Followers

Showing posts with label இணையவெளிப்போர். Show all posts
Showing posts with label இணையவெளிப்போர். Show all posts

Monday, 14 March 2022

இரசிய – உக்ரேனிய இணையவெளிப் போர்

 


இணையவெளிப் போர் வல்லரசுகளாக இஸ்ரேல், அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கருதப்படுகின்றன. வட கொரியா மற்றும் ஈரானிடம் வலிமை மிக்க இணையவெளிப் படைப்பிரிவுகள் உள்ளன. கணினிகளுக்குள் தீங்குநிரல்(Malware) புகுத்துதல். கணினிச்சேவை நிறுத்தம், தரவு அழித்தல், தரவு திருடுதல், தரவுகளைப் பணயக் கைதிகள் போலாக்கி பணம் பறித்தல், இரு கணினிகள் அல்லது கணினித் தொகுதிகளிடையே இருந்து அவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாடலைத் துண்டித்தல், திசைமாற்றல் அல்லது திரிபுபடுத்தல் எனப் பலவகையான இணைய வெளித் தாக்குதல்கள் உள்ளன. பிரித்தானியாவின் Lloyds Insurance நிறுவனம் சராசரியாக ஓர் இணையவெளித் தாக்குதலால $54 மில்லியன் இழப்பீடு ஏற்படுகின்றது என மதிப்பிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை இரசியா ஆக்கிரமிக்க முன்னரும் 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்க முன்னரும் இரு நாடுகள் மீதும் கடுமையான இணைய்வெளித் தாக்குதல்கள் நடந்தன. ஜோர்ஜியாவில் பல கணினித் தொகுதிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அவற்றில் நாடாளுமன்றம், வெளியுறவுத்துறை அமைச்சு, பல ஊடகங்கள், தனியார் நிறுவனங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டு இரசியப் படைகள் உக்ரேனிய அரச மற்றும் மின்சார வழங்கல் கணினிகள் மீது இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டன. 2022 ஜனவரி 10,13, 14-ம் திகதிகளில் உக்ரேனிய அரசுக்கு சொந்தமான கணினித் தொகுதிகளில் இணையவெளியூடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2022 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து இரசியாவில் பல் வேறுபட்ட கணினித் தொகுதிகளில் தாக்குதல்கள் நடக்கின்றன. உக்ரேனில் இணையச் சேவை வழங்குனர் (Internet Service Producer) Triolan மீது இரு தடவை தாக்குதல் நடத்தப்பட்டது. SpaceXஇன் நிறுவனர் Elon Musk தனது செய்மதி மூலமான Starlink என்னும் இணையச் சேவையை உக்ரேன் மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றார்.

உக்ரேனின் தொடருந்து சேவை மீது தாக்குதல்

புட்டீனின் ஆக்கிரமிப்புப் போரால் அயல் நாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களைத் தடுப்பதற்காக உக்ரேனின் தொடருந்து சேவையின் கணினித் தொகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு போரில் பல இணையவெளித் தாக்குதல் குழுக்களுக்கும் இரசிய ஆட்சியாளர்களுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்டுத்தப்பட்டுள்ளது என்கின்றது. அது இரசியாவை Cyber Gangland என விபரித்துள்ளது. உக்ரேன் மீது செய்யப்படும் தாக்குதலால் இரசியாவின் இணையவெளித் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி அமெரிக்கா அறிந்து கொண்டிருக்கின்றது.

இரசிய தொலைக்காட்சிச் சேவைகள் மீது தாக்குதல்

இரசிய கணினித் தொகுதிகள் மீது Distributed Denial of Service (DDoS) பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல கணினித் தொகுதிகள் மூலம் எதிரியின் கணினிக்கு அளவிற்கு அதிகமான தரவுகளைச் செலுத்துவது Distri.uted Denial of Service எனப்படும். அவை மட்டுமல்ல பல ஊடுருவல்களும் செய்யப்பட்டன. 2022 மார்ச் இரண்டாம் வாரம் Russia 24, Channel One, Moscow24 ஆகிய தொலைக்காட்சி சேவைகளை ஊடுருவியவர்கள் உக்ரேனில் நடக்கும் கொடுமைகளை இரசிய மக்களுக்கு ஒளிபரப்பினர். உக்ரேனில் நடக்குப் போர் தொடர்பாக இரசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை இரசிய அரசு விதித்துள்ளது. அவற்றில் இரசிய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற வேண்டு கோள்களும் விடுக்கப்பட்டன. இரசியாவின் விண்வெளி முகவரகம் மூடப்படும் அளவிற்கு அதன் மீது இணையவெளித்தாக்குதல் செய்யப்பட்டன. இதனால் இரசியா செய்மதி மூலம் உளவு திரட்டுதல் பாதிக்கப் பட்டுள்ளது. இரசியாவின் வலைத்தளம் ஒன்றில் தாக்குதல் செய்து அதில் உள்ளவற்றை அகற்றி விட்டு அங்கு போரில் கொல்லப்பட்டவரகளின் கல்லறைகளின் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இரசியா மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இணையவெளித் தாக்குதலைச் சமாளிக்க சீனாவின் Huawei நிறுவனத்தின் சேவையை இரசியா அவசரமாகப் பெற்றுள்ளது. இரசியாவின் செய்தி தணிக்கைப் பணிமனை மீது தாக்குதல் செய்யப்பட்டு அங்குள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்திகளைக் கொண்ட 340,000 கோப்புக்களை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோப்புக்கள் இரசியானின் Bashkortostan மாநிலத்துடன் தொடர்புபட்டன.

