வீழ்த்தப்பட்சதை செய்தியாக வெளியிட்ட சீனாவின் South China Morning Post ஊடகம் அது சீனாவிற்கு ஒரு பாடம் என்கின்றது. Su-35 விமானம் ஆபத்தான வகையில் தாழப் பறந்தமையே சுடப்பட்டமைக்கான காரணமாக அது தெரிவிக்கின்றது. SEAD என்னும் Suppression of Enemy Air Defence நடவடிக்கையில் ஈடுபட்ட போதே Su-35 சுட்டு விழ்த்தப்பட்டதாக பல்கேரிய ஊடகம் சொல்கின்றது. SEAD நடவடிக்கையின் போது விமானங்கள் எதிரியின் வான் பாதுகாப்பு முறைமை, தொடர்பாடல் முறைமை, கண்காணிப்பு முறைமை போன்றவை அழிக்கப்படும். 


உன் கைப்பிள்ளை உன்னையே சரித்தது

The Drive என்ற இணையத்தளம் இரசியா தனது புதிய 9K37BUK வான் பாதுகாப்பு முறைமையை உக்ரேனில் பாவிப்பதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனின் தென்பகுதியில் உள்ள Kherson நகரைக் கைப்பற்றுவதற்கு இரசியாவிற்கு வான் ஆதிக்கம் தேவைப்பட்ட போது 9K37BUK உக்ரேன் போர் முனையில் பயன்படுத்தப்பட்டது என்றது The Drive. Kyiv Independent என்னும் உக்ரேனிய ஊடகம் 2022 ஏப்ரல் 3-ம் திகதி உக்ரேனில் செயற்பட்டுக் கொண்டிருந்த இரசியாவின் 9K37BUK என்னும் வான் பாதுகாப்பு முறைமை ஒன்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனியர்கள் தமது சிறப்புப் படையணி ஒன்றை 9K37BUK ஐக் கைப்பற்ற அனுப்பினார்கள் என்றும் அது வெற்றிகரமாக தங்கள் பணியை முடித்தனர் என்றும் உக்ரேனியர்கள் தெரிவிக்கின்றனர். அதைக் கைப்பற்றிய பின்னர் அதி அழிக்க வந்த அழிக்க வந்த இரசியாவின் Su-35 ஐ உக்ரேனியர்கள் முந்திக் கொண்டு அழித்து விட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.

ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:

1. எல்லா வகையிலும் எதிரிக்கு புலப்படாமை

2. எதிரியால் இடைமறிக்கப்பட முடியாமை

3. உயர் செயற்பாடுடைய விமானக் கட்டமைப்பு (high-performance airframes)

4.  மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் பறப்பு அம்சங்கள் (advanced avionics features)

5. சிறந்த வலையமைப்புத் தொடர்பாடல் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணனித் தொகுதி (highly integrated computer systems capable of networking with other elements within the battlespace for situation awareness).

 

இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானப் பிரச்சனை.

ஒற்றை விமானி மூலம் இயக்கப்படும் Su-35 மணிக்கு 1500மைல்கள்(2400கிமீ) வேகத்தில் 2200மைல்கள் (3600கிமீ) தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கக் கூடியது. 2014-ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கும் Su-35 வானில் இருந்து வானிற்கும் வானில் இருந்து தரைக்கும் ஏவக் கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். ஐந்தாம் தலைமுறைப் போர் வானூர்திகளின் முக்கிய திறன் அவற்றை எதிரிகளின் ரடார்களால் கண்டறிய முடியாமையே. அதனால் அவற்றை Stealth (புலப்படா) என அழைப்பர். இரசியாவான் இன்னும் முழுமையான புலப்படாப் போர்வானுர்திகளை இரசியாவால் உருவாக்க முடியவில்லை. இரசியா தனியாக ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Sukhoi T 50ஐ உருவாக்குவதாகவும் இந்தியாவுடன் இணைந்து வேறு ஒரு வகை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதாககும் இரசியா முடிவு செய்தது. இருந்தும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கான இயந்திரத்தை உருவாக்குவதில் பின்னர் தாமதம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளில் இருந்து இயந்திரம் வாங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் எந்த ஒரு மேற்கு நாடும் தமது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரம் இரசியாவின் கைகளுக்குப் போவதை விரும்பவில்லை. இதனால் இரசிய இந்தியக் கூட்டு ஐந்தாம் தலைமுறைப் போர்வானூர்தி உருவாக்கும் திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. Su-35 முதற் பறப்பைச் செய்த போது அதை 4++தலைமுறைப் போர் விமானம் என்றே புட்டீன் அறிவித்தார். பின்பு இரசியா முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57ஐ உருவாக்கியது. அது இன்னும் போதிய எண்ணிக்கையில் உருவாக்கப்படவைல்லை. முன்மாதிரி விமானங்கள் தான் உருவாக்கப்பட்டன.

