Followers

Monday 30 January 2023

ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலைமீது தாக்குதல்

 


ஈரானின் Isfahan நகரில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது ஆளிலிகள் மூலம் 2023 ஜனவரி 28-ம் திகதி தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. ஈரானி ஷஹாப் நடுத்தர தூர ஏவுகணைகள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றால் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ய முடியும். இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்கா இரசியா ஈரானிடமிருந்து பல ஆளிலிகளை வாங்குவதாகவும் பல ஏவுகணைகளை வாங்கவிருப்பதாகவும் அறிவித்திருந்தது.   அமெரிக்க அதிகாரிகள் ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையம் மீதான தாக்குதல் இஸ்ரேலின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. ஆனால் இத்தாக்குதலுக்கும் ஈரான் இரசியாவிற்கு ஏவுகணைகள் வழங்குவதற்கும் தொடர்பில்லை என அமெரிக்கா சொல்கின்றது.

Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து Juniper Oak 23 என்னும் போர்ப்பயிற்ச்சியை 2023 ஜனவரி 23-ம் திகதி செய்திருந்தன. இப் போர்ப்பயிற்ச்சி ஒர் இணைந்த எல்லாத்தள (Combined Joint All-Domain) போர்ப்பயிற்ச்சி என அமெரிக்க நடுவண் கட்டளையகம் அறிவித்திருந்தது. தரை, வான், கடல், விண்வெளி, இணையவெளி ஆகியவற்றில் படையினரின் செயற்பாட்டை ஒருங்கிணைத்துச் செய்வதே எல்லாத்தள (All-Domain) நடவடிக்கயாகும். இப்பயிற்ச்சி மேற்காசியாவில் அமெரிக்காவினது ஈடுபாட்டை கோடிட்டுக் காட்டுகின்றது என்றது அமெரிக்க அரசு. இப்போர்ப்பயிற்ச்சி எந்த ஒரு தனிப்பட்ட நாட்டை இலக்கு வைத்துச் செய்யப்படவில்லை என்றும் அதேவேளை ஈரான் போன்ற எதிரி நாடுகளைக் கருத்தில் கொண்டு செய்யப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. 6,400 அமெரிக்கப்படையினரும் 1,100 இஸ்ரேலியப்படையினரும் 100 அமெரிக்க விமானங்களுடனும் 42 இஸ்ரேலிய விமானங்களுடனும் இப்போர்ப்பயிற்ச்சி நடந்தது. அமெரிக்காவின் நான்கு B-52 குண்டு வீச்சு விமானங்கள், நான்கு F35 போர் விமானங்கள், பதினெட்டு F/A-18 விமானங்கள், இரண்டு MQ1-9 Reaper ஆளிலிகள் ஒரு விமானம் தாங்கி கப்பல் உட்பட ஆறு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் என ஒரு வலிமை மிக்க படையணி இஸ்ரேலுடன் இணைந்து செய்திருந்தது. இஸ்ரேலின் F-35-I, F-15, F-16 ஆகிய போர் விமானங்களும்  G550 கண்காணிப்பு வானூர்திகளும் B770 என்னும் வானில் எரிபொருள் மீள் நிரப்பு விமானங்களும் பங்கு பற்றி Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி செய்திருந்தன. ஒரு சில மாதங்களுக்குள் பாரிய போர்ப்பயிற்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கப் படைத்துறையினர் மார்தட்டிக் கொள்கின்றனர். இஸ்ரேலின் ஆறு கடற்படைக் கப்பல்களும் ஈடுபட்டிருந்தன.

ஈரானுக்கு Juniper Oak 23 போர்ப்பயிற்ச்சி மூலம் ஒரு மிரட்டல் விடுத்த பின்னர்தான் ஈரானின் Isfahan நகரில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் செய்யப்பட்டதா என எண்னத் தோன்றுகின்றது.

ஈரான் சொல்வது வேறு

Isfahan நகர் மீது செய்யப்பட்ட தாக்குதலை ஈரான் ஒரு வேலைநிலையம் (Workshop) மீது சில ஆளிலிகள் செய்த தாக்குதல் என்றும் அதில் ஈடுபட்ட ஒரு ஆளிலியை தமது வான்பாதுகாப்பு முறைமை அழித்து விட்டதாகவும் மற்ற இரண்டு தமது பாதுகாப்புப் பொறிக்கு சிக்குண்டு வெடித்துச் சிதறியாதகவும் அறிவித்துள்ளது. வேலைநிலையத்தின் (Workshop) கூரை மீது சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் சொல்கின்றது.

சுலைமானியின் கொலைக்கு பழிவாங்க முடியாத ஈரான்

ஈரானைப் பொறுத்தவரை ஒரு பெரும் படைத்துறைச் சொத்தாக கருதப்பட்ட அதன் படைத்தளபதியை காசெம் சுலேமானியை அமெரிக்கா 2020 ஜனவரியில் குண்டு வீசிக் கொன்றிருந்தது. இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையான குட்ஸ் படையின் கட்டளைத்தளபதி சுலேமானீ 600 அமெரிக்கர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டமைக்கு காரணமானவர்; லெபனானில் ஹிஸ்புல்லாவை வளர்த்தவர். ஈரானால் Isfahan நகர் தாக்குதலுக்கு பழிவாங்க முடியுமா?

No comments:

Post a Comment

இந்திய சீன உறவு மேலும் மோசமாகுமா?

  இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வர்த்தக மற்றும் அரசுறவியல் உறவு மிக நீண்ட காலமாக இருக்கின்றது. 1954-ம் ஆண்டு ஒக்டோபரில் இந்தியத் தலைமை அமைச்...