அமெரிக்காவும் பங்கு பெறுகின்றதா?

இரசியாவிற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்ற ஐயம் உண்டு. அமெரிக்க ஒரு இணையவெளிக் கட்டளைப் பணியகம் ஒன்றை 2018இல் உருவாக்கியுள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திருடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப் படைப்பிரிவினர் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சி, ஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள  Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும்.  ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.  அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுகளை செயற்பட வைக்க முடியும்.

எங்காவது போர் நடந்தால் அங்கு தனது படையினரை இஸ்ரேஸ் அனுப்ப முயற்ச்சிக்கும். உதவி என்னும் போர்வையில் நேரடி களமுனை அனுபவத்தை தனது படையினருக்கு வழங்குவதே இஸ்ரேலின் நோக்கம். உக்ரேன் – இரசிய இணைய வெளிப்போரிலும் அது நடக்கலாம்.

எதிர்காலப் போரில் முதலில் களமிறங்கும் அணி இணைவெளிப் படைப்பிரிவாகத்தான் இருக்கும்.

Tuesday, 30 November 2021

அப்பாவிகள் பாதிக்கப்படும் ஈரான் – இஸ்ரேல் இணையவெளிப் போர்

 


போர் என்றால் அப்பாவிகள் கொல்லப்படத்தான் செய்வார்கள் எனச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். Rt Rev Dr Rowan Williams என்னும் திருநாமம் கொண்ட ஆர்ச் பிஷப் ஒஃப் கண்டபரி (Archbishop of Canterbury) இங்கிலாந்து தேவாலயத்தின்(Church of England) அதி உயர் ஆண்டகையாக இருந்தவர். 2007ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த Archbishop of Canterbury Rt Rev Dr Rowan Williams அவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரன சிங்களப் படை நவடிக்கைகளைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்:

  • "It is undoubtedly inevitable that what you might call surgical military action against terrorism should take place",

Archbishop Williams said in reports filed by TamilNet and the BBC Sinhala service on May 11, 2007. அவரது கருத்துப்படி சிங்களவர்களின் படை நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்று. அது சந்தேகத்திற்கு இடமின்றி தவிர்க்க முடியாத ஒரு சத்திர சிகிச்சை. இதைக் கடுமையாக எதிர்த்து ஒரு சிங்கள ஆங்கிலிக்கன் கிருத்தவர் Rt Rev Dr Rowan Williamsஅவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் முக்கியமான அம்சம்:

What your irresponsible comments have done are to :-

1. Encourage even greater violation of the human rights of the Tamil civilian population by the Sri Lankan Armed Forces.

2. Give invaluable support to Sinhalese ethno-religious chauvinists who are determined to make multi-ethnic, multireligious, multilingual and multicultural Sri Lanka into a Sinhala-Buddhist nation. Today, these extremist elements in Colombo are celebrating your comment – an indication of the damage that has been done by a flippant remark.

3. Strengthen the stance of President Rajapakse and his brothers to establish a fascist dictatorship and embark on a genocidal massacre of the Tamils in the North-East. The photograph of Rajapakse greeting you has been circulated all over the world, enhancing his flagging international image and decreasing yours.

4. Make Tamil civilians in the North-East, who are being brutalised by the current murderous regime, feel that their suffering is of no concern to you, and that what is being done to them is inevitable ‘surgical military action” which “should take place”.

இது இங்கிலாந்து திருச்சபையும் தமிழர்களின் முதுகில் குத்தியது என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

பலவகைப் போர்கள்

விடுதலைப் போர், சுதர்ந்திரப் போர், அறப்போர், ஆக்கிரமிப்பு போர், பயணப் போர், தாக்குதல் போர், தற்பாதுகாப்புப் போர், கரந்தடிப் போர், விடுவிப்புப் போர், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஈடற்ற போர், தரைப்போர், வான் போர், கடற்போர், விண்வெளிப்போர், நிலகீழ்ப்போர், சாம்பல் வலயப் போர், மதப்போர், நிகராளிப்போர், இணையவெளிப்போர் எனப் போரில் பல வகைகளுண்டு.

ஆனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடக்கும் போரில் நிகராளிப் போரும் இணையவெளிப்போரும் முக்கியமானவை. ஒரு தரப்பு மற்றத் தரப்பிற்கு எதிராக முன்றாம் தரப்புகளுடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும். ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு, ஹிஸ்புல்லா அமைப்பு ஆகியவற்றினூடாக தாக்குதல் செய்வது நிகராளிப் போராகும்.