உக்ரேனியர்கள் பிரித்தானியாவின் தோளில் வைத்துச் செலுத்தப்படும் Starstreak missiles ஐப் பாவித்து இரசியாவின் Mi-28 உலங்கு வானூர்தி ஒன்றையும் 2022 ஏப்ரல் மாதத்தில் சுட்டு வீழ்த்தியமையும் இரசியாவிற்கு அவமானமாக அமைந்தது. இரசியாவின் போர் விமானங்கள் எப்போதும் excellent manoeuvrability and thrust vectoring engines கொண்டவை என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் வானில் வைத்து எதிரி விமானங்கள் மோதிக் கொள்ளும் நாய்ச் சண்டையில் (Dog fight) எப்போதும் இரசிய விமானிகளும் விமானங்களும் சிறப்பாக செயற்படும். உக்ரேனில் இரசியாவின் படைக்கலன்களுக்கு ஏற்படும் பின்னடைவு இரசியாவின் படைக்கல விற்பனையை பெருமளவில் பாதிக்கும் அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.

Tuesday 5 April 2022

உக்ரேன் போர் தாங்கிகளை செல்லுபடியற்றதாக்கிவிட்டதா?

 


உக்ரேனில் நடக்கும் போரில் பல தாங்கிகள் அழிக்கப்பட்டும் இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டும் இருப்பது நாளாந்தம் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உக்ரேனிற்கு தனது படையில் 120 Battalion Tactical Groupsஐ இரசியா நகர்த்தியுள்ளது. ஒரு பட்டாலியன் குழுவில் 10 தாங்கிகள் மற்றும் 30 கவச வண்டிகள் இருக்கும். மொத்தம்1200 தாங்கிகளையும் 3600 கவச வண்டிகளையும் இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. உக்ரேனிடம் 2,500 தாங்கிகள் உள்ளன. ஐரோப்பாவில் 5,000இற்கும் மேற்பட்ட போர்த்தாங்கிகள் உள்ளன. உலகெங்கும் மொத்தம் 54,000 உள்ளன. பெரிய துப்பாக்கி, துருப்புக்களுக்கு பாதுகாப்பு கடினமான நிலத்தில் பயணித்தல் போன்றவை தாங்கிகளின் முக்கிய அம்சங்களாகும். எதிரியின் காலாட் படைகளை எதிர்கொள்ள சிறந்தவையாக தாங்கிகள் கருதப்படுகின்றன. அவர்களின் காப்பரண்களை தாங்கிகளால் அழிக்க முடியும். எண்பது ஆண்டுகளாக காலாட் படையினரின் முக்கிய படைக்கலன்களாக இருந்த எழுபது தொன் எடை கொண்ட தாங்கிகள் உக்ரேன் போரின் போது செல்லுபடியற்றதாகிவிட்டனவா எனற கேள்விக்கு உள்ளாகியுள்ளன. இரசியப் படையினர் உக்ரேனினுடனான முதல் மூன்று வாரப் போரில் 270 தாங்கிகளை இழந்துள்ளனர். இவை தாங்கிகளின் நம்பகத்தன்மை குறித்து ஐயத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் மேலும் 326 தாங்கிகளை இழந்தனர். இதனால் தாங்கிகளை தோளில் வைத்து ஏவும் ஏவுகணைகளும் ஆளிலிவிமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளும் தாங்கிகளின் வலிமை மீது ஐயத்தை எழுப்பியுள்ளது.

தானூர்தி அணியும் (Motorised Unit) இயந்திரமய அணியும் (Mechanised Unit)

முதலில் போர்த்தாங்கிகளைப் பாவித்த நாடு பிரித்தானியா. 1916-ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவால் போர்த்தாங்கிகள் பாவிக்கப்பட்டன. தாங்கிகளை தரையில் நகரும் போர்க்கப்பல்கள் என பிரித்தானியவர் அப்போது விபரித்தனர். முதலில் அவற்றின் பாவனையைக் கைவிட்ட நாடு நெதர்லாந்து 2011இல் கைவிட்டது. பின்பு அது ஜெர்மனியிடமிருந்து குத்தகைக்கு 18 தாங்கிகளைப் பெற்றுள்ளது. சுடுதிறன், தப்புதிறன், நகரும் திறன், தகர்க்கும் திறன் ஆகியவை தாங்கிகளின் சிறப்பு அம்சங்களாகும். தானூர்தி அணி (Motorised Unit) பார ஊர்திகளால் நகர்த்தப்படுபவை. இயந்திரமய அணி (Mechanised Unit) கவச வண்டிகள் மூலம் நகரும் காலாட் படையணியாகும். கவச வண்டிகளின் மிகச் சிறந்த வடிவம் தாங்கிகளாகும். 2014-ம் ஆண்டு இரசியர்கள் தமது T-72 தாங்கிகளுடன் இலகுவாக உக்ரேனை ஆக்கிரமித்தனர். பெரும்பாலான தாங்கிகள் 120மிமீ குண்டுகளை வீச வல்லன. இரண்டாம் உலகப் போரில் விமானங்களை அழிக்கவும் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் Battle of Kursk

உலக வரலாற்றில் அதிக தாங்கிகள் இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை ஜெர்மனி ஆக்கிரமிக்க முயன்ற போது பயன்படுத்தப்பட்டன. 1943-ம் ஆண்டு இரசியாவின் Kursk நகரில் இரண்டு நாடுகளிடையே நடந்த போரில் ஆறாயிரம் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன. இரசியர்கள் ஜெர்மன் தாங்கிகளுக்கு அண்மையில் சென்று கண்ணி வெடிகள அவற்றின் சில்லுச் சங்கிலிகளின் இடையே வீசி அவற்றைச் செயலிழக்கச் செய்தனர். ஹிட்லரின் படையினர் Tiger, Panther, Ferdinand ஆகிய தாங்கிகளையும் இரசியர்கள் T-14 தாங்கிகளையும் பாவித்தனர். ஹிட்லரின் படையினரின் தாங்கிகள் வலிமை மிக்கனவாயும் பெரிய அளவிலான குண்டுகளை வீசக் கூடியவையாகவும் இருந்தன. வலிமை குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் இரசியர்கள் ஜெர்மனியரிலும் பார்க்க இரண்டு மடங்கு தாங்கிகளைப் பாவித்தனர். ஜெர்மனியர்களிடம் 1400 தாங்கிகளும் இரசியர்களிடம் 3600தாங்கிகளும் இருந்தன. இரசியர்கள் தங்கள் தாங்கிகளை நிலைத்தின் கீழ் மூடி வைத்து சுடு குழாயை மட்டும் வெளியில் தெரிய வைத்திருந்து ஜெர்மனியர்கள் அண்மையில் வரும்போது சுட்டுத்தள்ளினார்கள்.