ஒரு கணினியில் அல்லது கணினித் தொகுதியில் இருந்து இன்னொரு கணினி அல்லது கணினித் தொகுதிகளுக்குள் இலத்திரனியல் மூலமாக நுழைந்து தகவல்களைத் திருடுதல், தகவல்களை அழித்தல் இணையவெளி ஊடுருவல் என அழைக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட ஊடுருவல் மூலம் ஒரு கணினியை அல்லது கணினித் தொகுதியை செயற்படாமல் செய்வது இணையவெளித் தாக்குதல் எனப்படும். இவையிரண்டையும் இணையவெளிப் போருக்குள் அடங்கும்.

ஈரான் மீது பலவகையான இணையவெளித் தாக்குதல்களை இஸ்ரேல் செய்து வருகின்றது. அவற்றில் மிகவும் பிரபலமானது Stuxnet என்னும் வைரஸ் மூலம் ஈரானிய யூரேனியம் பதப்படுத்தல் மீது அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செய்த தாக்குதலாகும். அது பற்றிய விபரங்களை இந்த இணைப்பில் காணலாம்.

https://www.veltharma.com/2012/06/blog-post_05.html

கமெய்னி எரிபொருள் எங்கே?

2021 ஒக்டோபர் மாத இறுதியில் ஈரானின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள கொடுப்பனவு முறைமைகள் (payment systems) மீது இஸ்ரேல் செய்ததாகக் கருதப்படும் இணையவெளித் தாக்குதலில் மூலம் சேதப்படுத்தப் பட்டது என்ற செய்தியை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நவம்பர் 27-ம் திகதி அம்பலப்படுத்தினர்.. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல ஈரானில் உள்ள இலத்திரனியல் அறிவிப்புப் பதாகைகளில் கமெய்னி எரிபொருள் எங்கே எனக் கேட்கும் வாசகங்கள் இலத்திரனியல் ஊடுருவல் மூலம் பதிவு செய்யப்பட்டும் உள்ளது. பாதிக்கப்பட்ட 4,300 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கொடுப்பனவு முறைமையை மீளச் செயற்பட வைக்க 12 நாட்கள் எடுத்தன. இந்தத் தாக்குதல் ஈரானில் உள்ளவர்களின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய கணினித்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ஈரானின் ஒரு தாக்குதலுக்கு பதிலடியாகச் செய்யப்பட்டது. ஈரானில் இருந்து இஸ்ரேலின் தன்னினச் சேர்க்கையாளர்களின் இணையத்தை ஊடுருவி பெற்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. பலரது பாலியல் தொடர்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல இஸ்ரேலியப் பிரபலங்கள் சங்கடத்திற்கு உள்ளாகினர்.

இஸ்ரேலின் தாக்குதலால் விரக்தியடைந்த ஈரானியர்கள் சிரியாவின் Homs மாகாணத்தில் உள்ள Al Tanf இல் இருக்கும் 200 படையினரைக் கொண்ட அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தினர் என அமெரிக்கா அறிவித்தது

2021 ஏப்ரல் மாதம் ஈரானின் தொடருந்து சேவை நிலையங்களில் தொடருந்துகள் வரும் நேரம் அறிவிக்கும் இலத்திரனியல் பதாகைகளில் தாமதம், இரத்து, போன்ற வாசகங்களை பதிவேற்றி பயணிகளையும் தொடருந்து சேவைகளையும் குழப்பி ஈரானிய மக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. சில அறிவிப்புக்களில் கமெய்னிக்கு அழைப்பு விடுக்கவும் எனவும் பதிவுகள் மாற்றப்பட்டன.

2021-ம் ஆண்டு ஈரானிய யூரேனியப் பதப்படுத்தலில் மின்வெட்டு, ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் தீவிபத்து எனவும் இணைய வெளித்தாக்குதல் மூலம் நடந்தன.

இஸ்ரேலிலி இருந்து செய்யப்படுவதாக கருதப்படும் இணையவெளித் தாக்குதல்கள் ஈரானிய சிறைச்சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. அங்குள்ள கணினித் தொகுதிகளில் செய்யப் பட்ட ஊடுருவல்களால் பல சிறைக்கைதிகளின் தகவல்கள் மாற்றப்பட்டதால் கைதிகள் மீது அட்டூழியங்கள் நடந்தன.

2019-ம் ஆண்டு ஈரானில் இருந்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கணினித் தொகுதிகளில் செய்யப்பட்ட தாக்குதல்களால் பல நூறு மில்லியன் டொலர்கள் இழப்பீடு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தக் கூடிய இணைய வெளித்தாக்குதல்கள் தாற்போது அதிகரித்துச் செல்கின்றன என்பதை இஸ்ரேலும் ஈரானும் ஒன்றின் மீது ஒன்று செய்யும் தாக்குதல்கள் உறுதி செய்கின்றன.

இரசியாவினுள் உக்ரேனின் ஊடறுப்பும் ஊடுருவலும்

இரசியாவை ஆக்கிரமித்த அந்நியப் படையினர் அழிவைச் சந்திப்பார்கள் என்பது வரலாறு உலகிற்கு உரத்துச் சொல்லும் செய்தியாகும். இருந்தும் 2024 ஓகஸ்ட் ம...