தங்கிகளின் வலிமையற்ற தன்மைகள்

கரந்தடிப் படையினருக்கு எதிராக தாங்கிகள் முன்பு சிறப்பாக செயற்பட்டன. கரந்தடிப் படையினர் வலிமை மிக்க கண்ணிவடிகளால் செயலிழக்கச் செய்யப்படக் கூடியவை. ஈழ மண்ணிற்கு அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலைப்படையினர் கண்ணி வெடிகளைத் தவிர்ப்பதற்காக தெருக்களால் பயணிப்பதைத் தவிர்த்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டு பயணித்தன. ஒரு கட்டத்தில் அகப்படும் பொது மக்களை தாக்கி வீழ்த்தி விட்டு அவர்கள் மேல் தாங்கிகளைச் செலுத்திக் கொன்றன. ஈழப் போராளிகள் கண்ணி வெடிகளால் எதிரிகளின் தாங்கிகளைத் தகர்த்தனர். கைப்பற்றியும் உள்ளனர். ஆர்.பி.ஜீ என்னும் வீசு குண்டுகள் மூலமும் பழைய தாங்கிகளை அழிக்க முடியும். தாங்கிகளில் இருந்து வெளிவரும் உயர் வெப்பம் அவற்றை இனம்காண இலகுவானதாக இருக்கின்றது. அதனால் வெப்பத்தைத் தேடியழிக்கும் ஏவுகணைகள் (Heating seeking missiles) அவற்றை இலகுவாக அழிக்கின்றன.  அமெரிக்காவின் Javelin, பிரித்தானியாவின் NLAW ஆகிய தோளில் வைத்துச் செலுத்தப்படும் ஏவுகணைகளும் துருக்கியின் TB-2 Drones என்னும் ஆளிலிவிமானங்களில் இருந்து ஏவும் சிறிய ஏவுகணைகளும் இரசிய தாங்கிகளை வேட்டைக்காரன் பன்றைகளைச் சுடுவது போல் சுட்டு அழிக்கின்றன. அது மட்டுமல்ல அது பயணிக்கும் இடங்களில் தாங்கிகள் விட்டுச் செல்லும் தடயங்கள் அவற்றை இனம் காண உதவுகின்றன. அமெரிக்காவின் ஒரு தாங்கி பத்து மில்லியன் பெறுமதியானது. இரசியாவின் தாங்கிகளான T-14 Armata நான்கு மில்லியன் பெறுமதியானது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராக்கின் Fallujah மீட்புப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, ஈராக் ஆகிய நாடுகளின் படைகள் வெற்றி பெற்றமைக்கு அமெரிக்காவின் ஏப்ராம் தாங்கிகள் முக்கிய பங்கு வகித்தன.  ஆனாலும் அமெரிக்காவின் ஏப்ராம் (M1Abrams) தாங்கிகளையும் பிரட்லி (M2 Bradley) தாங்கிகளையும் நூறு டொலர் பெறுமதியான வெடிபொருட்களால் இஸ்லாமியப் போராளிகள் தகர்த்தனர். போரியல் நிபுணராகிய Michael Peck: Tanks may be the star player, but war is a team game. அமெரிக்காவின் Apache உலங்கு வானூர்திகள் தாங்கிகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவை. தாங்கிகள் அதிக அளவு எரிபொருளைப் பாவிப்பன. அவற்றிற்கு எரிபொருள் மீள்நிரப்ப எரிபொருள் தாங்கிகள் அவற்றைத் தொடந்து கொண்டிருக்க வேண்டும்.

பல நாடுகள் தாங்கிகளைக் கைவிடுவதிலும் பார்க்க அவற்றை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடுத்த தலைமுறை தாங்கிகளை உருவாக்குகின்றன. 1980களில் உருவாக்கிய தாங்கிகள் பெரிஸ்கோப்களை பாவித்தன. தற்போது தாங்கிகளில் 360பாகையும் சுற்றிப் பார்க்கக் கூடிய உணரிகள் உள்ளன. எதிர் காலத்தில் போர்த்தாங்கிகளில் இருந்து பறந்து செல்லும் சிறிய ஆளிலி வானூர்திகள் தாங்கிகளின் கண்களாக மூலை முடுக்கு மேடு பள்ளம் எல்லாம் மறைந்து இருக்கும் எதிரிகளை இனம் காணும். பெரிய காத்திரமான உருவம் கொண்ட தாங்கியுடன் செல்லும் படையினருக்கு மனவலிமை கிடைக்கின்றது என்பது உண்மை. அதே போல எதிரிக்கு அச்சத்தையும் கொடுக்கக் கூடியது. போரை விரும்பும் நாடுகள் மேலும் வலிமைப்படுத்தப் பட்ட இலத்திரனியல் போர் செய்யக் கூடிய புதிய தாங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இன்னும் பல பத்து ஆண்டுகளில் காலட்படையினரின் கவசமாக இருக்கும்.

இரசியாவின் மிகச் சிறந்த தாங்கியான T-14 Armata உக்ரேன் போரில் பயன்படுத்தப்படவில்லை. இரசியாவிடம் போதிய அளவு T-14 கையிருப்பில் இல்லை. 

Sunday 3 April 2022

உக்ரேனில் இரசியாவின் திணறல் சீனாவின் தைவான் கொள்கையை மாற்றுமா?

 


உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி என்றே சீனா சொல்கின்றது. உக்ரேனை ஒரு தனிநாடாக 180இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்ததுடன். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்களில் ஒரு நாடாக உறுப்புரிமை பெற்றுள்ளது. தைவான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. வத்திக்கான உட்பட 15 நாடுகள் மட்டும் தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. எந்த ஒரு நேட்டோ நாடும் தைவானை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பது பரவலாக எதிர் பார்க்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் போரை சீனாவும் தைவானும் உன்னிப்பாக கவனிக்கின்றன. இரசியா வேறு சீனா வேறு அது போலவே உக்ரேன் வேறு தைவான் வேறு. 

வளம் மிக்க சீனா

உக்ரேனில் ஒரு நீண்ட காலப் போர் செய்ய இரசியாவால் முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தைவான் மீது போர் தொடுத்தால் அது எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் சீனாவால் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவிடம் பல தரப்பட்ட புதிய படைக்கலன்கள் இருந்தாலும் அவை போதிய எண்ணிக்கையில் இல்லை. ஆனால் சீனாவிடம் தைவானுடன் போர் செய்யக் கூடிய அளவு படைக்கலன்கள் இருக்கின்றன. போர் என்று ஆரம்பித்தால் மேலும் படைக்கலன்களை குறுகிய கால எல்லைக்குள் உற்பத்தி செய்து குவிக்கும் வளங்கள் சீனாவிடம் உள்ளன.

இரசியாவின் நகர்விலும் பார்க்க சீன நகர்வு கடினமானது

உக்ரேனுக்கு இரசியா தரைவழியாக படைகளை நகர்த்தியது. ஆனால் சீனா தைவானிற்கு 160கிலோ மீட்டர் நீளக் கடலை தாண்ட வேண்டியுள்ளது. கடல் தாண்டி படைகளை கொண்டு போய் இறக்க முன்னரே கடலில் வைத்து ஒரு போரை தைவானால் தனித்தும் செய்ய முடியும். உக்ரேன் இரசியா மீது ஏவுகணைகளை வீசவில்லை. ஆனால் தைவான் சீனாவின் ஹொங் கொங் மற்றும் ஷங்காய் உட்பட பொருளாதார கேந்திரோபாய நிலைகளை தாக்குவதற்கு என தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேன் போரை  தைவானியர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று உக்ரேன் நாளை தைவான் என்ற தலைப்பில் பல கலந்துரையாடல்களை தைவானியர்கள் செய்து வருகின்றார்கள். சீனா தலையிடுமா? தைவான் தயாரா? அமெரிக்கா உதவி செய்யுமா? என்பவை பற்றிய விவாதங்களே தைவானில் பரவலாக அடிபடுகின்றது. தங்கள் தற்பாதுகாப்பிற்கு தற்சார்பு நிலை அவசியம் என்பதை தைவானியர்கள் உணர்ந்துள்ளனர். அமெரிக்காவை நம்பியிருக்காமல் தாம்மைத்தாமே பாதுகாக்க வேண்டும் என பல தைவானியர்கள் நினைக்கின்றார்கள். உக்ரேனிற்கு புட்டீன் படை அனுப்பியவுடன் தைவானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உக்ரேனியர்கள் தனியே இல்லை தைவானியர்கள் அவர்களுடன் நிற்கின்றார்கள் என்ற பதாகையும் காணப்பட்டது.

ஆழமறியாத இரசியா போல் ஆழமறியாத சீனாவா?

உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமித்தால் அது அமெரிக்காவின் கவனத்தை சிதறச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டுரைகள் மேற்கு நாட்டு ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா பகுதியாக ஆக்கிரமித்த பின்னர் உக்ரேனியர்களிடையே இரசிய குரோதத்தை அமெரிக்கா வளர்த்து வைத்துள்ளது என்பது இரசியப் படையினர் உக்ரேனுக்குள் சென்ற பின்னர்தான் இரசிய அதிபர் புட்டீன அறிந்து கொண்டார். இரசியப் படைகளை உக்ரேனியர்கள் வரவேற்பார்கள் என்று புட்டீன எதிர்பார்ந்திருந்ததாக மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன. இந்த ஏமாற்றத்தால் இரசிய உளவுத்துறையின் இயக்குனரையும் அவரது உதவியாளரையும் புட்டீன் வீட்டுக் காவலில் வைத்தார் என்று கூடச் சொல்லப்படுகின்றது. தைவானியர்களின் நிலைப்பாடு தொடர்பாக சீனா எந்த அளவு அறிந்து வைத்திருக்கின்றது?

உன்னிப்பாக அவதானிக்கும் சீனா

உக்ரேன் எல்லையில் இரசியப் படைகள் 2021-22இல் குவிக்கப்பட்ட போது சீனாவின் முன்னணி ஊடகங்களான Xinhua, CGTV, People’s Daily ஆகியவை மௌனமாகவே இருந்தன. ஆனால் உக்ரேன் போர் நிலவரங்களை சீனா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. இரசியப் படைகள் உக்ரேனில் இருந்து தோல்வியடைந்து வெளியேறினால் அது இரசியப் பாதுகாப்பு மற்றும் கேந்திரோபாய நலன்களைப் பொறுத்தவரை பாதிக்கிணறு தாண்டியது போலாகும். இரசியா இலகுவில் உக்ரேனில் இருந்து வெளியேற மாட்டாது. அல்லது ஏதாவது ஒரு போலி வெற்றியைச் சொல்லிக் கொண்டு இரசியா அங்கிருந்து வெளியேறலாம். அது இன்னும் சில வாரங்களில் இரசியா செய்ய வேண்டும். இரண்டும் தைவான் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் சீனாவை ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வைக்கும். வலிமை மிக்க காத்திரமான தயாரிப்பை செய்த பின்னரே சீனா தைவானை ஆக்கிரமிக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.

உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்த மேற்கு

அமெரிக்கா உட்பட எல்லா மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்துள்ளன. தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதே நிலைப்பாடு இருக்குமா? தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை வலியுறுத்தி அங்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லந்து ஆகிய நாடுகள் தம் கடற்படையை அனுப்பியதுடன் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை நடத்தின. அமெரிக்காவின் நேட்டோ பங்காளிகளின் உக்ரேன் தொடர்பான நிலைப்பாட்டிலும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டில் தைவான் தொடர்பாக ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் எடுத்துள்ளன. இருபத்தியாறு துறைமுகங்களைக் கொண்ட தைவான் தீவை சீனா கைப்பற்றுவது பசுபிக் பிராந்தியத்தில் வலிமை மிக்க ஒரு கடற்படையை சீனா உருவாக்கி அதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஜப்பான் தைவானை சீனா கைப்பற்ற முயன்றால் அதன் மீது தாக்குதல் செய்வதற்கு தயாராக தைவானிற்கு அண்மையாக உள்ள தீவுகளில் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தனது கடற்படையையும் வலிமைப் படுத்தியதுடன் தனது துறைமுகங்களை ஒஸ்ரேலியா பாவிப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இரசியர்களுக்கு இருக்கும் போர் முனை அனுபவம் சீனர்களுக்கு இல்லை என்பதையும் சீனா நன்கறியும். இரசியாவை சுற்றி வர உள்ள அமெரிக்கப் படைத்தளங்களிலும் பார்க்க வலிமை மிக்க படைத்தளங்கள் சீனாவை சுற்றி வர அமெரிக்கா வைத்திருக்கின்றது. நீண்ட காலப் போரில் ஈடுபடும் தைவானால் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதில் சீனாவிற்கு தான் பெருமளவு பாதிப்பு இருக்கும். உக்ரேன் மீது இரசியா படையெடுத்தவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் முன்னள் படைத்துறை அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் தைவானுக்கு அனுப்பி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்படுத்தும் அழிவைப் போல் சீனாவிற்கு எதிரான போர் உருவக்க மாட்டாது.

வ்உக்ரேனில் இரசியாவுடன் நேரடி மோதலை அமெரிக்கா தவிர்த்துக் கொண்டிருப்பது. தைவானைக் கைப்பற்ற முயற்ச்சிக்கும் சீனாவுடன் நேரடி மோதலை செய்வதற்காகவா என்பதை சீனா சிந்திக்கும். சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உக்ரேனின் அனுபவத்தை வைத்து மீள் பரிசீலனை செய்து பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையை உக்ரேனியர்களின் உறுதிப்பாடும் இரசியாவின் திட்டமிடல் தவறுகளும் ஏற்படுத்தியுள்ளன. பல பாடங்களை போர் அனுபவமில்லாத சீனா கற்றுக் கொள்ல வேண்டியிருக்கும். சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியா இணைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் நாளை தள்ளிப்போடும். அந்தக் கால இடைவெளியில் தைவானியர்களும் உக்ரேனிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...